Tag

படித்து ரசித்தது

May 26, 2019

மாமியார் – மருமகள்

புகுந்த வீட்டில் வாழ்வதை பெண்கள் ஏன் வனவாசம் செல்வது போல் எண்ணி வருந்துகிறார்கள்?

இந்த கேள்வியை Quora என்ற கேள்வி பதில் தளத்தில் ஒருவர் வினவ,

சிலர் கேள்விக்கு  கேள்வியாக கணைகளை தொடுகிறார்கள் இப்படியாக,

“ஒரு மாற்றத்திற்கு நீங்கள் மனைவி வீட்டில் சென்று வாழ்ந்து பாருங்களேன் .அப்போது புரியும்”

“எங்கே, உங்கள் மேனேஜர் அல்லது பிசினஸ் க்லையண்ட் வீட்டில் சென்று தங்கி வந்தபின் இதே கேள்வியைக் கேளுங்களேன் பார்ப்போம்?”

மேலும் சொல்கிறார்,

“காதல் திருமணமாய் இருக்கும் பட்சத்தில் கூட, அந்தப்பெண் பழகியது (பெரும்பாலும்) அந்த ஆணிடத்தில் மட்டும் தான். அக்குடும்பத்தினரோடு இருக்காது”

இதை வாசிக்கும் போது சிரிப்பு தான் வருகிறது, பெண் பழகியது அந்த  ஆணிடம் மட்டும் தான், அப்படியென்றால்  ஆண்  என்ன அந்த பெண் வீட்டாரின் தந்தை தாய் மற்றும் உறவினர்களோடும் சேர்த்தே பழகுகிறானா ?? ஆணும் பெண்ணுடன் மட்டும் தான் பழகுகிறான், ஆனால்  அவன் தனது காதலியின் பெற்றோரை  தவறாக மனதில் சித்தரித்து  வருவதில்லை. அதற்காக  பெண்ணை நான் குறை கூறவில்லை, புரிதல் இல்லாத காரணத்தால் (மருமகள் மற்றும் மாமியார் இருவரும் ) வாழ்வில் மகிழ்ச்சியை தொலைக்கிறார்கள்.

இதை சுதர்சனா சடகோபன் அவர்கள் அழகாக விவரிக்கிறார்,


ஒரு பெண்ணிடம் அவளது திருமண வாழ்வைப் பற்றியும், புகுந்த வீட்டைச் சுற்றியும் கூறப்படும் பல்வேறு கதைகளே அவளை அப்படி பயப்பட வைக்கிறது. எல்லா பெண்களும் இவ்வாறு எண்ணாவிட்டாலும், ஒரு சில பெண்கள் புகுந்தவீட்டிற்குச் செல்வதை வனவாசம் போலவே உணர்கின்றனர். இதற்குப் பல காரணங்கள் உண்டு.

நமது சமுதாயம் சிறு வயது முதலாகவே பெண்களுக்கு ‘மாமியார்’ என்ற சொல்லை எதிர்மறையான சொல்லாகவே காட்டி வளர்க்கிறது.

  1. மாமியார் என்றால் மருமகள் கூட சண்டை மட்டுமே போடுபவள். (எவ்வளவு நகைச்சுவைத் துணுக்குகள் படித்திருப்போம் மாமியார்-மருமகள் சண்டையை மையமாக வைத்து)
  2. மாமியார் என்றால் கொடுமைக்காரி.
  3. மருமகளை வேலை வாங்குவதற்காகவே அந்த வீட்டில் வாழும் ஒரு ஜீவன். ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் சிலிண்டரை வெடிக்கவைத்து கொலை கூட செய்பவள்! (இதுதான் காலங்காலமாக நம் தொலைக்காட்சித் தொடர்களில் சொல்லப்படும் காவியக் கதை)

இப்படி ஒரு தோற்றத்தைப் பார்த்து வளர்ந்ததாலேயே நிறைய பேருக்கு இந்த புகுந்தவீட்டுப் பிரச்சனை இருக்கிறது.

கூடவே, திருமணமாகப் போகும் பெண்களுக்குச் சுற்றியிருப்போர் வழங்கும் அதிமேதாவித்தனமான அறிவுரைகள் மேலும் அந்த பயத்தை அதிகப்படுத்துகிறது.

எனக்குத் திருமணம் நிச்சயமான சமயத்தில் ஏற்கனவே திருமணமான என்னுடைய நெருக்கமான தோழி எனக்குச் சில அறிவுரைகள் வழங்குவதாகக் கூறி பின்வருமாறு கூறினார்:

“உன் மாமியார்கிட்ட மொதல்லயே பார்த்து நடந்துக்கோ. வேலை எல்லாம் செஞ்சு அவங்க சொல்றபடி கேட்டு அடங்கி மட்டும் நடந்திராத. அப்புறம் உன் தலையில் ஏறி மிளகா அரைச்சிடுவாங்க.”

நான் இப்படி ஒரு ‘அறிவுரையை’ எதிர்பார்க்கவே இல்லை. இதுதான் அவள் சொன்ன அறிவுரை என்று ஏற்கவே எனக்குக் கொஞ்சம் நேரம் பிடித்தது. என் கணவரைப் பெற்றெடுத்தவர் என்ற முறையில் என்றைக்கும் என் மாமியாரை மரியாதையோடு, மதிப்போடு, அன்போடு அணுகவேண்டும் என்ற எண்ணம் உடையவள் நான். அவர்களைப் பற்றி நானாகவே எதையும் சித்தரித்துக் கொள்ளாமல் அவர்களைப் புரிந்து கொள்ளும் மனதுடன் இருக்கவேண்டும் என்ற முடிவுடன் இருந்தேன். அப்படிப்பட்ட எனக்கு, முதலிலிருந்தே அவர்கள் சொல்வது எதையும் கேட்காமல் இருக்க வேண்டும் என்ற வார்த்தை ஏற்புடையதாக இல்லை. என் தோழியிடமும் அதையே கூறினேன்.

இன்று, எனக்கும் என் மாமியாருக்கும் இடையே அழகான உறவு இருக்கிறது. என் கணவரின் மீதுள்ள அன்பில் நாங்கள் இருவரும் இணைக்கப்பட்டிருக்கிறோம்.

அடுத்து கிடைத்த அறிவுரை இதற்கும் ஒரு படி மேல். என் அண்ணனின் தோழி ஒருவர்,”நீயும் உன் மாமியாரும் சண்டை போடும்போது நீ அவர்களிடம் ஒன்றும் சொல்லாதே. உன் கணவரிடம் மட்டும் நடந்ததைக் கூறு. உன் கணவரும் நீ எதிர்ச்சண்டை எதுவும் போடாத காரணத்தினால் உனக்கே சாதகமாகப் பேசுவார். அதை விட்டுவிட்டு நீயாக உன் மாமியாரை எதிர்த்துப் பேசினால் உன் கணவரின் ஆதரவு கிடைக்காது. பிறகு சங்கடம்தான்” என்று அறிவுரை கூறினார். சண்டையில்லாமல் எப்படி புகுந்த வீட்டில் வாழ வேண்டும் என்று அறிவுரை கொடுக்க ஆளில்லை. ஆனால் போடுகிற சண்டையை எப்படி நமக்குச் சாதகமாக ஆக்க வேண்டும் என்று அறிவுரைகள் மட்டும் ஏராளம் வந்தவண்ணமிருந்தன.

இதுதான் நம் சமுதாயத்தின் பிரச்சனை. மாமியார் என்றாலே இப்படித்தான் என்று முத்திரை குத்திவிடுகிறோம். ‘மாமியார் என்றால் கொடுமைப்படுத்துவார், அதற்கு இடம் கொடுக்காதே’ என்றெல்லாம் அறிவுரை வழங்கி ஒரு பெண்ணை நாம் அனுப்பும் பொழுது, அந்தப் பெண் மாமியாரையும் நாற்றனாரையும் புலியும் கரடியுமாகத்தானே பார்ப்பாள்?! பின்னர் புகுந்த வீட்டிற்குள் போவது வனவாசம் போல் இல்லாமல் வேறு எப்படி இருக்கும்?

என் தோழியிடமிருந்து ஒரு மருமகளாக எனக்குக் கிடைத்த அறிவுரைகளைக் போலவே நம் ஊரில் மாமியார்களுக்கும் அவர்களுடைய தோழிகள் மூலம் பல அறிவுரைகள் வழங்கப்படுகிறது. ‘முதல்லயே அடக்கி வைக்கணும்’, ‘ரொம்ப இடம் கொடுக்காதே!’ ‘அவளை நீ உன் கைக்குள்ள வைக்கலைனா உன் பிள்ளை அப்புறம் உனக்கில்ல’ போன்றவை அவற்றுள் சில.

  1. மருமகள் என்றால் மோசமானவள்.
  2. வந்தவுடன் பிள்ளையை முந்தானையில் முடிந்து கொள்வாள்.
  3. வந்த உடனே மாமியாரிடமிருந்து உரிமைகளைப் பறித்துக் கொள்வாள்.

இப்படியெல்லாம்தான் நம் சமூகம் மருமகள்களைப் பற்றி மாமியாருக்கும் கற்றுத்தருகிறது.

இப்படித் தேவையில்லாத எதிர்மறை எண்ணங்களை ஏற்றிக்கொண்டு, ‘மருமகள் என்றாலே இப்படித்தான்’ ‘மாமியார் என்றாலே இப்படித்தான்’ என அவர்கள் மேல் வெறுப்பை வளர்த்துக்கொண்டு பழகுவதாலேயே, அவர்கள் செய்யும் சாதாரணச் செயல்களைப் பார்த்தாலும் தவறாகவே தெரிகின்றது. இறுதியில் இருவருக்குள்ளும் மனக்கசப்பு ஏற்பட்டு உறவு முறிந்துபோகிறது.

சமுதாயம் கற்றுக்கொடுத்த இம்மாதிரியான தேவையில்லாத stereotype-களைத் தூக்கி எறிந்துவிட்டு, மனதில் மாமியாரை/மருமகளைப் பற்றி தானாகவே தவறாக எதையும் யோசிக்காமல், நன்றாக அவர்களுடன் பேசி அவர்களைப் புரிந்துகொள்ள முயற்சிப்போம் என்று மாமியார்-மருமகள் இருவரும் நினைத்தாலே, முக்கால்வாசி பிரச்சனை இங்கே தீர்ந்துவிடும்.

வருபவள் நம் மகனின் வாழ்க்கைத்துணை. அவளை அவளுக்குரிய மரியாதையுடன் நடத்தவேண்டும் என்று மாமியார்கள் நினைக்கும்போது, மருமகள் மற்றுமோர் மகளாகவே தெரிவாள்.

நம் கணவனைப் பெற்றெடுத்தவர் அவருக்குரிய மதிப்பையும் மரியாதையையும் நாம் தரவேண்டும் என்ற எண்ணத்தோடு மருமகள்கள் செல்லும்பொழுது, புகுந்த வீடு தன் வீடாகவே தெரியும். வனவாசம் செய்யச் செல்லும் ஒரு காட்டைப் போல் தெரியாது.


இனி வரும் தலைமுறையாவது புரிதலோடு வாழ, இருக்கும் தலைமுறை புரிதலோடு இருக்க வேண்டும் என்று எண்ணியபடி பதிவிடுகிறேன்.

உபயம்: 1 & 2

என்றும் நட்புடன்,

பூபால அருண் குமரன் ரா

September 23, 2017

உனக்குத் தம்பி வேண்டுமா, அல்லது தங்கை வேண்டுமா?

கர்ப்பமாக இருந்த தாய், தன் மகளிடம் கேட்டாள்…

 “உனக்குத் தம்பி வேண்டுமா, அல்லது தங்கை வேண்டுமா?” என்று… 

மகள், “தம்பி வேண்டும்” என்றாள்.
“யாரைப் போல் தம்பி இருக்க வேண்டும்?” என்று தாய் கேட்க, 

“ராவணனைப் போல் இருக்க வேண்டும்” என்றாள் மகள்.

திடுக்கிட்ட தாய், “உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன? ராமனைப் போல் ஒரு சகோதரன் வேண்டும் என்று சொல்லாமல், ராவணனைப் போல் வேண்டும் என்கிறாயே!” என்றாள்.
“அம்மா! நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது?  உடன் பிறந்த சகோதரி அவமானப்பட்டாள் என்பதற்காக, ராவணன் தன் அரியணை, ராஜ்ஜியம், உயிர் அனைத்தையும் இழந்தானே! 

தன் எதிரியின் மனைவியைச் சிறை பிடித்த போதிலும், அவளை ஒரு போதும் தீண்டவில்லையே!

 ஆனால் ராமன், யாரோ ஒருவன் சொன்னான் என்பதற்காக, கர்ப்பவதியாக இருந்த தன் மனைவியை ஒதுக்கி வைத்தானே! 

அவளை தீக்குளித்துத் தன் புனிதத்தை நிரூபிக்கச் செய்தானே!

உனக்கு வேண்டுமானால் ராமனைப் போல் மகன் பிறக்கட்டும். 

ஆனால் எனக்கு ராவணன் போன்ற சகோதரன் தான் வேண்டும்” என்றாள் மகள்.
தாயால் பதில் கூற முடியவில்லை. அதிர்ந்து போனாள்.
இக்கதை ஒரு விவாதத்தைத் துவக்கலாம். ஆனால் கதையின் உட்பொருளைக் கூர்ந்து நோக்கினால், ஒரு உண்மை புலப்படும்.இவ்வுலகில் நல்லவர், கெட்டவர் என்பது நாம் நம் தனிப்பட்ட அனுமானங்களால் முடிவு செய்வதே. 
கேளிக்கைகளில் திளைப்பவன் என்பதால், 

ஒருவன் கெட்டவன் என்றில்லை.

கோவிலுக்குச் செல்பவன் என்பதால், 

ஒருவன் நல்லவனும் இல்லை. 

கோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக்காரனும் சரி – கேட்பதென்னவோ பிச்சை தான். 

நம் எண்ணங்கள் தராசின் முள் போல் இருத்தல் வேண்டும்.

June 9, 2017

​சாதி எப்படி வந்தது?

சாதியின் பரிணாமம்!!

மனித இனத்தின் வளர்சியை தொழில் வளர்ச்சியால் அளவீடு செய்யலாம். அப்படி தொழில் வளர்ச்சியில் உயர்ந்திருந்த இனங்கள் தனக்கு என ஒரு தொழிலை தேர்ந்தெடுத்துக் கொண்டு அந்த தொழிலில் அனுபவ அறிவில் முதிர்ச்சி பெற்று தொழில் நுணுக்கங்களை கண்டறிந்தனர். தலைமுறை தலைமுறையாக ஒரே தொழிலை செய்ததனால் பட்டறிவின் மூலம் தொழில் நுட்பங்கள் அறிமுகமானது. நீண்ட காலமாக ஒரே தொழிலை செய்யும் குடும்பங்கள் தொழில் குலமாக மாறியது. 
ஆங்கிலத்தில் உள்ள தொழில் பெயர்கள் பெரும்பாலும் ஸ்காட்டிஷ் செர்மனி பிரான்சு உள்ளிட்ட மக்களின் சாதி/குல பெயர்கள். 

Potter குயவர் 

Hunter வேட்டையாடி

Mason கட்டட பணியாளர்

Fisher/Fischer/Fischer மீனவர்

Smith கொல்லர்

Sangster பாடகர்

Master ஆசான்

Jardine(garden)தோட்ட கலைஞர்

Taylor தையலர்

Shepherd மேய்ப்பர்

இப்படி இன்னும் ஏராளம்.
சீனர்கள் ஒவ்வொருவரின் சாதி/ பட்டப் பெயர் சீனர்களின் அரச குடும்பத்தை அவர்களின் வரலாற்றை குறிக்கும். கிருத்தவ மதத்தை தழுவிய சீனர் தாய் மொழியான சீனத்திலும் குடும்பப்பெயரை சேர்த்தும் தன் குழந்தைகளுக்கு பெயர் வைக்கின்றனர். 

Wang (king) அரசர்

Lau (han dynasty) அன் அரசாட்சி

Leong (architect) கட்டுமான வடிவமைப்பாளர்

Thong (tang dynasty ) தாங் அரசாட்சி

Fu (teacher ) ஆசிரியர்

இப்படி உலகின் பழமையான பன்பாடு நாகரிகம் கொண்ட இனங்கள் பட்டப் பெயரை பெருமையோடு தங்கள் பெயருக்கு பின்னால் சேர்த்து கொள்கிறார்கள். தங்கள் இனத்தின் வரலாற்றை பறைசாற்றுகிறார்கள். 
சாதிய ஏற்ற தாழ்வுகள் அங்கு இல்லை. பெருளாதார ஏற்றத்தாழ்வு தான் அங்கெல்லாம் தனிமனிதனை தரநிர்ணயம் செய்ய உதவுகிறது. 
அப்படி தான் தமிழரின் குலப்பெயர்கள்/பட்டப்பெயர்கள்/சாதிப்பெயர்கள்/ குடும்பப்பெயர்கள் தமிழர்களிடமும் நிலவியது. 

ஒவ்வொரு தொழில்குலங்களும் தன்முனைப்போடு தொழில் வளர்ச்சியடைந்தது. ஒரு தொழில் குலத்திற்கு என்று தொழில் நுணுக்கம் தொழில் நுட்பம் என எல்லாம் இருந்தது. ஒரு குலத்தை மற்ற குலங்கள் சார்ந்திருக்க வேண்டிய தேவை எல்லா குலங்களுக்கும் இருந்தது.
கப்பல் கட்டுமானத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கினார்கள். ஐந்தினைகளிலும் உணவு உற்பத்தி செய்தார்கள். ஆள் கடலில் முத்துக்குளித்தார்கள். மீன் பிடித்தார்கள். கப்பல் வழியே உலக நாடுகளுடன் வணிகம் செய்தார்கள். கட்டிடக்கலையில் கட்டுமான தொழிலில் உயர்ந்திருந்தனர். உயர் கலை நுட்ப சிற்பங்கள் செதுக்கினர். இலக்கியங்கள் படைத்தனர். என்றெல்லாம் வரலாற்றில் படிக்கிறோமே அது எல்லாம் தமிழரின் தொழில் குலங்களால் தான் சாத்தியமானது.
வரலாற்று ஆய்வாலர் ஒரிசா பாலு தமிழர் சாதி பெயர்கள் பின்னால் இருக்கும் தொழில்சார் அறிவியலை பற்றி விளக்கியிருக்கிறார்.
பின் எப்படி சாதி இழிவானது??

அயலார் ஆட்சியில் அவர்களுக்கு தமிழர்களை பிரித்தாள வேண்டிய தேவை இருந்தது.

மனிதனை பிறப்பால் ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கும் வருணாசிரம படிநிலை சாதியில் புகுத்தப்பட்டது. ஒரு சாதியை உயர்வென்றும் மற்றொன்றை தாழ்வு என்றும் கற்பிக்கப்பட்டது. குறிப்பிட்ட சாதிகளுக்கு சலுகைகளும் ஏனைய சாதிகளை வஞ்சித்தும், சாதிகளுக்கு இடையே வெறுப்பையும் உருவாக்கினர். 

சாதியால் தொழில் வளர்சியை நோக்கி முன்னேறிய முன்னேற்றம் சார்ந்த உலகமயமாக்கலை அறிமுகம் செய்த தமிழர் சாதியின் பெயரால் துண்டாடப்பட்டு வீழ்ந்தனர்.

புராணங்கள் மூலம் பொய் கதைகளை பரப்பினர். கோத்திரங்கள் என்று ஒன்றை உருவாக்கி உயர்வு தாழ்வு கற்பித்தனர். 

இந்த சாதிய புராணங்கள் 16 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் தான் உருவாக்கப்பட்டது என ஆய்வாளர்கள் நிறுவுகின்றனர். 

சாதிகளால் பிரிந்திருந்தாலும் இனத்தால் அனைவரும் தமிழர்களே.

தீர்வு தான் என்ன??

அடுத்த தலைமுறைக்கு சாதிய குலங்கள் பற்றி, அவர்களின் வரலாறு பற்றி, அவர்கள் கையாண்ட தொழில்நுட்பம் பற்றி கல்வியில் சேர்த்து பாடம் எடுத்தால் ஒரு சாதியை தாழ்வாகவோ மற்றொரு சாதியை உயர்வாகவோ யாரும் கருதமாட்டார்கள். 
சாதி தேவை தானா??

சாதியின் பெயரால் தாழ்த்தப்பட்டு விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட சாதிகள் சாதியின் அடையாளத்தில் தான் தன் உரிமைகளை பிரதிநிதித்துவத்தை இட ஒதுக்கீட்டை பெற முடியும்.

ஒரு தேசிய இன்த்தையோ மரபினத்தையோ சாதியின் அடையாளத்தை வைத்து தான் வரையரை செய்கின்றனர். கன்னடர் என்றோ தெலுங்கர் என்றோ மலையாளி என்றோ அவர்களின் சாதி பெயர்களை தான் அடையாளப்படுத்துகிறது.

தமிழக அரசின் சட்டநாதன் ஆணையம் சாதிகளை வைத்து தான் தமிழர்களை வரையரை செய்கிறது. 
சாதிய இழிவு அறியாமை!!

ஒரு காலத்தில் தமிழர்கள் தொழில் வளர்ச்சியில் முன்னேற காரணமான சாதி.

இன்று ஒரு இனத்தை வரையரை செய்யும் அடையாளமாக மட்டும் இருக்கிறது.

ஒழிக்கப்பட வேண்டியது சாதிய படிநிலைகள் வருணாசிரம கொள்கைகள் மற்றும் ஏற்ற தாழ்வுகளை தான்..

மண்ணின் மக்களே சாதிய ஏற்ற தாழ்வுகளை  ஒழித்தால் ஒழிய சாதிய இழிவுகள் ஒழியாது!!

நிறைவாக என் அய்யன் பாரதியின் வரிகளோடு, 

சாதிகள் இல்லையடி பாப்பா குலத்

                தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

மேலும் தெளிவுற : இங்கே

February 4, 2017

Where is your Focus? 

​The pregnant deer – A beautiful management story

In a forest, a pregnant deer is about to give birth.

She finds a remote grass field near a strong-flowing river.

This seems a safe place.

Suddenly labour pains begin.

At the same moment, dark clouds gather around above & lightning starts a forest fire.

She looks to her left & sees a hunter with his bow extended pointing at her.

To her right, she spots a hungry lion approaching her.

What can the pregnant deer do?

She is in labour!

What will happen?

Will the deer survive?

Will she give birth to a fawn?

Will the fawn survive?

Or will everything be burnt by the forest fire?

Will she perish to the hunters’ arrow?

Will she die a horrible death at the hands of the hungry lion approaching her?

She is constrained by the fire on the one side & the flowing river on the other & boxed in by her natural predators.

What does she do?

She focuses on giving birth to a new life.
The sequence of events that follows are:

– Lightning strikes & blinds the hunter.

– He releases the arrow which zips past the deer & strikes the hungry lion. 

– It starts to rain heavily, & the forest fire is slowly doused by the rain.

– The deer gives birth to a healthy fawn.

In our life / business too, there are moments of choice when we are confronted on αll sides with negative thoughts and possibilities.

Some thoughts are so powerful that they overcome us & overwhelm us.

Maybe we can learn from the deer.
The priority of the deer, in that given moment, was simply to give birth to a baby.

The rest was not in her hands & any action or reaction that changed her focus would have likely resulted in death or disaster.

Ask yourself,
Where is your focus?

Focus should always remain on faith and hope!!! 

Be Focus… And WiN the Race!!!  👌 👍

April 26, 2016

விலைமாது விடுத்த கோரிக்கை..!

ராமன் வேசமிட்டிருக்கும்
பல ராட்சசனுக்கு
என்னை தெரியும்.
.
பெண் விடுதலைக்காக போராடும்
பெரிய மனிதர்கள் கூட
தன் விருந்தினர் பங்களா
விலாசத்தை தந்ததுண்டு.
.
என்னிடம்
கடன் சொல்லிப் போன
கந்து வட்டிக்காரர்களும் உண்டு.
.
சாதி சாதி என சாகும்
எவரும் என்னிடம்
சாதிப் பார்ப்பதில்லை.
.
திருந்தி வாழ நான் நினைத்தபோதும்
என்னை தீண்டியவர்கள் யாரும்
திரும்பவிட்டதில்லை.
.
பத்திரிக்கைகள் கூட
விபச்சாரிகள் கைது என்றுதானே
விற்பனையாகிறது..
விலங்கிடப்பட்ட ஆண்களின்
விபரம் வெளியிடாது ஏன்…?
.
பெண்களின் புனிதத்தை விட
ஆண்களின் புனிதம்
அவ்வளவு பெரிதா?
.
காயிந்த வயிற்றுக்கு
காட்டில் இரை தேடும்
குருவியைப் போல்
என்னை யாரும் பரிகசிக்கவில்லை.
.
கட்டில் மேல் கிடக்கும்
இன்னொரு கருவியைப் போலத் தான்
என்னை கையாளுகிறார்கள்.
.
நான் இருட்டில் பிணமாக மாறினால்தான்
பகலில் அது பணமாக மாறும்.
பின்தான்
என் குடும்பத்தின் பசியாறும்.
.
நிர்வாணமே என்
நிரந்தர உடையானதால்
சேலை எதற்கென்று
நினைத்ததுண்டு.
சரி
காயங்களை மறைப்பதற்கு
கட்டுவோம் என்று
கட்டிக்கொண்டு இருக்கிறேன்.
.
என் மேனியில் இருக்கும்
தழும்புகளைப் பார்த்தால்
வரி குதிரைகள் கூட
வருத்தம் தெரிவிக்கும்.
.
எதையும் வாங்க வசதியில்லாத
எனக்கு
விற்பதற்காவது இந்த
உடம்பு இருக்கிறதே!
நாணையமற்றவர் நகங்கள்
கீறி கீறி என்
நரம்பு வெடிக்கிறதே!
.
வாய்திறக்க முடியாமல்
நான் துடித்த இரவுகள் உண்டு
.
எலும்புகள் உடையும் வரை
என்னை கொடுமைப் படுத்திய
கொள்கையாளர்களும் உண்டு.
.
ஆண்கள்
வெளியில் சிந்தும் வேர்வையை
என்னிடம் ரத்தமாய்
எடுத்து கொள்கிறார்கள்.
.
தூறல் சிந்தாத வான் மேகமில்லை.
கீறல் படாத வேசி தேகமில்லை.
.
என்னை வேசி என்று
ஏசும் எவரைப் பற்றியும்
கவலைப்பட்டதே இல்லை..
.
ஏனெனில்
விதவை – விபச்சாரி
முதிர்கன்னி – மலடி
ஓடுகாலி – ஒழுக்கங்கெட்டவள்
இதில் ஏதேனும்
ஒரு பட்டம்
அநேக பெண்களுக்கு
அமைந்திருக்கும்.
இது இல்லாமல் பெண்கள் இல்லை.
எப்போதும்
இழிவு சொல் ஆண்களுக்கு இல்லை.
.
முதுமை என்னை
முத்தமிடுவதற்குள்
என் மகளை மருத்துவராய்
ஆக்கிவிட வேண்டும்.
என் மீது படிந்த தூசிகளை
அவளை கொண்டு
நீக்கி விட வேண்டும்.
.
இருப்பினும்
இந்த சமூகம்
இவள்
மணிமேகலை என்பதை மறந்துவிட்டு
மாதவியின் மகள் என்பதை மட்டுமே
ஞாபகம் வைத்திருக்கும்.
.
இறுதியாக
இரு கோரிக்கை.
.
என்னை
மென்று தின்ற ஆண்களே!
மனைவிடமாவது கொஞ்சம்
மென்மையாக இருங்கள்.
எங்களுக்கு இருப்பது
உடம்பு தான்
இரும்பல்ல.
.
என் வீதி வரை
விரட்டிவரும் ஆண்களே!
தயவு செய்து விட்டுவிடுங்கள்.
நான் விபச்சாரி என்பது
என் வீட்டுக்கு தெரியாது.

Read More