Thanks to the original creator 👍
Category: EverBeHappy
-
விலைமாது விடுத்த கோரிக்கை..!
ராமன் வேசமிட்டிருக்கும்
பல ராட்சசனுக்கு
என்னை தெரியும்.
.
பெண் விடுதலைக்காக போராடும்
பெரிய மனிதர்கள் கூட
தன் விருந்தினர் பங்களா
விலாசத்தை தந்ததுண்டு.
.
என்னிடம்
கடன் சொல்லிப் போன
கந்து வட்டிக்காரர்களும் உண்டு.
.
சாதி சாதி என சாகும்
எவரும் என்னிடம்
சாதிப் பார்ப்பதில்லை.
.
திருந்தி வாழ நான் நினைத்தபோதும்
என்னை தீண்டியவர்கள் யாரும்
திரும்பவிட்டதில்லை.
.
பத்திரிக்கைகள் கூட
விபச்சாரிகள் கைது என்றுதானே
விற்பனையாகிறது..
விலங்கிடப்பட்ட ஆண்களின்
விபரம் வெளியிடாது ஏன்…?
.
பெண்களின் புனிதத்தை விட
ஆண்களின் புனிதம்
அவ்வளவு பெரிதா?
.
காயிந்த வயிற்றுக்கு
காட்டில் இரை தேடும்
குருவியைப் போல்
என்னை யாரும் பரிகசிக்கவில்லை.
.
கட்டில் மேல் கிடக்கும்
இன்னொரு கருவியைப் போலத் தான்
என்னை கையாளுகிறார்கள்.
.
நான் இருட்டில் பிணமாக மாறினால்தான்
பகலில் அது பணமாக மாறும்.
பின்தான்
என் குடும்பத்தின் பசியாறும்.
.
நிர்வாணமே என்
நிரந்தர உடையானதால்
சேலை எதற்கென்று
நினைத்ததுண்டு.
சரி
காயங்களை மறைப்பதற்கு
கட்டுவோம் என்று
கட்டிக்கொண்டு இருக்கிறேன்.
.
என் மேனியில் இருக்கும்
தழும்புகளைப் பார்த்தால்
வரி குதிரைகள் கூட
வருத்தம் தெரிவிக்கும்.
.
எதையும் வாங்க வசதியில்லாத
எனக்கு
விற்பதற்காவது இந்த
உடம்பு இருக்கிறதே!
நாணையமற்றவர் நகங்கள்
கீறி கீறி என்
நரம்பு வெடிக்கிறதே!
.
வாய்திறக்க முடியாமல்
நான் துடித்த இரவுகள் உண்டு
.
எலும்புகள் உடையும் வரை
என்னை கொடுமைப் படுத்திய
கொள்கையாளர்களும் உண்டு.
.
ஆண்கள்
வெளியில் சிந்தும் வேர்வையை
என்னிடம் ரத்தமாய்
எடுத்து கொள்கிறார்கள்.
.
தூறல் சிந்தாத வான் மேகமில்லை.
கீறல் படாத வேசி தேகமில்லை.
.
என்னை வேசி என்று
ஏசும் எவரைப் பற்றியும்
கவலைப்பட்டதே இல்லை..
.
ஏனெனில்
விதவை – விபச்சாரி
முதிர்கன்னி – மலடி
ஓடுகாலி – ஒழுக்கங்கெட்டவள்
இதில் ஏதேனும்
ஒரு பட்டம்
அநேக பெண்களுக்கு
அமைந்திருக்கும்.
இது இல்லாமல் பெண்கள் இல்லை.
எப்போதும்
இழிவு சொல் ஆண்களுக்கு இல்லை.
.
முதுமை என்னை
முத்தமிடுவதற்குள்
என் மகளை மருத்துவராய்
ஆக்கிவிட வேண்டும்.
என் மீது படிந்த தூசிகளை
அவளை கொண்டு
நீக்கி விட வேண்டும்.
.
இருப்பினும்
இந்த சமூகம்
இவள்
மணிமேகலை என்பதை மறந்துவிட்டு
மாதவியின் மகள் என்பதை மட்டுமே
ஞாபகம் வைத்திருக்கும்.
.
இறுதியாக
இரு கோரிக்கை.
.
என்னை
மென்று தின்ற ஆண்களே!
மனைவிடமாவது கொஞ்சம்
மென்மையாக இருங்கள்.
எங்களுக்கு இருப்பது
உடம்பு தான்
இரும்பல்ல.
.
என் வீதி வரை
விரட்டிவரும் ஆண்களே!
தயவு செய்து விட்டுவிடுங்கள்.
நான் விபச்சாரி என்பது
என் வீட்டுக்கு தெரியாது. -
Hakuna Matata – ஹக்குனா மாடாட்டா
ஹக்குனா மாடாட்டா, என்ன அருமையான கானம்
ஹக்குனா மாடாட்டா, உற்சாகம் பொங்குமே….
கவலையேதும் இல்லை, தொல்லை இனி இல்லை
வாழ்வே ரொம்ப கூல், அடி செம தூள்
ஹக்குனா மாடாட்டா, ஏ…
ஹக்குனா
மாடாட்டா
டிமோன்
அண்ட் பும்பா
ஹக்குனா
மாடாட்டா
கவலையேதும் இல்லை, தொல்லை இனி இல்லை
வாழ்வே ரொம்ப கூல், அடி செம தூள்
ஹக்குனா மாடாட்டா, டிமோன் அண்ட் பும்பா
-
வாட்ஸ்அப்’பில் வந்த கவித்துளிகள்
ஏதோ தமிழன்கிறோம், போராடுறோம்,ஆனா ரீசார்ஜ் கடையில நம்பர் சொல்லுங்கனு சொன்னதும் 10 நம்பர தமிழ்ல சொல்ல திண்டாட ரோம்
எதிர்காலத்தில் பருப்பு வாங்க பான் நம்பர் தேவைப்படலாம்…
பள்ளியில் பாடத்தில் ஏமாற்றலாம் கடைசி பக்கம் விடையை பார்த்து…. ஆனால்.,
வாழ்க்கையை ஏமாற்ற முடியாது. இறுதி பக்கமே தெரியாது. !கும்பிடும் வரை கடவுள்;
திருட்டுப் போனால் சிலை !அப்பா 50 ரூபா மிச்சப்படுத்த 30 நிமிஷம் நடந்ததுக்கும், நான் 30 நிமிஷம் மிச்சப்படுத்த 50 ரூபா ஆட்டோக்கு தர்றதுக்கும் பேரு தான் ஜெனரேஷன் கேப்!
பெரிய துணிக்கடையின் வாசலில் தன் துணிகளை விற்க நம்பிக்கையுடன் நிற்கும் பெரியவரை விட தன்னம்பிக்கை மிக்கோர் உலகில் எவரும் இல்லை!
படிப்பு முடிஞ்சதும் பொண்ணுங்க கல்யாணம் பண்ணிட்டு ராணி மாதிரி ஊர்ஊரா சுத்துறாங்க
பசங்கதான் வேலைதேடி தெருத்தெருவா சுத்துறாங்க
என்னடா டிசைன்!!எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!!!
விவசாய நிலத்தையெல்லாம் பிளாட் போட்டு வித்து காசு பாத்தோம்.
இப்போ விலைவாசி ஏறிப்போச்சு.
இனி பிளாட்டை விற்று பருப்பு வாங்கும் நிலைகூட வரும்.!பென்சில் ஷார்ப்பனரை எல்லாம் ஆயுதமாக்கிய பெருமை இந்த சரஸ்வதி பூஜையைத்தான் சேரும் !!
எழுத்திடம் பிடித்ததே, அது கண்ணைப் பார்த்து மட்டும் தான் பேசும்.ஜெயிக்கிறதுங்கிறது வாழ்க்கையில்
ஏழைமக்களுக்கு ஒரு வேளை சாப்பாடாகவும்,
பணக்காரனுக்கு பல கோடி சொத்தாகவும் உள்ளது.பணக்கார குழந்தையா இருந்தாலும் வீடு வரையச்சொன்னா குடிசை வீடோ அல்லது ஓட்டு வீடோ தான் வரையிது :-))
தெருவை கடந்தேன் ஜாதியைகேட்டான்
மாவட்டத்தை கடந்தேன் ஊரை கேட்டான்
மாநிலம்கடந்தேன் இனமொழியை கேட்டான்
நாட்டை கடந்தபிறகே இந்தியன் ஆனேன்!குழந்தைகள் டம்ளரில் பால் குடித்து முடிந்ததும் மீசை வளர்ந்து விடுகிறது
காலையில வாக்கிங் போரதல கெடச்ச ஒரே நன்மை தெருநாய் எல்லாம் தோஸ்த்ஆனது தான்.. இப்பெல்லாம் நைட் லேட்டா வந்தாலும் நம்மள பாத்து குலைக்கிறதில்ல!
கூகுளில் எதை தேடினாலும் கிடைக்கும்…!
உண்மைதான்…!
ஆனால் 2G யில் தேடாதீர்கள்…!
கூகுளே கிடைக்காது.!உலகினில் எவருமில்லை-சைவமென!
தாய்ப்பாலென்ன தாவரத்திலிருந்தா கிடைக்கிறது ?தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும் அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை என் நாடு சுத்தம் ஆகாது!!!
சிறகுகள் இல்லாமலேயே, பெண்களை தேவதைகளாக்கும் வல்லமை புடவைகளுக்கு உண்டு!
***விலைவாசி – பெயர் சரியாத்தான் வச்சிருக்காங்க , சில இடங்களில் விலை வாசிக்க மட்டுமே முடியும். !
*’ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது ஒரு தீகுச்சியின் மரணம் !!
*விமர்சனத்துக்கு பயந்தவன் வாழத்தகுதியற்றவன்.!
**-உன் இறுதிவரை நீ இழப்பதற்கு ஏதாவது ஒன்று மிச்சமிருக்கும் கவலைகொள்ளாதே!!****இந்த படிப்ப கண்டுபுடிச்சது எவன்டா” என ஆரம்பித்து…
“இந்த பணத்த கண்டுபுடிச்சது எவன்டா” என விடையில்லா கேள்விகளோடு முடிகிறது வாழ்க்கை.. !***வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை. !
***என் தந்தையை யாரோ நாலு பேர் ஏளனம் செய்யகூடாது என்ற பயத்தில் படித்து முடித்ததும் கிடைத்த வேலையை செய்ய தொடங்கினேன். ..! (ஆணின் முதல் தியாகம்)
***ஒரு முதலாளியை ”வேலையை விட்டுட்டு போயிடுவேன்”னு மிரட்ரளவுக்கு வேலை செய்யனும் அதான் திறமை! !
***தந்தையிடம் வாக்குவாதம் பண்ணுவதில் பெண்பிள்ளைகளுக்கு இருக்கும் சுதந்திரம் ஆண்பிள்ளைகளுக்கு இல்லை !!
**அடுத்த வாக்கியம் பொய்.
முந்தய வாக்கியம் உண்மை.
இதுல எது உண்மை?எது பொய்?…அதுதான் கடவுள்.***இன்றைய தலைமுறை இளைஞர்கள் அப்பாவிடம் அதிகம் பேசலனாலும் அவரின் ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் தெரிந்து வைத்துள்ளனர்.!
**500 ரூபாயை எண்ணினாலும் ,50000 ரூபாயை எண்ணினாலும் ஒரே மாதிரி சத்தத்தோடு நடந்து கொள்ளும் ஏடி எம் மெசின் .,..ஏன்னா அது மெசின்,மனிதமனமில்லை
***அவசரத்துக்கு ஒரு கொத்தனார தேடுனா ஊர்ல ஒரு பய இல்ல,
தெருவுக்கு நாலு இஞ்சினியர் மட்டும் இருக்கானுங்க !!***சொகுசு பேருந்து என்பது பெரிய சைஸ்
“ஷேர் ஆட்டோ”!***என்னதான் பெரிய மனுஷனா இருந்தாலும் ஐஸ்கிரீம் மேல இருக்கற அட்டைய ஒரு தடவ நக்கிட்டு தான் தூக்கி போட்றாங்க!
**இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம்.ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல!….நிதர்சனம்
**சத்தம் போட்டு அழ எல்லோருக்கும் ஒரு காரணம் நிச்சயம் இருக்கும், ஆனால் வாய்ப்பு நிச்சயம் இருக்காது !
***இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவான். வசதி இருக்கவன பாத்து எதையும் சாப்புடகூடாதுனு சொல்லுவான்.!😐
***வாட்ஸாப்ல “Hey there iam using watsapp”ன்னு ஸ்டேட்டஸ் வச்சிருக்குறவன் தான் உண்மையில யூஸ் பண்ணாதவன்.
***சிலர் நம் பெயரை அழகா வித்தியாசமா கூப்பிடுவதால் அவர்களை அதிகம் பிடிக்கிறது.
***வெளிநாட்டில் வேலையில் இருக்கும் மகனுக்கு தன் பெற்றோர் கூட தூரத்து சொந்தம் தான் 😐
***இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு, இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு!!
***250 ரூபாய்க்கு பளிச்சென்றும் 100 ரூபாய்க்கு சுமாராகவும் இலவச தரிசனத்திற்கு படுமங்கலாகவும் காட்சி தருகின்றார் கடவுள்…!!
**மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள். இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்…!!!
***தூக்கம் வராமல் முதலாளி…
தூங்கி வழியும் வாட்ச்மேன………முரண்.**கோடிகளில் சம்பாதித்து நடிகன் செய்யும் உதவிகள்,டீக்கடையில் பிச்சைக்காரனுக்கும் சேர்த்து டீ சொல்லும் தினக்கூலியின் வள்ளல்தனத்துக்கு கீழேதான்.!
**கடவுளுக்கு நீங்களாகவே ஒரு உருவம் கொடுத்து விட்ட படியால்..கடவுள் உங்கள் எதிரில் இருந்தாலும் தெரிவதில்லை!
**ஒரு ஆண் 25 வயதுக்கு மேல் எடுக்க போற ஒவ்வொரு முடிவும் தீப்பெட்டியில் உரசும் கடைசி தீக்குச்சியை போல அதீத கவனம் செலுத்த வேண்டியுள்ளது.!!
**கிலோ கணக்குல புத்தகம் தூக்கிட்டு குழந்தைங்க போறதாலதான் அதுக்கு L”KG”…. U”KG”…னு பேருபோல…
😐
***நீண்ட நேர தேடுதலுக்கு பின் கிடைக்கும் ஒவ்வொன்றுமே, என் முந்தைய தேடுதலில் கிடைத்திருக்க வேண்டியவைகளாகவே இருக்கின்றன!***கொட்டும் “மழையில்” இரண்டு விதமான பிள்ளைகள்
மாம்.!
இட்ஸ் ரைனிங்..ஏசியை கம்மி பண்ணுங்க😅
அம்மா.!
இங்கேயும் ஒழுகுது பாத்திரம் எடுத்துட்டு வா🚶🚶 -
அரசியல்
விலையில்லையென்ற போதும்
பணம் கொடுத்து பெற்ற
பாமரன் சொத்தடா,
இந்த பாரதம் !!!செத்த பிணங்களுக்கு இடையே
மரம் ஒன்றை எழுப்பி
பழம் தின்ன சொல்லுதடா,
இந்த அரசியல் !!!இரண்டிலும் உள்ள
ஒற்றுமையும் அறியாமல்
வேற்றுமையும் புரியாமல்
அறிவாளியென
எண்ணம் கொண்டு வாழுதடா,
இந்த ” …………… ”–
தீராத நட்புடன்
பூபால அருண் குமரன் ரா -
அரசியலுக்கு இளைஞர்கள் வரலாமா?
அரசியலுக்கு இளைஞர்கள் வரலாமா?
நலமே…
இது ஒரு நல்ல கேள்வி. நல்ல பதிலும் கூட. ஆனால் நடைமுறை??
இங்கே இளைஞர் அணியில் கூட வயதானவர்களே அதிகம். வயது ஒரு தடை இல்லை தான், அதை நான் மறுக்க போவதில்லை. ஆனால் நல்ல திட்டங்களும், எண்ணங்களும் மனதில் பிறந்து பணத்தில் அழிந்து போகிற இந்த அரசியலில், துடிப்பு மிக்க இளைய தலைமுறையை காணுவதே கானல் நீராய் இருக்கிறது.வாழ்வை நம்பிக்கை கொண்டு அழிக்க முடியுமா என்றால் அதற்கு நம் இந்திய மக்களே உதாரணம் என்று சொல்லலாம். நானும் இந்தியனே.
இளைஞர்களை பற்றி பல தவறான கண்ணோட்டமும் காணும் செய்தியும் மக்களை இளைஞர்களை பற்றி தவறாக சித்தரிக்கிற வைக்கிறது.
அரசியலில் மாற்றம் வராதா என ஏங்கும் இந்திய மக்களில் நானும் ஒருவனாய் சில சிந்தனைகளை தெளிக்கவே இக்கட்டுரை.
அரசியல் ஒன்றும் சாக்கடை அல்ல. அது அமுது. பருகியவர்கள் அது அடுத்தவர்களுக்கு கொடுக்க மறுக்கிறார்கள். அதனால் அதை சாக்கடை என ஏமாற்றுகிறார்கள்.
சரியா தவறா கேள்வியில் நம் வீட்டு சின்ன குழந்தைகள் கூட பள்ளியில் குழப்பத்தோடு விடை அளிக்கும் ஒரு கேள்வி :: வாரிசு அரசியல் இந்தியாவில் ஒழிந்ததா? என்பதே. பெரியவர்களுக்கே இன்னும் விடை தெரியவில்லை.
“அரசியலில் மாற்றம் வேண்டும்” என இருக்கும் அதனை பேருக்கும் ஆசைபட்டாலும் கிடைக்காத பொம்மை ஆகி விட்டது இந்த அரசியல்.
இதற்கு தீர்வு தான் என்ன? நம்மில் பலபேரிடம் இதற்கு சரியான தீர்வு இருக்கும், எனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி என் எண்ணத்தை பகிர்கிறேன்.
அரசியல் மட்டுமே நாட்டின் முனேற்றத்துக்கு காரணம் என கூறி விட முடியாது. மக்களும் தான்.
கிராமங்கள் மீது காந்தி கொண்ட நம்பிக்கை போலவே நான் நம்முடைய நாட்டின் முன்னேற்றம் ஆரம்பம் ஆகும் இடம் தெருக்கள் என கருதுகிறேன். ஆம். தெருக்களே தான்.
உங்கள் தெருவில் எத்தனை பேர் இருக்கிறார்கள். ஒன்று கூடுங்கள் பேசுங்கள். உங்கள் தெருவில் உள்ள பிரச்சனைகளை நீங்களே பேசி தீர்த்துகொள்ளுங்கள். தண்ணீர் பிரச்சனையா? உங்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து அவரிடம் பொறுப்பை ஒப்படையுங்கள். தெருவிளக்கு பிரச்சனையா மற்றோருவரை தேர்ந்தெடுத்து தீர்வு காணுங்கள்.
இப்போது உங்கள் தெரு ஒன்றாகி இருப்பின், தெருக்களை ஒன்றிணைக்கலாம். பக்கத்துக்கு தெரு தன்னிறைவு அடைந்ததா என உங்கள் தெரு குழுவில் இருந்து ஒருவர் மற்ற தெருக்களின் கூட்டத்துக்கு சென்று தொடர்ச்சியாக கலந்து உரையாடுங்கள். மற்ற குழுவில் உள்ளவர்களை அடுத்த குழுவுக்கு சென்று உரையாட, திட்டங்களை பரிமாற செய்யுங்கள்.
ஓவ்வொரு தெருக்களும் தங்கள் குறைகளையும், தங்களை சுற்றி உள்ளவர்களையும் கவனித்து கொண்டால் தேர்தல் என ஓன்று வந்தால் யாரும் நம்மிடைய வந்து “உங்களுக்கு இதை செய்வேன், அதை செய்வேன்” என விலை பேச முடியாது. நாமும் விலை போக வாய்ப்பும் இல்லை.
இது சாத்தியமா? – இது இங்கே நடைமுறையில் இருந்த, தற்போது மங்கி போன ஒரு திட்டம்.
ஆம். RSS – ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் என அழைக்கப்படும் இந்துகளின் இயக்கத்தின் தொடக்கமே இந்த நடைமுறை தான். முதலில் ஒரு தெருவில் உள்ள இந்து நண்பர்கள் சேர்ந்தார்கள். பின்பு அருகருகே என இந்திய தேசம் முழுவதும் வியாபித்த அமைப்பு தான் RSS. இங்கே நான் மதத்தை புகுத்த விழையவில்லை. அவர்கள் கொடுத்த அந்த திட்டத்தை தான் இங்கே மாற்றி அமைத்திருக்கிறேன்.
இந்துகளாக இணைத்தது போல, நாம் ஏன் இந்தியாவுக்காக இணைய முடியாது. முடியும். மாற்றத்தை விரும்பும் ஒவ்வொரு இந்தியனும் சிந்தித்து பார்க்க வேண்டும். மாற்றம் ஒன்றே மாறாதது.
சாபக்கேடுகளில் இருந்து இந்தியா நிச்சயம் ஒருநாள் கனவும், நம்பிக்கையும் கொண்ட இளைஞர்களால் மீட்டு எடுக்கமுடியும்.
அதுவரை காத்திருப்புகளுடன் – நம்பிக்கை கொண்ட, பணம் வாங்காமல் ஓட்டு போட செல்லும் உண்மையான இந்தியர்களில் நானும் ஒருவன்
தீராத நட்புடன்
பூபால அருண் குமரன்.ரா
-
மூஞ்சி மோகர – குறும்படம்
நாளைய இயக்குனரில் வெளியான குறும்படம், தற்போது தான் பார்க்க நேர்ந்தது.
கற்பனையாக எடுக்கப்பட்ட இந்த படம் மனதை எளிதில் கவரும் வகையை சார்ந்தது.
தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இயக்குனர் யார் என்பதை நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
https://www.youtube.com/watch?v=1P7W_J9Z6LA
படக்குழு”க்கு பாராட்டுகள்…
-
சுதந்திரம்
உடல் ஓய்ந்து விழி மூடும் தருணம் வரை
உழைத்தோம்
விலை ஏதும் இல்லாமல்
அடிமை ஆனோம்
விதியென நம்மை நாமே
நொந்துகொண்டோம்
கடமை இதுவென கவனிக்க
மறந்தோம்
கண்ணியம் கண்ணீரோடு கரைவதை
கண்டோம்
விடியல் ஒருநாள் வருமென
கனவிலும் காண மறந்தோம்
உதித்தது தழல், எழுந்தது சூரியன்
மழைத்துளி முத்துக்கள் ஆவதைபோல
சுதந்திர தாக வித்துக்கள் எங்கும் பரவியது
எடுக்கவும் முடியாமல்
கோர்க்கவும் முடியாமல்
வெள்ளை பட்டாளங்கள் வெறிகொண்டு ஓடியது
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று
ஆடுவோமே பள்ளு பாடுவோமே
என்று பாரதி சுதந்தரகாற்றை
சுதந்திரத்துக்கு முன்னமே சுவாசித்துவிட்டான்
வீதியில் வீணே விடப்பட்டு
நாமே எடுத்துகொண்டதல்ல சுதந்திரம் ;
விதியோடு போராடி
வீர மரணமெய்து எடுத்துவந்ததே
நம் இந்திய சுதந்திரம் !!!
அன்னார் இன்னார் என கூறி
சிலரையோ பலரையோ விடுவதற்கில்லை
ரத்தம் சிந்தவும் உயிரை துறக்கவும்
துணிந்த ஓவ்வோரு இந்தியனும் வீரனே
போராட்ட கூட்டத்தில் கடைசியாய் நின்றாலும்
இறுதிவரை பாரததாய் மீது பற்று கொண்ட
ஓவ்வோரு இந்தியனும் வீரனே
பாரததாய் மீது பற்று கொண்ட ஓவ்வோரு இந்தியனும் வீரனே
– பூபால அருண் குமரன் . ரா