Category: CollegeLife

  • திருச்செந்தூர் பயணம்

    பழைய மாணவர்கள் சங்க சந்திப்புக்கு பின் திருச்செந்தூர் சென்றோம். அதன் நினைவுகளை சற்று இங்கே தெளிக்கிறேன்.

    பழைய மாணவர்கள் சந்திப்புக்கு பின் உவரி செல்வது வழக்கம். ஆனால் தற்போது திருச்செந்தூர் என்று முடிவானது.

    ஜான், நான்(பூபாலன்), அசோக், டல்ஹௌசி, வைரவன், ராம் குமார்.. தயாரானோம்.

    ஜான், அசோக், டல் மூவரின் பைக்கில் நான், வைரவன், ராம்குமார்.

    Nice (1)Nice (2)

    ஜானும் நானும் நாசரேத் சென்று அங்கே ஜானின் அலுவலத்தில்(WI5 இணைய வழங்குனர்) கொஞ்சம் வேலைகளை முடித்துவிட்டு பின் திருச்செந்தூர் சென்றோம்.

    நாங்கள் இருவரும் செல்லும் முன் அங்கே மற்றவர்கள் சென்று இருந்ததால் கிட்டதட்ட முப்பது முறைக்கும் மேலாக எங்கே இருக்கிறீங்கள் என்று கேட்டுகொண்டு இருந்தனர்.

    Nice (6)Nice (7)Nice (5)

    Nice (8)

    பின்பு கொஞ்சநேர கடற்கரை உலாவுக்கு பின் டல்ஹௌசியும் வைரவனும் கடலின் அலைகளோடு மூழ்கி எழுந்தனர்.

    Nice (16)

    அதற்குள் ஜான் “வீட்டுக்கு போகணும், அப்பா அடிப்பாங்க” என்று கெஞ்சினான். “சரி, பத்திரமா போய்ட்டு வா” என வழியனுப்பி வைத்தோம்.

    Nice (18)Nice (10)

    அதன்பின் டல்ஹௌசி,வைரவன் முருகனை சந்தித்து வந்தனர். இருவரும் வரும்முன் நாங்கள் மூவரும் சில கடைகளுக்கும் புகுந்து வேட்டை ஆடினோம்.

    Nice (22)Nice (24)Nice (28)

    ஐவரும் சந்திக்கும் போது மாலைமலர் செய்திதாள் படித்துகொண்டு இருந்தனர் அங்கு சிலர். தற்போது இரு பைக் மட்டுமே உள்ளது. ஆனால் ஐந்து பேர்…

    இருந்தாலும் திசையன்விளை வந்து சேர்ந்துவிட்டோம். வந்து பார்க்கும்போது தான் தெரிந்தது நம்ம ஜான் ஒரு போட்டோவுக்கு கூட போஸ் குடுக்கல. அதான் கல்லூரிவிழாவில் நடித்த நாடகத்தில் இருந்து ஒரு காட்சியில் பில்லா-வாக ஜான்…

    DSC_1759

    வலப்பக்கம் பில்லாவை மிரட்டுபவர் போலீஸ் ஆபீசர் டக்டீஸ் (எ) டல்ஹௌசி பிரபு.

    மதியநேரத்தில் கொம்மடிகோட்டையில் இருந்து திருச்செந்தூர் வரும்போது குலசை பாதையையும், மாலைநேரத்தில் உடன்குடி பாதையையும் உபயோகித்தால் காவலர்களுக்கு தண்டம் கட்ட தேவை இருக்காது.

    (திருச்செந்தூர் பலமுறை சென்றிருந்தாலும் இந்தமுறை பெற்ற அனுபவம் இதுதான்)…

    This work is licensed under a Creative Commons license.
  • Alumni Meeting – 2012

    வணக்கம் நண்பர்களே,

    ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15”ம் தேதி கொம்மடிகொட்டை கல்லூரியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழும். அங்கே எடுத்த சில புகைப்படங்களை பகிர்கிறேன்.

    Alumni2012 (2)

    Alumni2012 (3)Alumni2012 (4)

    Alumni2012 (5)Alumni2012 (8)

    Alumni2012 (6)Alumni2012 (7)Alumni2012 (15)

    Alumni2012 (14)

    Alumni2012 (10)Alumni2012 (11)

    Alumni2012 (12)Alumni2012 (13)

    Alumni2012 (1)

    பழைய மாணவர்கள் சந்திப்பை முடித்துவிட்டு திருச்செந்தூர் சென்று வந்தோம். அடுத்த பதிவில் அந்த புகைப்படங்களை காணலாம்…

    This work is licensed under a Creative Commons license.
  • Alumni – 2012

    வணக்கம் நண்பர்களே,

    பழைய மாணவர்கள் சந்திப்புக்காக வரும் ஆகஸ்ட் மாதம் 15”ம் நாள் நம் கல்லூரிக்கு வருமாறு SJSC மாணவர்கள் அனைவரையும் கேட்டுகொள்கிறோம்.

    Banner1

    Banner2

    நண்பர்களே ஆகஸ்ட் 15”ல் நம் கல்லூரியில் சந்திப்போம்…

    This work is licensed under a Creative Commons license.
  • ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்

    ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படும் நாள் மட்டும் ஆசிரியர்கள் கொண்டாடப்படுவதில்லை.

    ஆசிரியர்கள் இன்றி வாழ்க்கை யாருக்கும் ஆரம்பம் ஆவது இல்லை.

    கற்றது உலகளவே இருந்தாலும் நீ இன்னும் கற்று கொள்ள மற்றொரு உலகளவு விஷயம் இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

    இன்று புதிதாக அறிமுகம் ஆன ஒருவரிடம் கூட நாம் கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கிறது. கற்றுகொடுக்கவும் நம்மிடமும் பல விஷயங்கள் இருக்கிறது.

    கல்லூரி ஆசிரியர்கள் நம் நினைவில் இருந்து மறைவது கடினம். ஆம், நம் ஆட்டம் பாட்டம் அறிந்த ஆசிரியர், கனவை பகிர்ந்து கொள்ள , நினைவை பங்கு கொள்ள, நம் நடிப்பை பார்த்து சிரிக்க, நாம் விடும் கதைகளை நம்பியதை கூறி நமக்கு திருப்தி கொடுத்த, நட்பின் பிரிவை இணைக்க என பலவிதமான ஆசிரியர்கள்…

    ஒவ்வொருவரும் தனக்கே உரித்தான பாணியை கொண்டு கற்பித்தார்கள்.

    இன்னும் கற்பிக்கிறார்கள்…

    கல்லூரி என்றாலே நினைவில் வரும் மறக்க முடியாத சில ஆசிரியர்கள் மகேஷ்குமார், கருப்பசாமி, மகேஸ்வரி, ஜெயகலா, சுமதி, முத்து குமாரி,  சுகுணா,அமுதா, ஜாஸ்மின், சித்திரைகுமார், ராஜா ராம், பாலகிருஷ்ணன், வைட்டன் ஆகியோர். இவர்கள் மற்றுமின்றி இன்னும் இருகிறார்கள். சிலர் வகுப்பு வந்து பாடம் எடுக்கவில்லை என்றாலும் மனதில் மறக்க  முடியாத இடம் பிடித்தவர்கள்…

    அனைத்து படங்களையும் பார்க்க இங்கே தொடவும்…

    ஆசிரியர்கள் என்ற சொல்லுக்கு நண்பர்கள் என்ற பொருளை தந்த ஆசிரியர்களின் சில புகைப்படங்கள் இதோ :

    அனைத்து படங்களையும் பார்க்க இங்கே தொடவும்…

    கல்லூரி ஆசிரியர்கள் அனைவருக்கும் மாணவர்களின் இதயம் கனிந்த ஆசிரியர்கள் தின நல்வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்…

  • பழைய மாணாக்கர்கள் சந்திப்பு – 2011

     

    இது நிச்சயம் மகிழ்ச்சி பொங்கும் தருணம். பலநாட்களாக திட்டம் போட்டு

    அவரவர்களுக்கு தகவல் சொல்லி , தொடர்பில் இல்லாத நட்புகளுக்கு பலவாறு கூற

    முயற்சி செய்தும் , அப்படியும் இப்படியுமாக திரட்டிய நட்புகளை பழைய மாணவர்கள்

    சந்திப்பு நிகழ்ச்சியில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

    DC (40)

    அசோக், டல்ஹௌசி பிரபு, ரவி, நான்(பூபாலன்) மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் சரியாக 10.15 க்கு கல்லூரி வாசலை அடைந்ததும் அங்கே வரவேற்றது இசக்கிமுத்து, ஜான், வைரவன், சுப்பையா, ராம்குமார் மற்றும் சில தோழிகள்.

    DC (14)

    ஜானுடன் நமக்கு நன்கு பரிச்சயமான பிரகாஷ் வந்திருந்தான்.

    DC (9)

    எங்கள் அண்ணன் வீர சிங்கம் சிவராம் அவர்களும் அவருடன் அலிஸ்டர் அவர்களும் வருகை தந்திருந்தார்கள். மேலும் ஜெயதீபன், கண்ணன், விஜயகுமார், சுரேஷ், ஆல்வின் , ராம்குமார் ஆகியோரும் இன்னும் பலரும் வந்திருந்தனர்.

    DC (42)

    ஒரு வருடமே நம் கல்லூரியில் படிந்து பின் பொறியியல் படிக்க சென்ற அமுதா, அவளது தோழி ராஜி மற்றும் எங்களுக்கு பரிச்சயம் இல்லாத தற்போது முடித்தவர்கள் சிலரும் வருகை தந்திருந்தார்கள்.

    DC (23)

    சின்ன தங்கம், ராணி ராம்பாலா , பிரவீன் குமரன், ஜெய சந்திரன், மெய்கண்டன், அசோக் லிங்கம் இன்னும் சிலர் வர முடியவில்லை என வருத்தம் தெரிவித்தனர். அடுத்தவருடம் அவர்கள் கண்டிப்பாக வர வேண்டும் என இந்த பதிவின் மூலம் கேட்டுகொள்கிறேன்.

    கல்லூரி வாசலை கிடந்து உள்ளே சென்றதும் எங்களை வரவேற்றார் கணிபொறி தலைமை ஆசிரியர் கருப்பசாமி அவர்கள்.

    DC (5)

    அவரை தொடர்ந்து உடற்பயிற்சி ஆசிரியர் சித்திரைகுமார் , தமிழ் ஆசிரியர் பாலகிருஷ்ணன், மற்றும் வணிகவியல் ஆசிரியர் வைட்டன்( Whittan ) ஆகியோரை சந்தித்தோம்.

    three

    இவர்களை தொடர்ந்து ஆசிரியை ஜெஸ்மின், சுகுணா, ப்ரியா மற்றும் தீபா ஆகியோர்களை சந்தித்த பின் ,

    mam

    எங்கள் சிங்கம், தங்க தலைவர், ஆசிரியர் மகேஷ்குமார் அவர்களை சந்தித்தோம்.

    mahesh

    சற்று நேரத்தில் விளையாட்டு போட்டிகள் ஆரம்பம் ஆனது. ( பெருசா ஒன்னும் இல்லீங்கோ). ஒரு பந்தை ஒன் பிச்ல போட்டு கொஞ்ச தூரத்துல நட்டி வைச்சிருகுற ஒற்றை ஸ்டெம்ப்ல அடிக்கணும். ஒருத்தருக்கு மூணு சான்ஸ். இந்த வீர விளையாட்டை விளையாடி முதல் பரிசை தட்டி சென்றவர் : இசக்கி முத்து அவர்கள்.

    DC (18)

    இது பற்றி அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது : “ நான் இதுக்காக தனியா ஏதும் ப்ராக்டிஸ் பண்ணல. பட் நொவ் என்னால இத நம்பவே முடியல

    இவர் இப்படி கூறவும் அருகில் இருந்து அண்ணன் அசோக் கூறியது, “ எங்களாலயும் தான் நம்ப முடியல

    DM (37)

    அடுத்ததாக போட்டியில் இரண்டாவது பரிசை தட்டிசென்றவர் சுப்பையா கணேஷ். அவரிடம் இது பற்றி கேட்டபோது :: “ நான் போலீசில் சேர்வதற்காக பல பயிற்சி செய்து வந்தேன். இப்போது போலீசில் சேரும் எண்ணத்தை கைவிட்டு விட்டாலும் நான் செய்த அபாரமான பயிற்சிகள் எனக்கு இந்த போட்டியில் ஜெயிக்க உதவி செய்தது.” என்றார்.

    DC (19)

    இவர் பேட்டியை கேட்டதும் அருகில் இருந்த யாரோ “ அப்படியே அறுவடை பண்ணிட்டாலும், ஆணியே புடுங்கவேணாம், முதல்ல கூட்டத்த கலைங்கப்பா ” என்ற சப்தம் இவர் காதில் விழவில்லை. அப்படி சொன்னது அனேகமா இவராதான் இருக்கும்னு சி.பி.ஐ சந்தேக படுறாங்க.

    DC (43)

    சரி அத விடுங்க,

    பின்பு கொஞ்ச நேரம் கல்லூரியில் நாங்கள் படித்த அறைகளின் வாசத்தை சுவாசிக்க சென்றோம். ஒவ்வொரு வகுப்பும் இன்னும் தனக்கே உரித்தான அதே வாசத்தோடு இருந்தது.

    அதன்பின் பழைய மாணாக்கர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது.

    கல்லூரி முதல்வர் நாகராஜ் , ஆசிரியர் மகேஷ்குமார் , கருப்பசாமி ஆகியோர் தலைமை தாங்க நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது.

    DC (17)

    ஆசிரியை ஜாஸ்மின் அவர்கள் வரவேற்பு உரை வழங்கினார்.

    DC (16)

    அதை தொடர்ந்து முதல்வர் நாகராஜ் அவர்கள்பேசினார்.

    DM (13)

    பின்பு ஆசிரியர் கருப்பசாமி பேசினார். அதை தொடர்ந்து மகேஷ்குமார் அவர்கள் தன் உரையை நிகழ்த்தினார். அவர் கூட்டத்தில் இருந்து யாராவது பேச வாருங்களேன் என்றார். நம்ம ஆளுங்க தான் சும்மாவே இருக்க மாட்டாங்களே, என்னை பேச சொல்ல நான் சென்றேன். ( கொய்யால, எதுக்குடா நீ போன? அப்படின்னு மத்தவங்க கேக்குற அளவுக்கு உளறி கொட்டி காமெடி பண்ணினேன் )

    DM (21)

    நம்ம ஜெயதீபன் பேசினான். உண்மையை பேசினான். தோப்பில் தேங்காய் திருடியது முதல் உள்ள அனைத்தையும் என்னை விட நன்றாகவே உளறி கொட்டினான். அமர்ந்திருந்தவர்கள் எல்லாம் “ பட் , உங்க நேர்மை எனக்கு பிடிச்சுருக்கு” என்று சொல்லும் வரை பேசினான்.

    DC (20)

    ஆனா பாசக்கார பய… நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு சென்றதும் எனக்கு போன் செய்து  “அண்ணே, நாம எல்லா வருசமும் இப்படி மீட் பண்ணலாம்”  என்றான்.

    நம் தோழி செல்வப்ரியா பேசினாள். ஆங்கில முன்னேற்றம், கல்லூரி வளாக நேர்காணல் பற்றி பேசினாள்.

    DM (28)

    பின்பு ஆசிரியர் மகேஷ்குமார் அவர்கள் தனக்கே உரித்தான பாணியில் சில கவிதைகள், மேற்கோள்கள் என கலக்கினார். பேசும் போது தாருண்யம் சென்ற நிகழ்வுகளை தன்னால் மறக்க முடியாது என்றார். ஆம், எங்களாலும் மறக்க முடியாத இனிமை பொங்கும் பயணம் அது.

    DM (35)

    இவ்வாறாக பழைய மாணவர்கள் சந்திப்பு ஒரு காப்பி, ஒரு ஜாங்கிரி, ஒரு பப்ஸ், இரு பிஸ்கட்டுடனும் ராம்குமாரின்

    DM (33)

    நிறைவுறையுடனும் இனிதே நிறைவடைந்தது…

    மேலும் புகைப்படங்களுக்கு mr.boobalaarunkumaran@gmail.com என்ற முகவரிக்கு உங்கள் பெயரையும் தொடர்பு தொடர்பு எண்ணையும் தெரியப்படுத்தவும். நட்புக்குள் என்றும் பிரிவே இல்லை. நண்பேன்டா …

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் உவரி சென்று கொண்டாடிய நிகழ்வை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

    என்றும் தீராத நட்புடன்,

    பூபால அருண் குமரன் . ரா

  • அந்நியன் 009 (நாடகம்)

    அந்நியன் திரைபடத்தின் உல்டாவான புதிய அவதாரம் தான் இந்த நாடகம்.
    கதை , ரொம்ப சிம்பிள்..

    அம்பியான   இவர்,

    நந்தினி என்ற

    இவளை காதலிக்கிறார்.

    அம்பியை நிராகரித்து விடுகிறாள் நந்தினி…

    பஸ் ஸ்டாப்பில் ரெமோவை சந்திக்கிறாள் நந்தினி. 

    இருவருக்கும் காதல் மலர்கிறது.

    இதையறிந்த அம்பி அந்நியனின் இணையத்தளத்தில் இதைப் பற்றி எழுதுகிறான்.

    ஒருநாள் நந்தினி ரேசன் கடையில் மண்ணெண்ணெய் வாங்கி ப்ளாக்கில் விற்க வேகமாக செய்கிறாள். அந்நியன் இடைமறித்து மண்ணெண்ணையை ப்ளாக்கில் விற்பது தவறு என நந்தினியை கொலை செய்கிறான்.

    இதையறிந்து ரெமோ கொதித்தெழுந்து அந்நியனிடம் “ஏண்டா நந்தினியை கொன்றாய்? ” என கேட்க அந்நியன் காரணத்தை சொன்னதும் ரெமோ சரியென கிளம்பி விடுகிறான்.
    அந்நேரம் அங்கு கல்யாண வீட்டில் மூன்று பந்தி சாப்பிட்டு வந்த பாடிசோடாவை,

    “நீ செய்தது தப்பு” என கூறி கொன்று விடுகிறான் அந்நியன்.

    பின்பு

    ” அனைவரும் C + + புத்தகத்தின்படி தண்டிக்கப் படுவர் ” என்ற எச்சரிக்கையுடன் நாடகம் நிறைவடைகிறது.

    நடந்தது அனைத்தையும் தனது கமிஷ்னர் அறையில் இருந்து தன் கூர்மையான பார்வையால் கவனித்துக் கொண்டு இருக்கிறார் கமிஷ்னர் கந்த சாமி…
    தான் வந்தால் அந்நியனை கொலை செய்து தான் பிடிப்பேன் என்று சொன்னதால் இவரை நாடகத்துக்குள் கொண்டு வராமலே நாடகம் நிறைவடைந்தது.

    :: நாடகத்தின்  ஒளிவடிவம் ::

    [youtube=http://www.youtube.com/watch?v=BXoMiszkOcQ]

    முழு திரையில் காண :: இங்கே :: சொடுக்கவும்.

    இந்த நாடகம் 2008ம் ஆண்டு கல்லூரி தினவிழாவில்அரங்கேற்றப்பட்டது. நாடகத்தில் மிகவும் ரசிக்கதக்கது என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ,
    1. பாடி சொடாவின் ஆட்டம்.
    2. “நீ கொன்னா கூட குத்தமில்ல” என்ற பாடல் வரும் இடம்.
    3. நாடகத்தின் இறுதி வசனம்.

    நாடக குழுவினர் :

    அம்பி                                —  சுடலை மணி
    அந்நியன்                        —  தீபன்
    ரெமோ                             —  ரூபன்
    நந்தினி                            —  பிரவீன்
    பாடிசோடா                    —  கண்ணன்
    கந்தசாமி                        —  விஜயகுமார்

    மேலும் சில நிழற்படங்கள் :

    நன்றி…

    என்றும் தீராத நட்புடன்,

    ரா . பூபால அருண் குமரன்…

  • இளைஞர் கலைவிழா – விபரீதம்

    நாளை கல்லூரியில் (12-10-07) இளைஞர்கள் கலைவிழா கொண்டாட்டம். ஆனால்  நடந்தது விபரீத விளைவு.

    இளைஞர் கலைவிழாவுக்காக நடனம் ஆட நான், முதலாம் ஆண்டு பிரவீன் மற்றும் சிலர் பயிற்சி செய்து கொண்டு இருந்தோம்.

    பயிற்சி செய்ய அறைகள் இல்லாததால் நாங்கள் ஒரு வகுப்பறையில் பயிற்சித்தோம்.

    அந்நேரத்தில் அங்கு வந்த முதலாம் ஆண்டு நடனம் ஆடும் மாணவிகள் நாங்கள் “அப்படி என்னத்த தான் ஆடி கிழிக்கிறோம்”னு பார்க்க வந்தார்கள்.

    எங்களுக்கு ஒரே  வெட்கம். அது மட்டுமில்லாம நாங்க ஆடுறது பாத்து எங்களோட நடன அசைவுகளை அவங்க சுட்டுஅவங்களோட ஆட்டத்துல சேத்துகிட்டாங்கன்னா ?? ( அப்படியே அறுவடை பண்ணிட்டாலும்)

    அதான். நாங்க கொஞ்சம் உஷாரா கதவு மற்றும் ஜன்னல்களை மூடிட்டோம். (அந்த மொக்க கதவ மூடினாலும் ஒண்ணு தான் மூடாட்டியும் ஒண்ணுதான்) இருந்தாலும் அவங்க கதவை தள்ளிக் கொண்டு கதவை திறக்க முயற்சிக்க, நாங்க ஏதோ அறிவாளிதனம் என்று எண்ணி கதவை அறையின் உள்பக்கம் இருந்து இறுக்கமாக மூடமுயற்சி செய்தோம். அவர்களும் எங்களுக்கு இணையாக வெளியில் இருந்துஉள்ளே தள்ள முயற்சித்தனர்.

    விளைவு, முதலாம் ஆண்டு BCA மாணவி அமுதாவின் கையில் உள்ள சதைபிடிப்பு கதவின் இடையில் மாட்டிக்கொண்டது.

    மாணவிகள் அனைவரும் சப்தம் போட, ஏதும் அறியாத நாங்கள் உள்ளிருந்து மேலும் வேகமாக பூட்ட முயற்சித்தோம். சற்று நேரத்தில் நாங்கள் வலுவை குறைத்துகொண்டு வெளியே வந்தால் , அதிர்ச்சி..

    அந்த பெண்ணின் கண்களில் மயக்கத்தையும், சுற்றி இருந்த அவள் தோழிகளின் கண்களில் தீயையும் பார்த்தேன்.

    நாங்கள் செய்வது அறியாது திகைத்த போது விஷயம் மேலிடம் சென்றது. கல்லூரி முதல்வர் மகேஷ்குமார் வந்தார். அமுதாவுக்கு முதலுதவி கொடுக்கப்பட்டு வீட்டிக்கு செல்ல உத்தரவு இடப்பட்டது.

    கல்லூரிக்கே விஷயம் தெரிந்தது. என்னிடம் வந்து அனைவரும் என்ன செய்தாய் ? கொலை கேஸ் ? என மிரட்டினர்.

    நடுவுல நம்ம நாட்டாமை வந்து,
    எந்த பிரச்சனைக்கும் போகாதன்னா கேட்குரியா ?? தலை விதிடா என்று நொந்து கொண்டார்.

    மூன்றாம் ஆண்டு பர்வின் அக்கா ” நீ தான் மெயின் குற்றவாளியாமே” என்று கலாய்க்க,

    கணிணி துணைஆய்வாளர் ஜெயகலா ஆசிரியரும் நடந்ததை தெரிந்து விசாரணை நடத்தினார்கள்.

    இப்படியாக  அன்றைய பொழுது நிறைவடைந்தது.

    அடுத்த நாள் : கல்லூரியில் இளைஞர் கலைவிழா (12-10-2007)

    அமுதா காயத்துக்கு மருந்திட்டு வந்திருந்தாள். பேசினேன். மன்னிப்பு கோரினேன். வீட்டில் என்ன சொன்னார்கள் என்று கேட்டேன்.

    மீண்டும் அதிர்ச்சி என்னை தாக்கியது. (நீங்க ஒன்னும் அதிர்ச்சி ஆகாதீங்க ) அவள் வீட்டில் மற்றவர்களை சமாளித்து விட்டதாகவும், அவளுடைய பாட்டி மட்டும் கெட்ட வார்த்தைகளில் திட்டியதாகவும் கூறினாள். ( என்ன வார்த்தைன்னு மட்டும் என்கிட்ட கேட்டுடாதீங்க )

    அடிபட்ட உடன் அவளது தோழி ராஜி கோபமாக என்னை பார்த்து முறைத்தபடி சென்றாள். மறுநாள் சமாதனம் ஆகிவிட்டோம்.

    இப்படியாக பல நிகழ்வுகளுக்கு பிறகு அந்த தோழிகள் ஆடிய பாடல் :: புதுபேட்டை படத்தில் இடம் பெறும் “வரியா வரியா”… ( குறிப்பு : மேலே படத்தில் உள்ள நடனம் கல்லூரி நாள் விழாற்கு ஆடியது. “வரியா” பாடல் அல்ல)…

    இந்நாளின் நிகழ்வுகள் பற்றி என் நாளேட்டின் குறிப்புகளை காண :: இங்கே :: செல்லவும்.

    இப்படிக்கு

    என்றும் நட்புடன் உங்கள் நண்பன்

  • பழைய மாணவர்கள் சந்திப்பு

    பழைய மாணவர்கள் சந்திப்பு ஒவ்வொரு வருடமும் “ஆகஸ்ட் 15ம் நாள்” நம்

    கல்லூரியில் வைத்து நடைபெறும்.

    கல்லூரிப் படிப்பை முடித்த கையோடு அந்த வருடம் மட்டும் சந்திப்பில் கலந்து

    கொண்டது தான். . .

    உறவுகளும் பிரிவுகளும்

    வாழ்வின் வழிநெடுக

    நம்மை உரசியபடி கடந்து செல்லும்.

    ஆனால் நாம் அந்த பிரிவுகளை

    முழுமையாக ஏற்றுக்கொண்டாலும்

    கடந்து செல்லும் பிரிவுகளை திரும்பிபார்க்கும்

    வாய்ப்பு அனைவருக்கும் அமைவதில்லை.

    அப்படிப்பட்ட ஒரு வாய்ப்புதான் இந்த பழைய மாணவர்கள் சந்திப்பு…

    வரும் ஆகஸ்ட் 15, 2011 அன்று 2009ல் வெளிவந்த மாணவர்கள் சந்திக்க ஒரு திட்டம்

    போடப்பட்டு உள்ளது.

    அனைவருக்கும்  தகவல் சொல்லப்பட்டுள்ளது. சிலர் அலுவல் காரணமாக வர முடியாது

    என்றும் சிலர் சில்லறை காரணமாக வர முடியாது என்றும் கூற இன்னும் பல நண்பர்கள்

    “நான் நிச்சயம் வருவேன்.நாம் சந்திக்கலாம்” என்று நம்பிக்கை கொடுக்கின்றனர்.

    சில தோழமைகளுக்கு தகவல் சொல்லக் கூட முடியவில்லை. இருந்தாலும் சொல்ல

    முயற்சிகள் நடைபெறுகிறது.

     

    இந்த வருட சுதந்திர தினவிழாவை பழைய மாணவர்கள் சந்திப்பில் கொண்டாட

    கல்லூரிக்கு வருமாறு SJSCன் பழைய மாணவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

    வருக வருக வருக…

  • பொங்கல் தினவிழா_முதலாமாண்டு

    வழக்கமாக எல்லா கல்லூரிகளிலும் கல்லூரி தினம், பேருந்து தினம், பாரம்பரிய உடைஅணியும் தினம் என பலவாறு கொண்டாடப் படும்.

    சற்று வித்தியாசமாக எங்கள் கல்லூரியில் பொங்கல் தினவிழா கொண்டாடப்படும்.

    பொங்கல் தினத்திற்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பு கல்லுரியில் வைத்து ஒவ்வொரு வருட மாணவர்களும் அவரவர் வகுப்புகளில் தனித்தனியே பொங்கல் பொங்குவார்கள். எந்த வகுப்பில் முதலில் பொங்கல் பொங்கும் என் சின்ன போட்டியும் நடைபெறும்.

    இந்த வழக்கத்தை கல்லூரியில் அறிமுகப்படுதியவர் : கல்லூரியின் முன்னாள் முதல்வர் திருமதி மகேஸ்வரி அவர்கள்.

    தற்போது SCSVMV பல்கலைகழகத்தில் பணி புரிந்து வருகிறார்.

    முதலாம் ஆண்டு பொங்கல்தின விழாவின் நடந்த கலாட்டாக்களை இங்கே காணலாம். வரும் பதிவுகளை மற்ற வருடங்களின் அனுபவங்களை காணலாம்.

    முதலாம் ஆண்டில் பொங்கல் தினத்தில் எங்களை வழி நடத்தியவர் எங்கள் வகுப்பு ஆசிரியர் கருப்பசாமி. அவர் இவர் தான். சிங்கம்ல…

    எங்களுக்கு முதலாம் ஆண்டு என்பதால் பொங்கல்தினம் பற்றி அதிகம் ஆர்வம் இருந்தது. முதலாம் ஆண்டில் பொங்கல் தினவிழா கொண்டாட நாள் குறிக்கப்பட்டவுடன், ஒவ்வொரு வகுப்பும் பரபரப்பானது. கல்லூரியே பொங்கலுக்கு தயாரானது.

    பொங்கல்தின விழா நடைபெறும் தினம் காலை வழக்கம் போல கல்லூரி ஆரம்பமானது. முதல் வகுப்பு ஆரம்பமானது. ஆனால் பாடம் நடத்தவில்லை. அட்டகாசமாக வகுப்புகள் அலங்கரிக்கப் பட்டது. அலங்காரங்களுடன் கூடிய வகுப்பறை அந்நியமாக தெரியவில்லை. காரணம் எங்கள் வகுப்பறை எப்போதும் அப்படிதான் இருக்கும்.

    நேரம் பத்தில் அடித்து பதினைந்தில் தொங்கிக் கொண்டிருக்கும் போது மாணவர்களில் சிலர் பொங்கல் பொங்க தேவையான அனைத்தையும் வாங்க கிளம்ப தயாரானார்கள். அருகில் இருக்கும் திசையன்விளை சந்தைக்கு சென்று  கரும்பு , பொங்கல் பானை, சர்க்கரை , அது இது என அனைத்தையும் வாங்கிவிட்டு திரும்பிய பின் பொங்கல் விழா இனிதே நடைபெற ஆரம்பம் ஆனது.

    இதோ எங்கள் வகுப்பு ஆசிரியர் கருப்பசாமி அவர்கள் சர்க்கரையை பொங்க பானையில் போட தயாராகிவிட்டார். அவரருகே அவருக்கு உதவியாக வகுப்புத் தோழிகள்.

    இடப்பக்கம் கையில் கட்டையோடு இருப்பவர் முத்துலெட்சுமி. வலப்பக்கம் சுமிதாஆனந்தி, நித்யா , பிரேமா, பிரபாவதி, பவானி.

    பின்புலத்தில் கரும்புகட்டு (ஐந்து மட்டுமே) தூக்கிக்கொண்டு போவது பூபால அருண் குமரன் , அருகில் புன்னகையுடன் நண்பன் வைரவன்.

    சர்க்கரை இனிதே போடப்பட்டு விட்டது. இனி என்ன கொஞ்ச நேரத்தில் ரெடியாகிவிடும் மணக்க மணக்க இனிக்க இனிக்க பொங்கல். ஆம், இதோ பொங்கல் பொங்கி விட்டது.

    பொங்கிய பொங்கல் வகுப்பறைக்கு இடம் மாற்றப்பட்டு ஆசிரியர் ஸ்ரீதர் அவர்களால் இறைவனுக்கு படைக்கப் பட்டது.

    பின்பு கல்லூரி முதல்வருக்கு பொங்கல் கொடுக்கப்பட்டது.பின் ஏனைய ஆசிரியர்களையும் வகுப்பு அழைத்து பொங்கல் பரிமாறப் பட்டது.

    (இடப்பக்கத்திலிருந்து) ஸ்ரீதர் ,சுரேஷ் குமார்,  ராஜாராம், கிருஷ்ண மூர்த்தி.

    பின்பு ஒவ்வோரு வகுப்பும் தங்களுக்குள்ளாகவே பரிமாறி உண்டும், மற்ற வகுப்பு மாணவர்களை அழைத்து அவர்களுக்கு கொடுத்தும், மற்ற வகுப்புகளுக்கு சென்று அவர்களுடன் சேர்ந்து நாங்கள் உண்டும் என பொங்கல்  வயிற்றை மட்டும் இன்றி மனதையும் நிறைத்து விட்டது.

    பின்பு எங்கள் வகுப்பு மாணவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
    தெளிவாக இல்லை என்றாலும் மனதில் அழியாமல் இருக்கும் நிழற்படம்.

    இவ்வாறாக பொங்கல் விழா இனிதே நிறைவடைந்து மனநிறைவுடன் அனைவரும் வீட்டுக்கு கிளம்ப, ஆசிரியர் ஸ்ரீதர், கிருஷ்ண மூர்த்தி ஆகியோருடன் ஒரு புகைப்படம் எடுத்தவாறு நாங்களும் கிளம்பினோம்.

    இவ்வளவு நேரம் நடந்த விழாவில் ஒருவர் மட்டும் காணவில்லை :: ராம் குமார். அடுத்த பொங்கல்விழாவில் அவனுடன் சேர்ந்து செய்த கலாட்டாகளுடன் மீண்டும் சந்திக்கலாம்.

    என்றும் நட்புடன், உங்கள் நண்பன்…

  • இது நியூ ஏஜ் ஆத்திசூடி…

    மூன்றாம் வருட கல்லூரிநாள் விழாவில் நண்பர்களுடன் சேர்த்து கலக்கிய ஒரு குத்தாட்டம்…

    [vimeo http://vimeo.com/16340750 w=400&h=300]

    நடன குழுவினர்கள்:
    முன்வரிசையில்,
    பிரவீன் குமரன் (இடம்), டல்ஹௌசி பிரபு(வலம்).
    பின்வரிசையில்,
    பூபால அருண் குமரன் (இடம்), தளவாய்(வலம்).
    இடையில்  வந்து கலக்குபவர், சிவராஜ்.

    இந்த நடனம் ஆட பெரிதும் உதவியது சாத்தான்குளம் என்ற சற்றே பெரிய கிராமத்தை சேர்த்த அனிஷ் மற்றும் ஜாக்கப் சகோதரர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    இந்த பாடலுக்கு நடனம் பழகிக் கொண்டு இருந்த போது வந்து பார்வையிட்டு குறைகளை நிறையாக்க பாடுபட்ட உள்ளங்கள்,

    இவர் தான் இசக்கி முத்து. ஒரு சிறந்த பேச்சாளர். (Why Blood, Same Blood)…
    அடுத்து,

    இவர் ரவிபாலன். இடப்பக்கம் அமர்த்து இருப்பவர் அஷோக். வலப்பக்கம் சுப்பையா கணேஷ். முகம் காட்டாமல் ஒரு நடன அசைவை செய்து காட்டி கொண்டு இருப்பவர் ஜான் வில்லியம் ராஜ். அது இவர் தான்.

    இவர் தான் விஜேந்திரன். டான்ஸ் மாஸ்டர் (aka) டீ  மாஸ்டர். நடனம் இவருக்கு கால் வந்த கலை. அட , சத்தியமாங்க. தளவாய் சரியாக ஆடுகிறானா என்று கவனித்துக் கொண்டு இருக்கிறார்.

    இவர் ஆடி களைத்து போய் அமர்த்து இருக்கிறார். மேலும் சில புகைப்படங்கள்,
    பெரிதாக்க  படத்தை தொடவும்…

    நன்றிகளுடன் உங்கள் நண்பன்…