சென்னையில் வசிக்கும் நண்பர்கள் சந்தித்து பலநாள் ஆகிய நிலையில் 8-5-2011 அன்று சந்திக்கலாம் என் முடிவெடுத்தோம்.

சென்னையில் வசிக்கும் அனைத்து நண்பர்களையும் அழைக்கலாம் என்று அனைவருக்கும் செய்திகளை பரப்ப தொடங்கினோம்.

நான் முதலில் நிருபனிடம் கேட்டேன். அவன் சரி என்றதும், பிரவீன் மற்றும் சண்முகசுந்தரதிடம் பேசிவிட்டு சொல்வதாக சொல்லி அவர்களிடமும் சம்மதம் பெற்றதும், சந்திப்பு உறுதியானது.

நண்பன் சண்முகசுந்தரம் ஏனைய நண்பர்களான மோகன், வெங்கடேஷ், சண்முகநாதன் ஆகியோரிடம் சம்மதம் வாங்கினான். பின்பு இதயகுமார் அவர்களிடம் தோழன் பிரவீன் சம்மதம் வாங்க அலைபேசியில் அழைத்த போது அங்கே நடந்த உரையாடல் :

பிரவீன் :: ஹலோ , துபாயா என் தம்பி மார்க் இருக்கானா ?

இதயகுமார் :: நான் இதயமார்க் தான் பேசுறேன்.

பிரவீன் :: ஓ. நீ தான் பேசுறியா ? நம்ம நண்பர்கள் எல்லாரும் மீட் பண்றோம். நீ வரியா இந்தியாவுக்கு?

இதயகுமார் :: “இல்ல பிரேவ்ஸ், இங்க ஒரே பிரச்சனை. போன எடுத்தா நச்சு நச்சுன்னுரானுங்க, ஏதோ பொண்ணுக்கு கல்யாணமாம். அத MLA”வாலே சாதிக்க முடியலாம். என்ன சாதிக்க சொல்றானுங்க. அட இது பரவாயில்ல சோசியல் மேட்டர் பண்ணிக்கலாம். டைவர்ஸ் கேஸ்’லாம் என்கிட்ட வருதுப்பா. நான் என்ன கோர்ட்டா இல்ல வக்கீலா ? ஒரே குஷ்டமப்பா?

பிரவீன் :: குஷ்டமா ?

இதயகுமார் :: இது, கஷ்ட்டமப்பா…

பிரவீன் :: “போதும்டா சாமீ, ரீல் அந்து ஒரு வாரம் ஆச்சு…

இதயகுமார் :: ஹி.. ஹி.. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.

பிரவீன் :: ஓகே, அப்படின்னா நாங்க …………..

இப்படியாக இதயமார்க் தான் வர முடியாத காரணத்தை விவரிக்க அலைபேசியில் காசு இல்லாத காரணத்தால் தொடர்பு துண்டானது.

நான் கேசவனுக்கும் பரமலிங்கத்துக்கும் விபரங்களை கூறினேன். கொய்யால ரெண்டு பேரும் கோடைன்னு சொல்லி ஊருல கொடைன்னு கிளம்பிட்டாய்ங்க…

இவங்கலாவது பரவாயில்ல. நேர்மையா வரலைனு சொல்லிட்டானுங்க. இன்னும் ஒருத்தன் இருக்கான் : நசீர். வரேன்னு சொல்லி கடைசி வரை வரவே இல்லை.

கீழ இருக்குறதுல இடப்பக்கம் இருப்பவர்தான் கேசவன். வலப்பக்கம் இருப்பவர் நசீர். ( பச்சை குழந்தையோட பால்வடியுற முகத்தை பாருங்க )

“வருவேன் . ஆனா வர மாட்டேன்” என்று காமெடி பண்ணிட்டான்.

அப்புறம் ஆதித்தனை அழைத்தேன். அவனுடைய வேலைப்பளு காரணமாக வர முடியாத சூழ்நிலை அவனுக்கு. இருந்தாலும் முயற்சி செய்கிறேன் என்றான். ஆனால் வரமுடியவில்லை.

நான் ராம் டெண்டுல்கரை அழைத்தேன். அவன் ஊரில் இருப்பதால் அடுத்தமுறை பார்க்கலாம் என்றான்.

ஒரு வழியாக மதியம் இரண்டுமணி அளவில் Express Avenue”வில் நானும் நிருபனும் சந்தித்தோம். பின்பு சண்முகசுந்தரம், பிரவீன், மோகன், வெங்கடேஷ் ஆகியோர் வந்தனர்.

:: பார்க்க ::

கால்கடுக்க சுற்றிய பின் மதியம் மாலையாகிக் கொண்டிருந்த சமயத்தில் சண்முகநாதன் மற்றும் சங்கர் இருவரும் வந்தனர்.

நன்கு சுற்றி கலைத்துபோய் மாலை ஆறு மணிக்கு வெளியே வந்தோம். சங்கத்தை கலைக்க அல்ல. அவென்யுன் ஒரு வாசலின் முன் அமர்த்து சற்று களைப்பாறிவிட்டு ஏழு மணியளவில் விடைபெற்றோம்.

இந்த சந்திப்புக்கு முன்னதாக சென்னை மெரீனாவில் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. அதில் ஊர் பெரியவரான இதயகுமார் கலந்துகொண்டார்.
அங்கே எடுக்கப்பட்ட ஒரு புகைப்பட தொகுப்பு :: இங்கே ::

27 – 3 – 2011 அன்று நானும் நண்பன் டல்ஹௌசி பிரபுவும் சந்தித்தபோது நிழலான சில புகைப்படங்கள் :: இங்கே ::

நன்றி மீண்டும் சிந்திப்போம்.

என்றும் நட்புடன்,
பூபால அருண் குமரன் . ரா