வந்தாள் பதுமை புதுமையை தந்திட

தேர்மேல் தேவதை போகியை கொண்டாட

துன்பங்கள் எரிந்தது பழையன போல

இன்பங்கள் புகுந்தது புதியன போல

என்றும் என்றேன்றும்

வாழ்வு சிறக்க வாழ்க வளமுடன்

அன்பு மகளே !!!

வலிகள் ஜீரணித்து வேதனை மறைத்து

அண்டத்தில் அன்புக்கு அடைக்கலம் கொடுத்து

பிண்டத்தை அண்டத்தில் உயிரோலியாய் அளித்து

முதலாம் மூன்றில் உணவை மறந்து

இரண்டாம் மூன்றில் தூக்கம் விடுத்து

மூன்றாம் மூன்றில் தன்னுடல் வருத்தி

இறுதியில் உயிரையே வலியாய் கொண்டு

முதலாம் மூச்சுக்கு வழிவகை செய்து

தேவதையை வரவேற்ற

தியாகமே!! தெய்வமே!! பெண்ணியமே!!

அன்பு மனைவியே !!

வாழ்க வளமுடன்…