ஓவியம் தீட்டிய

தூரிகை

அவள் புன்னகை !

காவியம் கூறும்

கவிதை

அவள் பார்வை !

அவள் சுவடுகள் பதித்து சென்றது

பாதையில் இல்லை

என் மனதில் !

ஒரே ஒரு பார்வை

எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் !

வெறும் கண்ணசைவுக்கு

கலவரப்படுத்தும் சக்தி !

இத்தனை நடந்தும்

பார்வைக்காக

பாதம் தொடரும் நான்…

தீராத நட்புடன்

பூபால அருண் குமரன்.ரா

This work is licensed under a Creative Commons license.