உன் கனவில் என் பிம்பங்களை கண்டதை
நீ சொல்லி கேட்கையில்
ஏதோ நிலவிற்க்கு சென்று வந்த எண்ணம் தோன்றுதடி!!!
உன் கனவில் என் பிம்பங்களை கண்டதை
நீ சொல்லி கேட்கையில்
ஏதோ நிலவிற்க்கு சென்று வந்த எண்ணம் தோன்றுதடி!!!
எனது ஒவ்வொரு விடியலும்
உனை கொண்டே தொடங்கி
உன் நினைவினில் பயணித்து
உன்னோடு இடையில்லாது தொடரும்…
உன் காதலில் மயக்கம் கொண்ட
மின்மினி பூச்சியாய் நான் மிளிர
என் காதலில் தயக்கம் கொண்டு
தனிமையில் சிந்தனை ஏனடி?
என்னை துயில் எழுப்பி நீ உதிர்க்கும் ஓர் புன்னகை
அந்நாளை கடக்கும் ஒவ்வொரு நொடியும்
இனிமை கொடுக்கும் மருத்துவமடி தங்கம்..!!!
இவ்வேளையும், எவ்வேளையும்;
இன்று, என்றும்;
உன் நினைவில் நான்
என் நினைவில் நீ
நம் நினைவில் நாம்
புன்னகையில் வர்ணம் பூசி
ஊரெல்லாம் வீசி செல்லும்
குட்டி தேவதையடி நீ!!!
கனவுகள் பல வந்தாலும் நீ இன்றி நான் காண விரும்புவதில்லை!
காணும் கனவினை நானே தேர்ந்தெடுத்து
கனவிலும் நிறைவாய் உன்னையே எண்ணிட
நினைவிலும் உன்னையே எண்ணுவேன் அன்பே!!!
பிறந்த குழந்தையின் உச்சிதனை போன்ற உன்
கரங்களை பற்றும் என் மனமே
விளமியோடு இசைந்து உணர்வோடு கலந்து
அளவிளாது மகிழ்ந்து ஆட்டம் போடுகிறது