ஓவியம் தீட்டிய
தூரிகை
அவள் புன்னகை !
காவியம் கூறும்
கவிதை
அவள் பார்வை !
அவள் சுவடுகள் பதித்து சென்றது
பாதையில் இல்லை
என் மனதில் !
ஒரே ஒரு பார்வை
எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் !
வெறும் கண்ணசைவுக்கு
கலவரப்படுத்தும் சக்தி !
இத்தனை நடந்தும்
பார்வைக்காக
பாதம் தொடரும் நான்…
தீராத நட்புடன்
பூபால அருண் குமரன்.ரா
Leave a Reply