உன் விரல் தொட்டு
வேக சென்றதால்
கோழிகள் சொர்க்கம் சென்றது
அதன் ருசியில் மெய் மறந்து
நான் மோட்சம் கொண்டேன்
(இன்னொரு பிளேட் கொடு தங்கம்)
உன் விரல் தொட்டு
வேக சென்றதால்
கோழிகள் சொர்க்கம் சென்றது
அதன் ருசியில் மெய் மறந்து
நான் மோட்சம் கொண்டேன்
(இன்னொரு பிளேட் கொடு தங்கம்)
மீனும்🐟 நானும்🧑 இயல்பை மீறி உனை நோக்கி ஈர்க்கப் பட்டோம்🏄♂, நிலவோடு நிழலாடிடும்🌛 ஆற்றங்கரையை உன் மேனியால்👸 நீ ஆற்கொண்ட போது…! ✨
இனிமை பொங்க
பசுமை வளர்த்து
தன்மை உயர
தாயகம் உயர்த்தும்
பெண்ணியமே
எண்ணங்களை திண்ணமாக நிறைவேற்றி,
வண்ணங்களை வாழ்வுகளுக்கு
பகிர்ந்தளிக்கும்
பெண்ணினமே,
எழில் தரும் சூரியனே
தளிர் விடும் பொன் மலரே
தடாகத்தின் தாமரையே
பூவுலகில் பூமகளே
உனக்கு
உதயமான நல்வாழ்த்துக்கள்
பிரிவின் துயரில் உன் கண்ணீர்
துடைந்தெறியும் தூரத்தில் என் விரல்கள்
விடியல் பூத்ததும் விரைந்து வரும் கலங்காதே, என் கண்ணே
உன் பிறந்தநாள் பரிசை நீ பிறந்த சரியான நேரத்தில் தான் தருவேன் என்றதும்
அந்த நேரம் இது தான் என்று பிடுங்கியபடி நீ முறைத்தாய்.
அப்போது தான் உணர்ந்தேன் நெஞ்சுக்குள் மாமழையை !
சில நேரம் உன் சினுங்கள்களை ரசித்தபடி நிற்பதற்கு கடிந்து கொள்வாய்
நீ கடிந்து கொள்வதை ரசிக்கவே நான் உன் சினுங்கள்களை ருசிக்கிறேன் என்பதையறியாமல்
உன் மீது கொண்ட அன்பை அளவிட சொன்னபோது சிரித்தாய்
நான் புரியாமல் விழித்தேன்
இப்போது புரிகிறது, அத்தனையும் மொத்தமாய் காட்டினால்
நான் மூச்சிறைத்து விடுவேன் என்றே சிரிப்பைக் காட்டி சமாளித்திருக்கிறாய்
நீ என்பது நீயேயானாளும்
நான் என்பது நீயும் தானடி!
நீரின்றி அமையாது உலகு
நீயின்றி அமையாத நான்!
உன் அரவணைப்பு போதும், சூரியனும் குளிர்ந்து போக.
உன் பார்வையால் மதியும் ஒளி பெறும்
உன் சிறு அசைவு போதும், காற்று ஆசுவாசப்பட.
உன் இதழ்களால் பூக்களுக்கு வாசம் வரும்