Tag

அறிமுகம்

December 8, 2021

என்ன பெயர் வைக்கலாம்? – பகுதி 2

வருடம் 2021, செப்டம்பர் மாதம் 25ம் நாள்…

மாலை வேளையில் பனிக்குடம் உடைந்தபடி மருத்துவமனை வாசலை அடைந்தோம். இரவெல்லாம் வாயும் வயிறுமாய் வலியும் உயிருமாய் கடந்தது.

26ம் நாள் அதிகாலைபொழுதினில் பிரசவ அறை பிரவேசம்,

வலியின் அலறல், வலுவின்மை, நம்பிக்கையூட்டல், தன்னம்பிக்கை என அனைத்தும் மாறி மாறி நாழிகை செல்ல, “செல்ல மகள்” உலகை ரசிக்க உதயமானாள்.

இரண்டாம் முறையாக என் மனைவி எங்கள் மகளை பெற்றெடுத்து மூன்றாம் முறையாக மறுபிறவி பெற்றாள்

அனைத்தும் நலமாக…

என்ன பெயர் வைக்கலாம் ஆரம்பமானது தேடல் விளையாட்டு

இம்முறையும் தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தேன். தாயும் தாரமும் அனுபவம் இருந்ததால் மறுக்கவே இல்லை

அ, இ, உ, ஏ – இவை தான் பெயரின் ஆரம்ப எழுத்துக்கள்

சிலர் பல பெயர்களையும், பலர் சில பெயர்களையும் பரிந்துரைத்தனர்.

அதில் சில பல,

அபிதா, அதிதி, அதுரா, அகலிகா, அக்சயா, அபிலா

இசை, இனிதா, இனியா, இலக்கியா, இந்திரா, இன்பா

உமா, உமையாள், உத்தமி, உதயா, உமாதேவி, உதயராணி

ஏழிசை, ஏலா, ஏகாபரனா

அகல்யா, இனிதா, இனியா, உமா – தாயின் பரிந்துரைகள்

அகல்யா அக்’ஷிதா, உத்தரா, அக்’ஷயா – தாரத்தின் பரிந்துரைகள்

பல பெயர்களை கடந்து வந்து, அகல்யா என அறுதியிட்டு உறுதி செய்தேன்

அகல்யா என்றால் ஒளி, பிரகாசிப்பது என்று பொருள்

அகல்யாவின் முதல் எழுத்து ‘அ’ – உயிர் எழுத்துக்களின் முதன்மை எழுத்து

இரண்டாம் எழுத்து ‘க’ – மெய் எழுத்துக்களில் முதல் எழுத்து

மூன்றால் எழுத்தான ‘ல்‘ – என்பது என் முதல் மகளான நிரல்யாவின் பெயர் காரண பதிவில் கூறியது போன்ற நிரல்நிறை அணியின் இரண்டாம் வரியாக கொள்ளலாம், அதாவது ‘ல்’ என்ற சொல் முதல் வரியில்(முதல் மகளுக்கு[நிரல்யா]) மூன்றாம் இடத்தில் இருப்பது போல, இரண்டாவது வரியில்(இரண்டாவது மகளுக்கும்[அகல்யா]) மூன்றாம் இடத்தில் அமைய பெற்று இருக்கும்

யா‘ என்பது (பெரும்பான்மையான)பெண்களுக்கே உரித்தான உயிர்+மெய்+நெடிலில்(ய்+ஆ) முடிய கூடிய எழுத்தாகும்

அகல்யா – பிரகாசிப்பவள் – வாழ்க வளமுடன்

(முதல் குழந்தையின் பெயர் விளக்கம் அறிந்திட சொடுக்கவும்)

January 29, 2018

என்ன பெயர் வைக்கலாம்? – பகுதி 1

ஜனவரி மாதம் 13ம் தேதி பிறந்த எனது மகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என தேடிக் கொண்டிருந்த சமயம்…

பலரும் தங்களின் மனதில் கொண்டிருந்த விருப்பமான பெயர்களை கூறினார்கள். அது மற்றுமின்றி பல வலைதளங்களும் தங்கள் விருப்பத்தை பிரதிபலித்தது.

நான் மட்டுமே பெயரை முடிவு செய்வேன், அதுவும் தமிழில் தான் வைப்பேன் என்றதும், எனக்கு தமிழை ஊட்டி வளர்த்து என்னை தமிழ்த் தாய்க்கும் மகனாக்கிய எனது தாய் சம்மதம் கூறினார். கூடவே மனைவியும் சம்மதித்தாள்.

me.jpg

இணையமே துணையாய் அலசி ஆராய்ந்து சில பெயர்களை தேர்வு செய்தாகிவிட்டது

நிறைமதி – முழுநிலவு
நறுவிழி – அழகான கண்கள்
நிலா
நித்திலா – முத்து(Pearl)
நிரல்யா – பூரணம், வரிசை (Perfect, Order)
நன்மொழி
நந்தினி – காமதேனுவின் மகள்

சில சம்ஸ்கிருத பெயர்களும்,
நிதுளா – (தெரியலப்பா)
நேத்ரா – விழிகள்

தேர்ந்தெடுத்த தமிழ் பெயர்களிலே வித்தியாசமாகவும் புதியதாகவும் இருப்பது,
நித்திலாவும், நிரல்யாவும்…

நித்திலம் என்பது நவரத்தினங்களில் ஒன்றான முத்து என்பதாகும்
நிரல் என்பது முழுமை அடைந்த அல்லது வரிசையான என்பதாகும்

பெயர்களை எல்லாம் எழுதி, இறைவன் திருவடியில் கொடுத்து, ஒன்றை மட்டும் வேண்டிக் கொண்டோம்.
இறைவனே அருளிய பெயர்: நிரல்யா

b30a3d8a66e6c45e64943d8d59700175.jpg

கவி முடத்தாமக் கண்ணியார் அவர்கள் சோழன் கரிகால் பெருவளத்தானை பாட்டுடைத் தலைவனாய் கொண்டு அருளியது பொருநர் ஆற்றுப்படை. பத்துப்பாட்டுகளில் இரண்டாவது பாட்டு. அதில்,

“முரவை போகிய முரியா அரிசி
விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல்”
–(பொருநராற்றுப்படை 113-114)

என்ற வரிகளில் நிரல் என்ற சொல், குறைபாடுகள் அல்லாத என்ற அர்த்தம் கொண்டு,

முல்லை மொட்டின் தன்மையை உடைய வரியற்ற இடை முறியாத அரிசி
விரலைப்போல் நீண்ட ஒன்றோடொன்று சேராத குறைபாடற்ற சோற்றையும்”

என்று பொருள் படும்படி பாடி இருப்பார்.

Porunar_Aatrupadai

மேலும்,
அணி இலக்கணத்தில், அணிகளில் ஒன்றாக நிரல்நிறை அணி குறிப்பிடப்படுகிறது

“நிரல்நிறை அணி சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப் படியே பொருள் கொள்ளும். அதாவது சில சொற்களை முதலில் ஒரு வரிசையில் வைத்து, அச்சொற்களோடு தொடர்புடைய சொற்களை அடுத்த வரிசையில் முறைமாறாமல் சொல்வது நிரல்நிறை அணி ஆகும்”

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
–(திருக்குறள், 45)

இக்குறள் அன்பு, அறன் என்பவற்றை வரிசையாக நிறுத்தி அவற்றோடு தொடர்புடைய பண்பு, பயன் என்பவற்றை முறையே அடுத்த வரிசையில் இணைத்து, பொருள் கொள்ளுமாறு அமைக்கப் பெற்றுள்ளது. இதுவே நிரல்நிறை அணி ஆகும்.

இங்கே நிரல் என்பது வரிசையாக என குறிப்பிடப்படுகிறது…

ஆக,

நல்ல தமிழ் பெயராகவும், புதியதாகவும் இருக்கும்படியாக நிரல்யா என்ற பெயரையே வைத்துவிட்டோம்.

நிரல்யா – முழுமையானவள் – வாழ்க வளமுடன்

(இரண்டாம் குழந்தையின் பெயர் விளக்கம் அறிந்திட சொடுக்கவும்)

January 13, 2018

போகியில் புதுமை

வந்தாள் பதுமை புதுமையை தந்திட

தேர்மேல் தேவதை போகியை கொண்டாட

துன்பங்கள் எரிந்தது பழையன போல

இன்பங்கள் புகுந்தது புதியன போல

என்றும் என்றேன்றும்

வாழ்வு சிறக்க வாழ்க வளமுடன்

அன்பு மகளே !!!

வலிகள் ஜீரணித்து வேதனை மறைத்து

அண்டத்தில் அன்புக்கு அடைக்கலம் கொடுத்து

பிண்டத்தை அண்டத்தில் உயிரோலியாய் அளித்து

முதலாம் மூன்றில் உணவை மறந்து

இரண்டாம் மூன்றில் தூக்கம் விடுத்து

மூன்றாம் மூன்றில் தன்னுடல் வருத்தி

இறுதியில் உயிரையே வலியாய் கொண்டு

முதலாம் மூச்சுக்கு வழிவகை செய்து

தேவதையை வரவேற்ற

தியாகமே!! தெய்வமே!! பெண்ணியமே!!

அன்பு மனைவியே !!

வாழ்க வளமுடன்…

October 5, 2010

நட்புகளின் பெயர்களே கவிதையாய் !

கவிதையில் பல வகைகள் உண்டு. அதில் புது வகைதான் இது.
வேற ஒன்னும் இல்லங்க. மாணவர்மலர் என்பது பல கல்லூரிகளில் மாணவர்களின் திறமையை புத்தகமாக பதிப்பித்து பத்திரப் படுத்துவது.
அதுபோல எங்கள் கல்லூரி மாணவர் மலருக்காக, வகுப்பில் உள்ள அனைவரின் பெயரையும் வைத்து நட்பை மையப்படுத்தி எழுதப்பட்ட கவிதை தான் இது…


அகிலத்தை  சுகிக்
அன்னையை  வணங்கு !

லட்சுமிதேவியின்  ஈஸ்வரத்தில்
தங்கமான  கார்த்திகை  ஒளியாய்
ஆனந்தம்   பொங்கும்
பிரியாத  செல்வமாய்
ராஜாங்கத்தின்  ராணிபோல
வாழ்வின்  இனிதான  சாந்தியை  பெற
தோழமையே ,
                               நீயெனக்கு  தோழனாயிரு…

கலைகளின்  செல்வியும், வித்யாவின்  விஜயமும்,
மீனாய்  சீறிப்பாய்ந்து  நிதமும்  நித்திமாய்
கலாமின்  கனவைப்போல பாரினில் கவியாய்
பவனி  வரும் ,
                               சகியே  உன் துணையிருந்தால் !

அசோகச்  சக்கரத்தின்
ஆரத்தில் நட்பு !

பாலன்  குமரனின்
ராம்ராஜ்யமும்  நட்பு !

முத்தும்  வைரமும் சேர்ந்த
மணிமகுடத்திலும்  நட்பு !

கணேசனின்  தும்பிக்கையும் நட்பு !
நாளையின்  நம்பிக்கையும்  நட்பு !

பிரளயத்தின்
புரிதலும் நட்பு !

சுற்றித்திரியும்
ஜீவன்களுக்கு
தாகம்  தீர்க்கும் நீரும் , நட்பு !

லீவிலும் நட்பு ; கனாவிலும் நட்பு !

பிம்பங்களில்
ரேகைதேடும்
மானிடர்களிலும் நட்பு !

பிறப்பிலும் நட்பு ;
பாவத்திலும் நட்பு;
திக்கேங்கும் நட்பு !

கோதையின்  காதலிலும்  நட்பு ;
ல்வியின் சாரத்திலும் நட்பு ;
அடடா , உலகெங்கும் நட்பு !

நட்பிலே ,
பேதமையுமில்லை !
பின்னடைவுமில்லை !

ஜெயத்தின் பாதையில்
சுகுனங்கள் தர , மல்லிகையின் மணம் வீச
எங்கெங்கோ  பூத்து  ஒன்றாய்  கூடிய  மலர்மாலை ;
ஒன்றிரண்டு  உதிர்ந்தாலும்
உலகெங்கும்  மணம்  வீசும் ,

TEN DRAGONS & FIRE BIRDS...

இந்த கவிதை மட்டும் அல்லாமல் இன்னும் இரண்டு சிறுகதைகளும் எழுதி கொடுத்தேன்.. அந்த நேரத்தில் கல்லூரியின் முதல்வர் மாறிவிட்டதால் மாணவர் மலருக்கு முழுக்கு போட்டு விட்டார்கள். கேட்டால் எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை என்று கூறிவிட்டார்கள் ( அவ்வளவு மதிப்பு மிக்க கல்லூரி)…இருந்தாலும் அத்தனை நட்புகளை எனக்கு அறிமுகப்படுத்திய கல்லூரியை மறக்க முடியுமா .. யாராலும் முடியாது.

நன்றிகளுடன் உங்கள் நண்பன்…

September 1, 2010

பயணமும் நண்பர்களும்…

நான் எப்ப  ஊருக்கு போனாலும் வரவேற்க , வழியனுப்ப நண்பர்கள் இருப்பார்கள். (எல்லாருக்கும் அப்படிதான் . இதில் என்ன இருக்கு சொல்ல)

அவர்களை இங்க அறிமுகப்படுத்தத் தான் இந்த பில்டப்பு…
( குறிப்பு : வெங்காயம்  சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது )

இவர் தான் அசோக சக்கரத்தில் இருக்கும் அசோக் என்ற சிங்கம்.

தொலைதூரக் கல்வியில் MBBS கிடையாது என்ற ஒரே காரணத்துக்காக MCA’வை திருச்செந்தூர்ல ஆதித்தனார் கல்லூரியில் படிக்கிறார்.

இவருடைய வரலாற்றைத் தான் ‘எந்திரன்’ என்று திரைப்படமாக எடுக்கிறார்கள். இவருடைய கதாப்பாத்திரத்தை தான் ரஜினி நடிக்கிறார்.
இவர் அடிக்கடி உபயோகிக்கும் சில வார்த்தைகள் : ஊமர் , தெரசா , அடியா, மொக்கைய போடாத, சொன்னு …( அர்த்தமெல்லாம் கேட்க கூடாது )
என்னுடைய நல்ல நண்பன். பாசக்காரனும் கூட…

அடுத்து ரவி பாலன்.  பூச்சிக்காட்டு வேங்கை என்பதை  எலி என்று மாற்றிக் கொண்டவர்.

என்ன பன்றார்னுதெரியலையா…? புல்லோட தன்மையை ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்.

ஆராய்ந்து முடித்து விட்டார். இப்போது ஆராய்ச்சி கூடத்துக்கு போன் செய்து சில மருந்துகளை வர செய்து  புல்லின் மீது தெளிக்கிறார்.

காய்ந்த புல்லை பசுமையாக்கி ஓய்வு எடுக்கிறார். அவர் ஓய்வு எடுக்கட்டும். நாம புறப்படலாம்….