Author: boobalaarun

  • நீதி , கதை…

    விவேகானந்தர் ரயில் பிரயாணத்தின் போது சௌகரியமாக செல்வார் எப்போதும் . இராண்டாம் வகுப்பை தேர்வு செய்து ரயிலில் சென்றார் .

    அங்கிருந்த வெள்ளைகாரனுக்கு இவரை பிடிக்கவில்லை. காவி உடை அணிந்தவர்கள் மீது அவன் மதிப்பு குறைவாகவே இருந்தது . எங்கே ஆங்கிலம் தெரியப்போகிறது என ஆங்கிலல் திட்டினான் .

    விவேகானந்தர் குட்டி தூக்கம் ஒன்று போட்ட  பின்னர் அவரின் சப்பாத்துக்களை தூக்கி அவன் வெளியே எறிந்து விட்டான் ..

    சிறிது நேரத்தில் எழுந்த விவேகானந்தர் அவன் தான் எறிந்திருப்பான்  என  உணர்ந்தார் . சிறிது நேரத்தில் வெள்ளைக்காரன்  உறங்க சென்ற பின் அவன் மேலங்கியை விவேகானந்தர் வெளியே எறிந்து விட்டார் .

    வெள்ளைக்காரன் எழுந்து தன் மேலங்கி எங்கே ன்று கேட்க  ” அது எனது சப்பாத்துகளை தேடி போய் விட்டது” என ஆங்கிலத்தில் கூறினார் .

    –__–__–__–__–__–__–__–__–__–
    ஒருவன் கடலுக்கு மீன் பிடிக்க கிளம்பும் தன் நண்பனிடம் கேட்கிறான், “உனது தாத்தா எப்படி இறந்தார்?”.
    அவன் கூறினான் “படகு கவிழ்ந்து கடலில் மூழ்கி இறந்தார்”.

    “சரி, உனது அப்பா எப்படி இறந்தார்?”, “அவரும் அப்படித்தான் மூன்று நாட்கள் கழித்துதான் அவரது சடலம் கிடைத்தது” என்றான்.
    இவனுக்கு ஒரே ஆச்சரியம், “உனது குடும்பம் முழுவதும் கடலில் மூழ்கி இறந்தும் உனக்கு கடலைப் பார்த்து பயமில்லையா?” என்றான்.
    அவன் திருப்பி கேட்டான், “உனது தாத்தாவும், அப்பாவும் எப்படி இறந்தார்கள்?”. “அவர்கள் மூப்பெய்தி, நோய்வாய்பட்டு படுக்கையில் கிடந்து இறந்தார்கள்” என்றான். அப்போ படுக்கையை பார்த்தால் உனக்கு பயமாக இல்லையா?.
     –__–__–__–__–__–__–__–__–__–

    இரு கதைகள் அனைவரும் அறிந்ததே என்றாலும் நான் படித்தது
    இங்கேயும் , இங்கேயும் தான்.

    என்றும் அன்புடன் நான், உங்கள் நண்பன்

  • இது நியூ ஏஜ் ஆத்திசூடி…

    மூன்றாம் வருட கல்லூரிநாள் விழாவில் நண்பர்களுடன் சேர்த்து கலக்கிய ஒரு குத்தாட்டம்…

    [vimeo http://vimeo.com/16340750 w=400&h=300]

    நடன குழுவினர்கள்:
    முன்வரிசையில்,
    பிரவீன் குமரன் (இடம்), டல்ஹௌசி பிரபு(வலம்).
    பின்வரிசையில்,
    பூபால அருண் குமரன் (இடம்), தளவாய்(வலம்).
    இடையில்  வந்து கலக்குபவர், சிவராஜ்.

    இந்த நடனம் ஆட பெரிதும் உதவியது சாத்தான்குளம் என்ற சற்றே பெரிய கிராமத்தை சேர்த்த அனிஷ் மற்றும் ஜாக்கப் சகோதரர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    இந்த பாடலுக்கு நடனம் பழகிக் கொண்டு இருந்த போது வந்து பார்வையிட்டு குறைகளை நிறையாக்க பாடுபட்ட உள்ளங்கள்,

    இவர் தான் இசக்கி முத்து. ஒரு சிறந்த பேச்சாளர். (Why Blood, Same Blood)…
    அடுத்து,

    இவர் ரவிபாலன். இடப்பக்கம் அமர்த்து இருப்பவர் அஷோக். வலப்பக்கம் சுப்பையா கணேஷ். முகம் காட்டாமல் ஒரு நடன அசைவை செய்து காட்டி கொண்டு இருப்பவர் ஜான் வில்லியம் ராஜ். அது இவர் தான்.

    இவர் தான் விஜேந்திரன். டான்ஸ் மாஸ்டர் (aka) டீ  மாஸ்டர். நடனம் இவருக்கு கால் வந்த கலை. அட , சத்தியமாங்க. தளவாய் சரியாக ஆடுகிறானா என்று கவனித்துக் கொண்டு இருக்கிறார்.

    இவர் ஆடி களைத்து போய் அமர்த்து இருக்கிறார். மேலும் சில புகைப்படங்கள்,
    பெரிதாக்க  படத்தை தொடவும்…

    நன்றிகளுடன் உங்கள் நண்பன்…

  • How does a Capacitor block DC ?

    இது தாங்க உண்மை. ஆனா இப்படி எழுதினா மார்க் போட  மாட்டேன்குறாங்க…

    நீங்க தான் பார்த்துட்டு ஒரு தீர்ப்பு சொல்லணும்…

    என்ன நாட்டாமை, தீர்ப்புக்கு ரெடியா…

  • தில்லுபரு ஜானே…

    நட்புகளுக்கு வணக்கம்,

    இரண்டாம் வருட கல்லூரி விழாவில் என் வகுப்பு தோழிகள் கலக்கிய ஒரு நடனம் தான் இந்த தில்லுபரு ஜானே……

    இந்த நடனத்தில் நான் கொஞ்சம் கூடுதலாக ரசித்தது கடைசி 15 நிமிடங்கள் தான்.  இளையராஜா தன்னுடைய பெயரை இந்த பாடலிலும் பதித்திருப்பது அந்த நிமிடங்களில் யாராலும் உணர முடியும். மேலும் ,

    கலியல் எனும் கலையையும் என் தோழிகள் அதில் முயற்சி செய்து இருப்பார்கள். அது வராமல் போனது இரண்டாவது மேட்டர்…


    [vimeo http://www.vimeo.com/16743007 w=400&h=300]

    நடன புயல்கள் :

    பிரேமா
    ராணி ராம் பாலா
    விஜய கனகா

    பார்கவி
    முத்து லட்சுமி
    நித்யா

    என்ன பாக்குறீங்க , எல்லாமே நல்ல தமிழ் பெயர்கள் தாங்க…
    ஏன் இதை சொல்றேன்னா இப்ப எங்கங்க இப்படி நல்ல பெயர்களை கேட்க முடியுது.
    சரி அத விடுங்க , ஆட்டம் எப்படி …

    புடிசிருந்தா இன்னொரு முறை பாருங்க , இல்லன்னா இன்னொருவருக்கு சொல்லி அவங்கள பாக்க வைங்க…

    ஓகே வா , நெக்ஸ்ட் மீட் பண்றேன்…

  • நாகரீகம்…

    முதல் தேதி [1955] என்ற தமிழ் திரைப்படத்தில் வரும் இந்த காட்சி நான் ரசித்த காட்சிகளில் ஒன்று.

    1955ம் ஆண்டு வந்த படத்தில் நாளைய நிலை என்ன ஆகும் என்று இன்றைய நிலையை கூறுவது செம சீரியசான காமெடிங்க.

    1955ம் ஆண்டு வந்த படத்தில் நாளைய நிலை என்ன ஆகும் என்று இன்றைய நிலையை கூறுவது செம சீரியசான காமெடிங்க.

    [vimeo http://www.vimeo.com/16404048 w=400&h=300]

    அந்த காலத்துல இருந்து இப்ப வர நாகரீகம் மாறுவது(உடையில் மட்டும்) இதோ உங்களுக்காக:

    உபயம் :   இங்கே   ,   இங்கே   மற்றும்   இங்கே

    இதெல்லாம் டூப்பு. 2010 தான் டாப்பு.

    அட, தூ…

    எக்ஸ்ட்ரா:

    முதல் தேதி படத்தில் இருந்து எனக்கு பிடித்த மற்றுமொரு காமெடி.

    [vimeo http://www.vimeo.com/16400590 w=400&h=300]

    என்றும் அன்புடன் ,
    —-உங்கள் நண்பன்…

  • நெனச்சது ஒன்னு , நடந்தது ??? – (18+)

    18 + னு போட்டதுக்காகவே பதிவை படிக்குற பல பேரு இருக்குற நாடுங்க இது. ஆனா இந்த வீடியோக்கள் நம்ம நாட்டுலதான் 18+…

    சரி நாம விசயத்துக்கு வருவோம்.

    முதல்ல இந்த வீடியோவை பாருங்க ,மற்றதை பிறகு பேசிக்கலாம்.

    [vimeo http://www.vimeo.com/16167816 w=400&h=300]

    இதுல இருக்குற பயபுள்ள நெனச்சது ஒன்னு , ஆனா நடந்தது ???

    சரி அத விடுங்க.  இங்க என்ன நடக்குதுன்னு கொஞ்சம் பாருங்க.

    [youtube http://www.youtube.com/watch?v=Hpml_p18pxc&hl=en&fs=1]

    இது தான் அதிர்ஷ்டம் வந்தால் அர்த்தராத்திரியில் ஹி ஹி ஹி …

  • நட்புகளின் பெயர்களே கவிதையாய் !

    கவிதையில் பல வகைகள் உண்டு. அதில் புது வகைதான் இது.
    வேற ஒன்னும் இல்லங்க. மாணவர்மலர் என்பது பல கல்லூரிகளில் மாணவர்களின் திறமையை புத்தகமாக பதிப்பித்து பத்திரப் படுத்துவது.
    அதுபோல எங்கள் கல்லூரி மாணவர் மலருக்காக, வகுப்பில் உள்ள அனைவரின் பெயரையும் வைத்து நட்பை மையப்படுத்தி எழுதப்பட்ட கவிதை தான் இது…


    அகிலத்தை  சுகிக்
    அன்னையை  வணங்கு !

    லட்சுமிதேவியின்  ஈஸ்வரத்தில்
    தங்கமான  கார்த்திகை  ஒளியாய்
    ஆனந்தம்   பொங்கும்
    பிரியாத  செல்வமாய்
    ராஜாங்கத்தின்  ராணிபோல
    வாழ்வின்  இனிதான  சாந்தியை  பெற
    தோழமையே ,
                                   நீயெனக்கு  தோழனாயிரு…

    கலைகளின்  செல்வியும், வித்யாவின்  விஜயமும்,
    மீனாய்  சீறிப்பாய்ந்து  நிதமும்  நித்திமாய்
    கலாமின்  கனவைப்போல பாரினில் கவியாய்
    பவனி  வரும் ,
                                   சகியே  உன் துணையிருந்தால் !

    அசோகச்  சக்கரத்தின்
    ஆரத்தில் நட்பு !

    பாலன்  குமரனின்
    ராம்ராஜ்யமும்  நட்பு !

    முத்தும்  வைரமும் சேர்ந்த
    மணிமகுடத்திலும்  நட்பு !

    கணேசனின்  தும்பிக்கையும் நட்பு !
    நாளையின்  நம்பிக்கையும்  நட்பு !

    பிரளயத்தின்
    புரிதலும் நட்பு !

    சுற்றித்திரியும்
    ஜீவன்களுக்கு
    தாகம்  தீர்க்கும் நீரும் , நட்பு !

    லீவிலும் நட்பு ; கனாவிலும் நட்பு !

    பிம்பங்களில்
    ரேகைதேடும்
    மானிடர்களிலும் நட்பு !

    பிறப்பிலும் நட்பு ;
    பாவத்திலும் நட்பு;
    திக்கேங்கும் நட்பு !

    கோதையின்  காதலிலும்  நட்பு ;
    ல்வியின் சாரத்திலும் நட்பு ;
    அடடா , உலகெங்கும் நட்பு !

    நட்பிலே ,
    பேதமையுமில்லை !
    பின்னடைவுமில்லை !

    ஜெயத்தின் பாதையில்
    சுகுனங்கள் தர , மல்லிகையின் மணம் வீச
    எங்கெங்கோ  பூத்து  ஒன்றாய்  கூடிய  மலர்மாலை ;
    ஒன்றிரண்டு  உதிர்ந்தாலும்
    உலகெங்கும்  மணம்  வீசும் ,

    TEN DRAGONS & FIRE BIRDS...

    இந்த கவிதை மட்டும் அல்லாமல் இன்னும் இரண்டு சிறுகதைகளும் எழுதி கொடுத்தேன்.. அந்த நேரத்தில் கல்லூரியின் முதல்வர் மாறிவிட்டதால் மாணவர் மலருக்கு முழுக்கு போட்டு விட்டார்கள். கேட்டால் எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை என்று கூறிவிட்டார்கள் ( அவ்வளவு மதிப்பு மிக்க கல்லூரி)…இருந்தாலும் அத்தனை நட்புகளை எனக்கு அறிமுகப்படுத்திய கல்லூரியை மறக்க முடியுமா .. யாராலும் முடியாது.

    நன்றிகளுடன் உங்கள் நண்பன்…

  • பயணமும் நண்பர்களும்…

    நான் எப்ப  ஊருக்கு போனாலும் வரவேற்க , வழியனுப்ப நண்பர்கள் இருப்பார்கள். (எல்லாருக்கும் அப்படிதான் . இதில் என்ன இருக்கு சொல்ல)

    அவர்களை இங்க அறிமுகப்படுத்தத் தான் இந்த பில்டப்பு…
    ( குறிப்பு : வெங்காயம்  சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது )

    இவர் தான் அசோக சக்கரத்தில் இருக்கும் அசோக் என்ற சிங்கம்.

    தொலைதூரக் கல்வியில் MBBS கிடையாது என்ற ஒரே காரணத்துக்காக MCA’வை திருச்செந்தூர்ல ஆதித்தனார் கல்லூரியில் படிக்கிறார்.

    இவருடைய வரலாற்றைத் தான் ‘எந்திரன்’ என்று திரைப்படமாக எடுக்கிறார்கள். இவருடைய கதாப்பாத்திரத்தை தான் ரஜினி நடிக்கிறார்.
    இவர் அடிக்கடி உபயோகிக்கும் சில வார்த்தைகள் : ஊமர் , தெரசா , அடியா, மொக்கைய போடாத, சொன்னு …( அர்த்தமெல்லாம் கேட்க கூடாது )
    என்னுடைய நல்ல நண்பன். பாசக்காரனும் கூட…

    அடுத்து ரவி பாலன்.  பூச்சிக்காட்டு வேங்கை என்பதை  எலி என்று மாற்றிக் கொண்டவர்.

    என்ன பன்றார்னுதெரியலையா…? புல்லோட தன்மையை ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்.

    ஆராய்ந்து முடித்து விட்டார். இப்போது ஆராய்ச்சி கூடத்துக்கு போன் செய்து சில மருந்துகளை வர செய்து  புல்லின் மீது தெளிக்கிறார்.

    காய்ந்த புல்லை பசுமையாக்கி ஓய்வு எடுக்கிறார். அவர் ஓய்வு எடுக்கட்டும். நாம புறப்படலாம்….

  • பயணமும் நண்பர்களும்…

    நான் எப்ப  ஊருக்கு போனாலும் வரவேற்க , வழியனுப்ப நண்பர்கள் இருப்பார்கள். (எல்லாருக்கும் அப்படிதான் . இதில் என்ன இருக்கு சொல்ல)

    அவர்களை இங்க அறிமுகப்படுத்தத் தான் இந்த பில்டப்பு…
    ( குறிப்பு : வெங்காயம்  சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது )

    இவர்  தான் விக்னேஷ் குமரன் என்ற விக்கி,

    திசையன்விளைல வளர்ந்து நிக்குற கட்டிடங்கள் எல்லாத்தையும் கட்டினது நான்தான்’னு  வருங்காலத்துல சொல்ல இப்பவே பாடுபட்டு கொண்டு இருக்கும் ஒரு ஜீவன். இப்பக்கூட அது விசயமா தான் பைக்ல போறாரு.

    “நீ  போயிட்டு வா தல , அப்புறம் பாக்கலாம்”…

    அடுத்தது என் ஆருயிர் நண்பன் கேசவன் (நாராயண கோவிந்தா கோ…விந்தா)

    என்ன ஒருத்தரும் இல்லன்னு பாக்குறிங்க. கடைல வேலை இருக்கும் போது போஸ் குடுக்க முடியாதுல்ல… இப்ப வந்துடுவார் …

    இதோ வந்துட்டார். சார் கொஞ்சம் தள்ளி நில்லுங்க. மறைக்குது…

    தேங்க்ஸ் சார். பாருங்க புள்ளைய எம்புட்டு அழகா கணக்கு பாக்குதுன்னு.
    இவர் மூணு ஈ முடிச்சிட்டு அப்பாவுக்கு துணையா கடைல கணக்கு எழுதுறார்.
    மூணு ஈ”ன்ன ”EEE” ங்க.

    இவரோட ஒரே ஆசை டைடானிக் கப்பலுக்கு கேப்டன் ஆகுறதுதான். ஜேக் பயலோட கிரகம் சரியில்லாம மொத்த கப்பலும் கடலுக்குள்ல போனத கேட்டுட்டு மனசொடிஞ்சி போயிட்டார். அதனால அந்த ஆசைய கை விட்டுட்டார். ஆனாலும் வேலை பார்த்தா,  கப்பல்ல தான் வேலை பார்ப்பேன்னு ஒத்த கால்ல நிக்குறார்.

    அடுத்து  டல்ஹௌசி பிரபு..
    இவங்க  தாத்தா சுதந்திர போராட்ட தியாகி”னு இவன் சொல்லி தான் இவங்க தாத்தாவுக்கே தெரியும். அந்த அளவுக்கு நல்லவன்.

    இவனோட சிரிப்புல மயங்காத பொண்ணுங்களே கிடையாது.( ஓ.. இது தான் அழகுல மயங்கி விழுறதா )

    இவனுக்கு  இருக்கும் பல வேலைகளுக்கு நடுவுல திருநெல்வேலி  ரயில் நிலையத்துக்கு வந்து வழி அனுப்பி வச்சாங்க. உண்மையிலேயே பாசக்கார பய…

    Extra Fittings :::
    இது தான் எங்க ஊர்ல இருக்குற ஒரே ஒரு தியேட்டர்… கணேசன் டாங்கீஸ்  , சாரி டாக்கீஸ்…

    ஜூம் பண்ண கூடாது…
  • பில்லா 007 ( நாடகம் )…

    “பில்லா 007 __ பேர கேட்டவுடனே அதிருதில்ல” அப்படின்னு சொல்லி பெரிய பில்டப் கொடுக்க ஒண்ணுமே இல்லங்க.

    இரண்டாமாண்டு படிக்கும் போது(2008’ல்)  அரங்கேற்றிய நாடகம் தான் இது.
    நாடகத்தின் கதை ,  தலைப்பை பார்த்தே தெரிந்திருக்கும். அங்கு ஆயுத கடத்தல் என்றால் இங்கு பன், பிரெட் , ஜாம். . .
    வசனங்கள், நடிப்பு  தான் நாடகத்தில் நாடி.

    அறிமுகம் :
    இவன் தாங்க பில்லா. கதையோட கருப்பு நாயகன். இல்லையில்ல கதாநாயகன்.

    DSP( ஜிப் போட மறக்காத )
    பெயர்  தெரியவில்லை( பில்லாவுக்கு கைப்புள்ள )
    ஜேஜே ( என்ன கொடும சார் இது )

    இவங்க எல்லாரும் கொஞ்ச நேரம் மொக்கைய போட்டதுக்கு அப்புறம் ,

    இதோ இந்த பன் சாப்பிடுகிறவரை பில்லா கொன்று விட திரைக்கதையில் சூடு பிடிக்கிறது. ( அடுத்து என்ன என்று நடிப்பவர்கள் உள்பட அனைவரும் குழம்ப )

    ஒரு குத்து பாட்டு…

    பாட்டு முடியவும் காவலர்களால் பில்லாவின் ஆட்டம் முடிந்தது.
    பின்பு , புதிய பில்லா உதயமாகிறான்.

    புதிய பில்லாவுக்கு ஜாம் வகைகளை பற்றி கற்றுத்தரும் DSP என்ன பண்றார்னு நீங்களே பாருங்க.( படத்த கிளிக் பண்ணி பாக்காதீங்க )

    எல்லாவற்றையும் பில்லாவுக்கு கற்று கொடுத்துவிட்டு,
    DSP :  என்ன பில்லா , ஜாம் எல்லாம் புரிஞ்சுதா ?
    Billa : எல்லாம் முடிஞ்சுது.

    பல அரியர்களுக்கு பின் பயிற்சியில் தேறிய பில்லா இந்த டீக்கடையின் முன்பு தன் நினைவை இழந்த பில்லாவாக கடத்தல்காரர்களிடம் சேர்கிறான்.
    (சத்தியமா இது டீ கடைதாங்க.அவர் டீ  தாங்க ஆத்துறார்.)

    இவ்வாறு நகரும் கதையில் ஒருநாள்,
    வேவு பார்க்கும் பில்லா DSP’யிடம் பேசுவதை சக கடத்தல் மன்னன் டக்டீஸ் பார்த்து விட, பில்லாவுக்கு தெரியாமல் DSP’யை கடத்தி வைத்து துப்பாக்கிமுனையில் பில்லாவை மிரட்டுவார் டக்டீஸ்.

    DSP : டேய் துப்பாக்கி குறி வைச்சிருகுற இடம் சரியில்ல.

    கொஞ்ச நேர வசனத்துக்கு பிறகு நடக்கும் சண்டையில் கடத்தல் கும்பல் பிடிபடுகிறது.

    சுபமாக சுபமடைந்தது நாடகம்…

    நடிப்பு என்ற பெயரில் 20 நிமிடங்கள் கொடுமை படுத்தியவர்கள் :
    பில்லா                                                    ஜான் வில்லியம் ராஜ்
    பில்லாவின் தோழன்                             பூபால அருண் குமரன்
    பில்லாவின் தோழி                                பிரவீன்
    காவலர்                                                   டல்ஹோசி பிரபு
    சக கடத்தல் மன்னன்                             இசக்கி முத்து
    அடியாள் 1                                               கண்ணன்
    அடியாள் 2                                               ரூபன்
    அடியாள் 3                                               வைரவன்
    பன்  சாப்பிடுபவர்                                   சுப்பையா கணேஷ்
    காவலரை பிடித்து வைத்திருப்பவர்     ரவி பாலன்
    டீ கடை முதலாளி                                  விஜய குமார்

    மேலும் சில காட்சிகளின் நிழல்ப்படங்கள் :

     

    நன்றி…