தொடர்ந்து இரு மொட்டைகள் போட்டதை நினைவுகூறும் வகையில் மொட்டை தலையுடன் இந்த பதிவை எழுதுகிறேன்.

1. பழனி ஆண்டவனுக்கு. (ஏப்ரல் 14, 2012)

மொட்டை போட்டபின் மொத்த படியையும் நடந்தே கடந்து சென்றோம் நானும் என் நண்பன் தங்கபாண்டியனும். எல்லா படியையும் கடந்து “அப்பாடா முடிஞ்சிபோச்சிடா” என்று புலம்பியபடி போய் உக்கார்ந்ததை நண்பன் உலகத்துக்கு காட்ட எடுத்தது தான் இது. அப்புறம் இவன்தான் தங்கபாண்டியன்.

WiNnY-0062ThangaPandi

பழனி ஆண்டவரின் ராஜஅலங்காரத்தை பார்த்த கையோடு இருவரும் எடுத்துகொண்ட புகைப்படங்கள்…

WiNnY-0069

WiNnY-0068

( கையில் இருப்பது பஞ்சாமிர்தம் , யாருக்காவது வேணுமா , ஹி ஹி ஹி… )

WiNnY-0078WiNnY-0079

அடுத்து,

2. திருப்பதி ஏழுமலையானுக்கு. (செப்டம்பர் 8 – 9, 2012)

செப்டம்பர் 8”ம் தேதி மதியம் ஒரு மணிக்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து கிளம்பி 10”ம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கே வந்தடைந்தேன்.

நானும் என் நண்பர்கள் நால்வரும் சென்றோம். கீழ் திருப்பதி சென்றடையவும் பவர் இன்று மொபைல் மயக்கமானது. ஆகவே ஒரு போட்டோ கூட எடுக்க முடியவில்லை.

நாலாயிரம் படிகளை பாதங்களால் 3:30 மணி நேரத்தில் கடந்து சென்று, முடியை காணிக்கையாக்கிட டோக்கன் வாங்க வேண்டும், ஆனவே டோக்கன் வாங்க 4:00 மணி நேரம். முடிக்கு முழுக்கு போட ஒரு மணி நேரம்.

வெங்கடேஷ்வரரை காண காத்திருப்பு 7 மணி நேரம். எல்லாம் முடித்து லட்டு வாங்க ஒரு மணி நேரம்…

பின்பு,

பாபநாசம் சென்று அங்கே ஒரு ஸ்டுடியோவில் ஒரு புகைப்படம். பின்பு ஊருக்கு திரும்பும் படலம்…

Boobalan,Rajesh VR,Yathursan,Rajesh M

போட்டோவில் இருப்பது பூபாலன், ராஜேஷ் VR, யதுர்சன், ராஜேஷ் M.

This work is licensed under a Creative Commons license.