ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி ஆண்டுவிழாவுக்காக இறைவன் சிவபெருமானின் தொண்டர்களில் ஒருவரான நந்தனாரின் வாழ்க்கை வரலாற்றை நாடகமாக நடித்தோம்…நாடகத்தின் பெயர் ” பக்தனின் பெருமை
அதில் ஒரு காட்சி நிழல்படமாக,


ஆதித்தன், செல்வ கணேசன், சண்முகவேல், கேசவன், நான்(பூபாலன்).
நான் தாங்க நந்தனார்…பல காமெடி நடந்ததுங்க இந்த நாடகத்துல…

இந்த  நாடகத்தை அரங்கேற்ற பெரிதும் உதவியது எங்கள் தமிழ் ஆசிரியை திருமதி.சிவகலை.

இந்த நாடகத்துல என்னுடைய முதல் வசனம் :
( காட்சி – 1   , இடம் : ஆதனூர்   , நந்தனாரும் நான்கு அடியார்களும் )
நந்தனார் : ” செய்தொழிலே சிவன் தொழில். சிவனை எண்ணி எத்தொழில் செய்தாலும் அது சிவனுக்குரியதாகிறது. சிவனை மறந்து செய்யும் தொழில் இழிதொழிலாகிறது.”

எப்படி வசனம் ஞாபகம் இருக்கிறது என்று நீங்கள் கேட்பது எனக்கு கேட்கிறது…

நந்தனாரின் வசனம் கொண்ட குறிப்புகள் என்னிடம் உள்ளது. நாடகத்தை வீடியோ எடுக்கவில்லை என்பது சின்ன வருத்தம்.

“நந்தி மாதிரி குறுக்க நிக்குற” என்று பலர் கூற கேட்டு இருப்பீர்கள். ஏன் ,  உங்களையும் பலர் அப்படி கூறி இருக்கலாம்…

நந்தனார் சிவபெருமானின் தொண்டர்.63 நாயன்மார்களில் ஒருவர்.
தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர் என்பதால் நந்தனாருக்கு கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை.ஆகவே  வாசலில் நின்றே கும்பிட்டுவிட்டு சென்று விடவேண்டும். சிவபெருமானின் முன்னால் உள்ள நந்தி சிவபெருமானை பார்க்க விடாதபடி மறைத்துக்கொண்டு  இருந்தது. ( இதுதான் “நந்தி மாதிரி குறுக்க நிக்குற” என்பதன் பொருள் ).
நந்தனார் சிவபெருமானை காண முடியாததால் நந்தியை சற்று நகரும்படி சிவனை நோக்கி பாடல் ஒன்று பாடுவார். நந்தி நகர்ந்து சிவபெருமான் காட்சி தருவார்.

நந்தனாருக்கு திருநாளைப் போவார் என்றும் அழைப்பார்கள். நந்தனாரைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ::: இங்கே


நந்தனாரின் வரலாற்றுத் திரைப்படத்தில் சில காட்சிகள் :
1. நந்தனார் சிவபெருமானை வணங்கும்படி அறிவுறை கூறும் காட்சி( அற்புதமான வரிகள் ) ,

[youtube=http://www.youtube.com/v/0r5FMasD0zo]

2. பிற உயிர்களை கொல்ல கூடாது என்று மக்களுக்கு அறிவுறை கூறும் காட்சி ,

[youtube=http://www.youtube.com/v/h9XJFDpViPg]

நந்தியை சற்று விலகி அமரும்படி கூறும் பாடலை காண ::: இங்கே

நாடகத்தில் முடிவில் நந்தனார் தீயில் இறங்கி உயிருடன் வெளியே வந்து  தன் பாவங்களை போக்கிகொள்வார். பின்பு “” ஹர ஹர மஹா தேவா ! சம்போ சதாசிவா ! பரமானந்தம் அடைந்தேன். யான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெருவதாகுக .. வாருங்கள் , அனைவரும் ஆலயத்திற்கு சென்று சிதம்பரநாதனை சேவிப்போம் “” என்று நந்தனார் கூறியவாறு நாடகம் நிறைவடையும்.

நன்றி…