::  நாள்  : 11-10-2007   ::   நேரம் : இரவு 10 மணி  ::

நாளை கல்லூரியில் (12-10-07) இளைஞர்கள் கலைவிழா கொண்டாட்டம். ஆனால் இன்றோ…

சில விபரீத விளைவுகள்.தோழி அமுதாவின் கையில் விபத்து.

உயிர்வலியின் கண்ணீர் இன்று என் கனவிலும் வரும். என் கண்கள் உறங்கவும் மறுக்கிறது.

உறங்கவில்லையென்றால் நினைவுகள் நெருடுகிறதே என உறங்கவும் ஏங்குகிறது.

உறங்காத போது ஏதோ முயல்வோம் என்று கவிதை எழுதுவதுண்டு. ஆனால் உண்மையாகவே என் வருத்தத்தின் அறிவிப்பு பலகையில் இடுவதைப் போலவே எழுதுகிறேன் இன்று.

இறைவனை
ஒரு போதும் நம்பாதீர்கள்
முற்பிறவியென்று கூறி
மூன்றாம்  பிறைக்கு பிறகு
அமாவாசைக்கு ஆசைப் படுகிறான்.

விடியும் வரை விளக்கு

ஒளி விடட்டும்

விட்டுவிட மறுக்கிறது காற்று !

விடிந்த பின்னே கொண்டாட்டம்

விடியலே இங்கே சந்தேகம் !

தேவையற்ற வினைகளுக்காக

விளையாடினோம்

வந்தது  விபரீதம்…

எங்களில் ஒருவருக்கென்றால்

ஏக்கங்கள் மிஞ்சும்

எவருக்கோ என்று ஆகும் போது

வலியின் ரணம் நெஞ்சையழிக்கிறது !

அவள் கண்ணீர்

என் கண்ணிற்குள்

அவள் ரணம்

என் நெஞ்சுக்குள்

அந்த இறைவன்

என் வெளியறையில்;

ரணத்தின் வலிநிவாரணம்

என் மனதின் உள்ளறையில்;

தவறு என்னுடையதோ
இல்லை அவளுடையதோ

காயம் ஏன் கடவுளே,
நீயில்லையென நான்
எண்ணும்போது
நிரூபிகிறாய்
நீ இல்லாததை !

கர்மபலன்

வீணான  வார்த்தை

கர்மம்

வேண்டாத வார்த்தை

மனிப்பதாலோ ; கேட்பதாலோ
மனங்கள் மலருவதில்லை.
காயங்கள் மறைவதுமில்லை.

வருந்துகிறேன்  ..சீக்கிரம் நிலை பெற

நிம்மதியை நாட வாழ்த்துகிறேன்.

அமுதாவின் தோழி ராஜி என்னை முறைத்தபடி சென்றது குறித்து,

நட்புக்காக
நலத்தோடு சிறு வெடிப்பு
பேச மறுத்தது
என் வெறுப்பல்ல,
என் தவறு…

இது தான் நல்லதோர் நட்பு…

வாழ்கவளமுடன்

::  நாள்  : 12-10-2007   ::   நேரம் : இரவு ::

நேற்றைய சம்பவத்திற்கு முடிவு வந்தது. மன நிறைவு அடைந்தது.
மன்னிப்பு கேட்டேன். தேவையில்லாதது தான்.

வலியிருக்கிறது
காயம் பட்ட என் மனதிலும் !

நடந்தது மறக்கப் படட்டும்
இனி
நடக்காமல் இருந்து விடட்டும் !

புன்னகைக்கு விலையேது ?
உண்மை நட்பிற்கும் விலையேது ?

உண்ட மயக்கம்
உறக்கத்தில் போகும்
கொண்ட தயக்கம்
உணர்வில் சாகும்.

என்றும் உணர்வுகள்
ஒன்றாக
வாழ்க வளமுடன்…வாழ்க வளமுடன்…வாழ்க வளமுடன்…

————

இளைஞர் கலை விழா (Youth festivel)  சிறப்பாகவே நடை பெற்றது. இன்று தோழி கோல்டாவின் பிறந்த நாளும் கூட.

நட்புக்கு தலைவணங்கும்
பண்புக்கு தலைவணங்கும்
நட்பு மாறாத
நல்ல நண்பனின்

இனிய மனமார்ந்த இந்நாள்

என்றும் தொடர பிறந்தநாள்

நல்வாழ்த்துக்கள்

என்றும் நிறைவோடு இறைவன்
அருளோடு

வாழ்க வளமுடன் !

வாழ்க வளமுடன் !

வாழ்க வளமுடன் !

இந்நிகழ்ச்சி பற்றிய முழுமையான விளக்கம் காண :: இங்கே :: செல்லவும்.

இப்படிக்கு

இறக்கும் வேளை தேடி பிறக்கும் மானிடர்களில் ஒருவன்