கார்காலம், மழை பொய்த்தால்
காத்திருக்கும் மாக்களே
பெண், சிசு பொய்த்தால்
வஞ்சிப்பது பேதைமையன்றோ !!!

நற்பண்பை தறி கொண்டு உரு செய்தால்
கற்போடு உதிப்பவள் பாவையன்றோ;
அவள் உணர்வில் பிழை காணும்
கணவர்கள் கயவர்களன்றோ !!!

sadlady

இறைவனை சாட்சியாக்கி இணைந்த நம் உள்ளம்
குழந்தை இல்லாமையை காட்சியாக்கி பிரிவது;
காத்திருப்பை காரணம் காட்டி
இறைவனின் தரிசனம் இழப்பது போலல்லவா !

இன்பதுன்பமாய் இரவுபகலாய்
எதிலும் பங்கு கொள்ளவே
வேலியாய் தாலி கொண்டேன்
உன்னுடல் பாதி கொண்டேன்

சிசுவை சுமக்கும் கடமைகொண்டதால்
எனை மட்டும் ஏளனம் கொண்டாயோ
இல்லை,
என்னையே காரணமாய் கண்டாயோ ?

Young Couple Relaxing on Park Bench

என் தாய் எனை கொஞ்சிய பொழுதுகளை
என் சேயோடு நான் பாட காத்திருக்கிறேன்

எந்தை என்னோடு விளையாடி காலங்களை
உன்னோடு நம் சேய் களிக்க காத்திருக்கிறேன்

பிஞ்சிக் கைகளை முத்தம் கொடுக்க
குட்டிக் கால்களை தொட்டு பார்க்க
ஆசைகள் ஆயிரம் இருந்தாலும்
மாற்றான் சேயாதலால் மாற்று குறைந்தவள் நானல்லவா !!!

childhand

என்னுள் என் சேய் உருள்வதை உணரும் நன்னாள்
எந்நாள் என இந்நாள் வரையில் என்னால் இயன்றவரை
இறைவனை பிராத்திக்கிறேன் !!!

 

தீராத நட்புடன்
பூபால அருண் குமரன் ரா