May 2, 2010

மறவாத வாக்கியங்கள் …

 எல்லோருடைய  பள்ளிப்  பயணங்களிலும் மறக்க முடியாதபடி சில வாக்கியங்கள் , வார்த்தைகள் அல்லது பட்டப் பெயர்கள் அவரவர் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திடிருக்கும்.

நெடுநாள் பிரிந்திருந்த நட்பின் பெயர் கூட மறந்து விடலாம். ஆனால் பட்டப் பெயர்கள் அல்லது அடிக்கடி பயன்படுத்தும் வாக்கியங்கள் போன்றவற்றை மறக்கவே முடியாது ..

அதில் முக்கியமாக சொல்ல வேண்டியது ஆசிரியர்களின் அடிக்கடி பயன்படுத்தும் வாக்கியங்கள் தான் …

(( திசையன்விளை ஸ்ரீ ராம கிருஷ்ணா மேல் நிலை பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டும்… மற்றவர்கள் உங்கள் பள்ளி வாழ்க்கையை  சற்று நினைவு படுத்திக்கொள்ளுங்கள் ))

 இதோ என் பள்ளி பயணங்களில் என்னால் , என்னால் மட்டுமல்ல என் பள்ளி தோழர்களாலும்
மறக்க முடியாத சில ஆசிரியர்களின் வாக்கியங்கள் :::

வீட்டுப் பாடம்(home work) செய்து வராத  மாணவர்களை பார்த்து எங்கள் கணித ஆசிரியை கூறும் வாக்கியம் :
“”உங்களயெல்லா அடிச்சி கொல்லனுங்கிறே. உங்க மண்டையெல்லா அடிச்சி ஒடைகனுங்கிறே“”

சமூக அறிவியல் பாடத்தில் நடத்தப்பட்ட தேர்வில் மதிப்பெண் குறைந்த மாணவர்களை மிரட்ட எங்கள் சமூக அறிவியல் ஆசிரியர் கூறும் வாக்கியம் :
“”(இடது கையை காட்டி) இந்த கை’ல  அடிச்சா இந்த கை பன் மாரி(மாதிரி) போம்மிக்கும்.
(வலது கையை காட்டி) இந்த கை’ல  அடிச்சா இந்த கை பன் மாரி(மாதிரி) போம்மிக்கும்… மொத்ததுல ரெண்டு கையும் உப்பிக்கும்.“”

தமிழ் ஆசிரியை பாடம் நடத்தியபடி {[ வகுப்பு முடிவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு தான் பாடத்தை நடத்த ஆரம்பிக்கும் நல்ல ஆசிரியை, முதல் 40 நிமிடம் பக்கத்துக்கு வீட்டு அக்க கதை ]} கூறும் வார்த்தை “” சரியாபோவ் “”( சரி தானே ).
மேலும் ,
ஆவேசத்தில் கூறும் வார்த்தை “” நா யாருக்கும் பயப்பட மாட்டேன். என் வழி தனி வழி“” ( Braveen Commend : ஆமா , போஸ்ட் ஆபீசிக்கு போற வழி )

இயற்பியல் ஆசிரியர் கூறுவது “” சொக்கே , சொக்கணுவ “”( That means God Siva )

கணிபொறி ஆசிரியை அடிக்கடி அடிக்கடி அடிக்கடி கூறும் வார்த்தை “” ச்ஸோஒ… ““( Special Thanks to Voice Expert Vicky )

முக்கியமான ஒன்னு இத நா சொல்லியே ஆகணும் ….

எங்கள் அறிவியல் ஆசிரியை பாடம் நடத்தும் போது கனவு காணும் மாணவர்களை பிடித்து கேட்கும் கேள்வி :
“”உன் மனச தொட்டு சொல்லு , நீ என்ன நனைச்சிகிட்டு இருந்தா ?“”
அல்லது ( சுவற்றில் தொங்க விடப்பட்ட இறைவனின் படத்தை காட்டி )
“”இந்த படத்த பார்த்து சொல்லு, நீ என்ன நனைச்சிகிட்டு இருந்தா ?“”

 சரி , ஆசிரியர்களின் காமெடியை விடுவோம்,
மாணவர்களின் அரட்டைக்கு வருவோம் …

“”ஆழியாலா..ஆ… சின் குன் கா ..ஆ…. யங், மங், சங்…“”

என்ன ஒன்னுமே புரியலையா…எனக்கு புரியல தான். ஆனா என் கூட படிச்சா எல்லாருக்கும் இந்த  வாக்கியம் அத்துபடி… இது ஒரு சீன படத்துல வர்ற வசனம். எங்கிருந்தோ வந்த ஒரு இரும்பு கம்பி, மாடியில் நின்று கொண்டிருக்கும் ஒருவனின் தலையில் விழுந்தவுடன் தலை சுற்றியபடி கூறும் வசனம் …இதை பார்த்து விட்டு பள்ளிக்கு வந்து இந்த வசனத்தை பிரபலபடுத்தியது பரம்ஸ் என்கிற பரமலிங்கம் …

நண்பன் கேசவனை சமூக அறிவியல் ஆசிரியர் அழைக்கும் விதம் தான் இது :
“”கேசவா நாராயணா கோவிந்தா கோ…விந்தா “” …

கேசவன் என்று அழைப்பதை விட இது தான் நல்ல இருக்கு …

சைனைட் என்ற சண்முக நாதன் .
சின்ன டப்பா பிரவீன் .
Legend killer , Bond killer , நமிதா தொப்பை ,இறைப்புவாரி, இடிதாங்கி , அலி , எர்  குட்ட , உருண்ட (( உருண்ட வருது, உருண்ட வருது, உருண்ட பாருங்கோ  )), மொட்ட … என்று  பல பெயர்களை மறக்க முடியாது …

வாழ்கையின் எல்லை வரை வரும் பள்ளிப் பயணங்களின்  நினைவுகளுக்கு சமர்பிக்கிறேன்… I Miss My school Friends a Lot…! I miss you Guys…

தொடர்பில் இல்லாத தோழமைகள் உங்கள் செல்பேசி எண்ணை உங்கள் பெயருடன் எனக்கு அனுப்பவும்…நட்புக்குள் பிரிவுகள் தேவை இல்லை …

April 24, 2010

வித்தியாசமான எண்ணங்கள் தான் உலகை ஆள்கிறது …

BACKGROUND பயங்கரங்கள் …

இப்படி ஒரு EXPRESSION காட்டுறேன் , பாக்காம போறாரு …

ஓ,   இது தான் கூகுளா …?

இப்படியும் லூசுங்க அலையுது இந்த உலகத்துல …

உக்காந்து யோசிப்பாங்களோ …