Author: boobalaarun

  • பெண்ணின் பெருமை

    மாதராய் இவ்வுலகில் பிறந்திட

    மாதவம் செய்திட வேண்டும்

    பாரதியின் வாக்கு பொய்மையில்லாதது.

     

    பெண்ணுக்கு நிகர்

    பெண்ணே அன்றி

    இவ்வுலகில் எவருமிலர் !

    Mother Love_1

    என் தாயே,

    மாதராய் பிறக்க மாதவம் நீ செய்தாய்

    உனை அன்னையாய் பெற மாதவம் நான் செய்தேன்

     

    கருவுற்ற காலம் முதல்

    உருபெற்ற காலம் வரை

    உன் வயிற்றில் எனை சுமந்தாய்

     

    தரை தொட்ட காலம் முதல்

    நடை கொண்ட காலம் வரை

    உன் இடுப்பில் இடம் தந்தாய்

     

    நான் பிறக்கும் முன்பே

    என் மீது காதல் கொண்டவள் நீ !

    நான் இறக்கும் வரை

    அதை மறக்கவே மாட்டேன் !

    Mother Love_2

    தாயே,

    பெண்ணை பெருமை என்று சொல்ல நீயே ஒரு சாட்சி !

     

    தியாகத்தையே தொழிலாக கொண்டாய் !

    அர்பணிப்பையே வாழ்க்கையாக்கினாய்!

     

    பெண்ணின் கனிவு இன்றி

    உலகுக்கு உருளகூட தெரியாது!

    பெண்கள், உலகின் கண்கள் என்ற வர்ணிப்பு

    வெறும் வார்த்தையில்லை

    நியதி !

     

    காலங்கள் கரைந்தோடினாலும்

    பெண்ணின் பெருமை உலகில் பொறிக்கப்படும்

    முத்து மகுடங்கள் !

    Mother Love_4

    தாய்மையின் பிறப்பிடமே பெண்தான்

    தயவின் தாயகம் பெண்தான்

     

    நீரின்றி அமையாது உலகு

    ஆம்,

    நீரின் நவரசங்களையும் கொண்டவள் பெண் மட்டும் தான்

    நீரின்றி அமையாது உலகு !

     

    பெண் தெய்வங்களை வழிபடும் நம் பண்பாடு

    வெண் நிலவில் வரும் தேய்மானம் என

    கண் இன்றி பல கயவர்கள் கத்தினாலும்

    விண் உலகமே வியக்கும்படி

    தன் முனைப்புடனே முன்னேறும்

    பெண் இன்றி அமையாது உலகு !

     

    ஆயிரம் சூரியனின் வெளிச்சம் கொண்டவள் பெண்.

     

    பிறப்பெடுக்கும் ஒவ்வொரு உயிரும்

    பெண்ணின் பெருமையை

    உலகே வியக்கும்படி எடுத்துரைக்கும்

    ஒரு எடுத்துகாட்டு தான்…

    Mother Love_3

    பெண் இன்றி அமையாது உலகு !

    பெண் இன்றி அமையாது உலகு !

    பெண் இன்றி அமையாது உலகு !

    This work is licensed under a Creative Commons license.
  • பழனி-திருப்பதி

    தொடர்ந்து இரு மொட்டைகள் போட்டதை நினைவுகூறும் வகையில் மொட்டை தலையுடன் இந்த பதிவை எழுதுகிறேன்.

    1. பழனி ஆண்டவனுக்கு. (ஏப்ரல் 14, 2012)

    மொட்டை போட்டபின் மொத்த படியையும் நடந்தே கடந்து சென்றோம் நானும் என் நண்பன் தங்கபாண்டியனும். எல்லா படியையும் கடந்து “அப்பாடா முடிஞ்சிபோச்சிடா” என்று புலம்பியபடி போய் உக்கார்ந்ததை நண்பன் உலகத்துக்கு காட்ட எடுத்தது தான் இது. அப்புறம் இவன்தான் தங்கபாண்டியன்.

    WiNnY-0062ThangaPandi

    பழனி ஆண்டவரின் ராஜஅலங்காரத்தை பார்த்த கையோடு இருவரும் எடுத்துகொண்ட புகைப்படங்கள்…

    WiNnY-0069

    WiNnY-0068

    ( கையில் இருப்பது பஞ்சாமிர்தம் , யாருக்காவது வேணுமா , ஹி ஹி ஹி… )

    WiNnY-0078WiNnY-0079

    அடுத்து,

    2. திருப்பதி ஏழுமலையானுக்கு. (செப்டம்பர் 8 – 9, 2012)

    செப்டம்பர் 8”ம் தேதி மதியம் ஒரு மணிக்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து கிளம்பி 10”ம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கே வந்தடைந்தேன்.

    நானும் என் நண்பர்கள் நால்வரும் சென்றோம். கீழ் திருப்பதி சென்றடையவும் பவர் இன்று மொபைல் மயக்கமானது. ஆகவே ஒரு போட்டோ கூட எடுக்க முடியவில்லை.

    நாலாயிரம் படிகளை பாதங்களால் 3:30 மணி நேரத்தில் கடந்து சென்று, முடியை காணிக்கையாக்கிட டோக்கன் வாங்க வேண்டும், ஆனவே டோக்கன் வாங்க 4:00 மணி நேரம். முடிக்கு முழுக்கு போட ஒரு மணி நேரம்.

    வெங்கடேஷ்வரரை காண காத்திருப்பு 7 மணி நேரம். எல்லாம் முடித்து லட்டு வாங்க ஒரு மணி நேரம்…

    பின்பு,

    பாபநாசம் சென்று அங்கே ஒரு ஸ்டுடியோவில் ஒரு புகைப்படம். பின்பு ஊருக்கு திரும்பும் படலம்…

    Boobalan,Rajesh VR,Yathursan,Rajesh M

    போட்டோவில் இருப்பது பூபாலன், ராஜேஷ் VR, யதுர்சன், ராஜேஷ் M.

    This work is licensed under a Creative Commons license.
  • திருச்செந்தூர் பயணம்

    பழைய மாணவர்கள் சங்க சந்திப்புக்கு பின் திருச்செந்தூர் சென்றோம். அதன் நினைவுகளை சற்று இங்கே தெளிக்கிறேன்.

    பழைய மாணவர்கள் சந்திப்புக்கு பின் உவரி செல்வது வழக்கம். ஆனால் தற்போது திருச்செந்தூர் என்று முடிவானது.

    ஜான், நான்(பூபாலன்), அசோக், டல்ஹௌசி, வைரவன், ராம் குமார்.. தயாரானோம்.

    ஜான், அசோக், டல் மூவரின் பைக்கில் நான், வைரவன், ராம்குமார்.

    Nice (1)Nice (2)

    ஜானும் நானும் நாசரேத் சென்று அங்கே ஜானின் அலுவலத்தில்(WI5 இணைய வழங்குனர்) கொஞ்சம் வேலைகளை முடித்துவிட்டு பின் திருச்செந்தூர் சென்றோம்.

    நாங்கள் இருவரும் செல்லும் முன் அங்கே மற்றவர்கள் சென்று இருந்ததால் கிட்டதட்ட முப்பது முறைக்கும் மேலாக எங்கே இருக்கிறீங்கள் என்று கேட்டுகொண்டு இருந்தனர்.

    Nice (6)Nice (7)Nice (5)

    Nice (8)

    பின்பு கொஞ்சநேர கடற்கரை உலாவுக்கு பின் டல்ஹௌசியும் வைரவனும் கடலின் அலைகளோடு மூழ்கி எழுந்தனர்.

    Nice (16)

    அதற்குள் ஜான் “வீட்டுக்கு போகணும், அப்பா அடிப்பாங்க” என்று கெஞ்சினான். “சரி, பத்திரமா போய்ட்டு வா” என வழியனுப்பி வைத்தோம்.

    Nice (18)Nice (10)

    அதன்பின் டல்ஹௌசி,வைரவன் முருகனை சந்தித்து வந்தனர். இருவரும் வரும்முன் நாங்கள் மூவரும் சில கடைகளுக்கும் புகுந்து வேட்டை ஆடினோம்.

    Nice (22)Nice (24)Nice (28)

    ஐவரும் சந்திக்கும் போது மாலைமலர் செய்திதாள் படித்துகொண்டு இருந்தனர் அங்கு சிலர். தற்போது இரு பைக் மட்டுமே உள்ளது. ஆனால் ஐந்து பேர்…

    இருந்தாலும் திசையன்விளை வந்து சேர்ந்துவிட்டோம். வந்து பார்க்கும்போது தான் தெரிந்தது நம்ம ஜான் ஒரு போட்டோவுக்கு கூட போஸ் குடுக்கல. அதான் கல்லூரிவிழாவில் நடித்த நாடகத்தில் இருந்து ஒரு காட்சியில் பில்லா-வாக ஜான்…

    DSC_1759

    வலப்பக்கம் பில்லாவை மிரட்டுபவர் போலீஸ் ஆபீசர் டக்டீஸ் (எ) டல்ஹௌசி பிரபு.

    மதியநேரத்தில் கொம்மடிகோட்டையில் இருந்து திருச்செந்தூர் வரும்போது குலசை பாதையையும், மாலைநேரத்தில் உடன்குடி பாதையையும் உபயோகித்தால் காவலர்களுக்கு தண்டம் கட்ட தேவை இருக்காது.

    (திருச்செந்தூர் பலமுறை சென்றிருந்தாலும் இந்தமுறை பெற்ற அனுபவம் இதுதான்)…

    This work is licensed under a Creative Commons license.
  • தனித்தன்மையான குறும்படங்கள்

    நான் ரசித்த குறும்படங்களில் சிலவற்றை இங்கே பகிர்கிறேன்.

    ஒவ்வொரு குறும்படமும் தனித்தன்மை கொண்டது.

    ஒரு புதிய தாக்கத்தை நிச்சயம் உங்களுக்குள் உண்டாக்கும்.

    பாருங்கள், ரசியுங்கள்…

    உண்மையான படைப்பாளிக்கு உங்கள் வாழ்த்துக்களை மனதின் மூலமே சொல்லுங்கள்…

     

    புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்

    [youtube=http://www.youtube.com/watch?v=-6CnoKiD9NE]

     

    தர்மம்

    [youtube=http://www.youtube.com/watch?v=oPZTjdzS1-s]

     

    பண்ணையாரும் பத்மினியும்

    [youtube=http://www.youtube.com/watch?v=wy6hPKtf1NI]

     

    மீண்டும் சந்திக்கலாம்.

    என்றும் தீராத நட்புடன்

    பூபால அருண் குமரன்.ரா

  • Alumni Meeting – 2012

    வணக்கம் நண்பர்களே,

    ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15”ம் தேதி கொம்மடிகொட்டை கல்லூரியில் பழைய மாணவர்கள் சந்திப்பு நிகழும். அங்கே எடுத்த சில புகைப்படங்களை பகிர்கிறேன்.

    Alumni2012 (2)

    Alumni2012 (3)Alumni2012 (4)

    Alumni2012 (5)Alumni2012 (8)

    Alumni2012 (6)Alumni2012 (7)Alumni2012 (15)

    Alumni2012 (14)

    Alumni2012 (10)Alumni2012 (11)

    Alumni2012 (12)Alumni2012 (13)

    Alumni2012 (1)

    பழைய மாணவர்கள் சந்திப்பை முடித்துவிட்டு திருச்செந்தூர் சென்று வந்தோம். அடுத்த பதிவில் அந்த புகைப்படங்களை காணலாம்…

    This work is licensed under a Creative Commons license.
  • Alumni – 2012

    வணக்கம் நண்பர்களே,

    பழைய மாணவர்கள் சந்திப்புக்காக வரும் ஆகஸ்ட் மாதம் 15”ம் நாள் நம் கல்லூரிக்கு வருமாறு SJSC மாணவர்கள் அனைவரையும் கேட்டுகொள்கிறோம்.

    Banner1

    Banner2

    நண்பர்களே ஆகஸ்ட் 15”ல் நம் கல்லூரியில் சந்திப்போம்…

    This work is licensed under a Creative Commons license.
  • முதல் படி

    12”ம் வகுப்பு படிக்கும்போது பள்ளி குறிப்பேட்டில் கடைசி பக்கங்களில் எழுதிய சில பதிவுகளை இங்கே பதிப்பதில் மகிழ்கிறேன்.

    $$$—–****——————————(((((__________^^**^^__________)))))——————————****—–$$$

    படிப்பு

    ஒவ்வொருவரின் வாழ்விலும்

    முதல் படி !

    புத்தகத்தின்

    எதிர்முனையில் “படி”யெனில்

    பாழாய் போகும் “படி”ப்பு !

    *** அட, அட, அட, தத்துவத்த பிழியுறான்யா ***

    $$$—–****——————————(((((__________^^**^^__________)))))——————————****—–$$$

    விளையாட்டாய்

    பொழுதை கழிக்க விரும்பாத

    விமர்சகர்களுக்கும் ;

    படிக்க முடித்தும்

    படிக்காதவர்களுக்கும் ;

    சப்தமில்லாமல்

    சலனமில்லாமல்

    புத்தகத்தை திருப்பி

    மூளையை வளர்க்க

    ஆயிரமாயிரம் நூல்களை

    அடுக்கி வைத்துள்ளது

    நூலகம் !

    ஒருமுறை வாயேன் என் வருங்காலமே !

    $$$—–****——————————(((((__________^^**^^__________)))))——————————****—–$$$

    காணும் உலகம் உன் கண்முன்

    பிறகேன்

    வாழ நடுக்கம் !!

    வாழ்க்கை யாருக்கும்

    வாழ தடை சொல்வதில்லை !!

    ரகசியங்கள் பாதுகாக்கப்படலாம்

    லட்சியங்கள் ???

    $$$—–****——————————(((((__________^^**^^__________)))))——————————****—–$$$

    படைத்த வன்சில குறிப்பு

    வடித்தி ருக்கஅ தன்படி

    கிடைத்த வன்பல அனுபவிக்

    கிறானெ னவே நான்கூற

    தடையில் லாவுலகை யுருவாக்

    குவமே யென்று ஒன்றுசேர

    எடைமிகு வீரமாய் இளைஞர்

    பலர் வரவே வெற்றி !!!

    *** இரண்டாம் எழுத்து ஒன்றாய் அமைந்த மரபுக்கவி எழுத சிறுமுயற்சி ***

    $$$—–****——————————(((((__________^^**^^__________)))))——————————****—–$$$

    * இளைஞனின் ஏக்கம் *

    உண்மை கூறதயக்க மில்லை

         எந்த பிறவியிலும் தான்;

    கண்முன் நடக்கும் அநீதிக்கு

         தீர்வு கேட்டுநா நலைந்தேன்;

    யாரையென் றுகேட்டீரோ அவரே

         இவ்வூர் மேன் மக்கள்;

    தேரையே தந்தான் பாரி,

         தீர்ப்பு இல்லை இவ்வூரில்.

    ஊரை விட்டு ஓடலாம்

         உண்மை வாழ்வு வாழவே;

    தாரைத் தாரையாய் கண்ணீரே

         ஊரை விடும் ஏக்கமோ?

    இனிதான் உலகை உருவாக்க

         முனைந்து நின்று படவேண்டும்;

    இனிமை கிடைக்கும் அதன்பின்னே

         துன்பம் போக்கி சிரிப்போம் !!!

    *** இரண்டாம் எழுத்து ஒன்றாய் அமைந்த மரபுக்கவி எழுத அடுத்த முயற்சி ***

    $$$—–****——————————(((((__________^^**^^__________)))))——————————****—–$$$

    இறப்பு மனிதனின் பிறப்புரிமை, எய்ட்ஸ் ???

    $$$—–****——————————(((((__________^^**^^__________)))))——————————****—–$$$

    வாழ்வை முடிக்க

    மனமின்றி

    நாளை முடிக்கும்

    மனிதரிடை

    வாழும் மனிதனாய்

    நானிருக்க விரும்பவில்லை !!!

    தீராத நட்புடன்

    பூபால அருண் குமரன்.ரா

    This work is licensed under a Creative Commons license.
  • என் அவள்

    ஓவியம் தீட்டிய

    தூரிகை

    அவள் புன்னகை !

    காவியம் கூறும்

    கவிதை

    அவள் பார்வை !

    அவள் சுவடுகள் பதித்து சென்றது

    பாதையில் இல்லை

    என் மனதில் !

    ஒரே ஒரு பார்வை

    எனக்குள் ஏதோ ஒரு மாற்றம் !

    வெறும் கண்ணசைவுக்கு

    கலவரப்படுத்தும் சக்தி !

    இத்தனை நடந்தும்

    பார்வைக்காக

    பாதம் தொடரும் நான்…

    தீராத நட்புடன்

    பூபால அருண் குமரன்.ரா

    This work is licensed under a Creative Commons license.
  • பொங்கல் – கொண்டாட்டம்

    பள்ளி தோழர்களுடன் 2012ம் ஆண்டு பொங்கல் நிறைவாய் நிறைவடைந்தது.

    பொங்கல் தினத்தை பற்றிய ஒரு சின்ன அலசல்…

    PONGAL (24)

    காலை வீட்டின் பொங்கலை கொண்டாடிவிட்டு ஒன்பது மணியளவில் வேளச்சேரி புறப்பட்டேன். வழியில் பொங்கலை கோலங்கள் தெருவை அலங்கரித்திருந்தது.

    PONGAL (1)

    PONGAL (3)

    வேளச்சேரியில் கொஞ்சம் காத்திருப்புக்கு பின் ஆதித்தன் தன் இருசக்கர மோட்டார் வாகனத்தில் வந்தான். அவனுடன் தி.நகர் நாராயணர் கோயிலுக்கு பயணம். (ஆதித்தனுக்கு கோயில் நிர்வாகத்துடன் எதோ வேலை இருந்ததால் அங்கு சென்றோம்).

    PONGAL (7)

    அப்படியே தரிசனத்தை முடித்துக்கொண்டு பிரவீன் அறைக்கு சென்றோம்.

    அறையில் வழக்கமாக தங்கி மற்றும் தாங்கி நிற்கும் ஊர்தலைவர் இதயகுமார் அவர்கள் தங்களது அலுவல் காரணமாக நைசாக பொங்கலை கொண்டாட சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.

    sanmugaidhyam

    அதே போல பொட்டல்காட்டை ஊராக மாற்றி அதை உலகம் என்று சொல்லை ஊரை ஏமாற்றிகொண்டு இருக்கும் அண்ணன் சண்முகசுந்தரம் அவர்களும் ஊருக்கு சென்றுவிட்டார்.

    இப்பொது அறையில் மிஞ்சி இருப்பது பிரவீன், மோகன் மட்டுமே. அவர்களை அறைக்கு சென்றடைந்த போது அங்கே நசீர் அவர்கள் வந்து விட்டார். (ஆச்சரியம், ஆனால் உண்மை)

    PONGAL (40)

    பின் பிரவீன் அவர்கள் பொங்கல் பொங்கும் சிறப்பான வேலையை ஆரம்பித்தார். இனிதே பொங்கல் பொங்கியது. இறைவனுக்கு படைத்தோம். நாங்களே சாப்பிட்டோம்.

    PONGAL (8)PONGAL (9)PONGAL (10)PONGAL (12)PONGAL (13)PONGAL (14)PONGAL (15)PONGAL (16)PONGAL (30)PONGAL (31)

    பொங்கல் வயிற்றில் தஞ்சம் புகுந்ததும் மதிய உணவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் மும்முரமாய் நடைபெற்றது.

    ஒரு வெங்காயத்தை உரிக்க பட்டபாடு எனக்குதான் தெரியும் என்று புலம்பிய படி நான் இருக்க, அம்புட்டு வெங்காயத்தையும் அரை நொடியில் வெட்டி எறிந்தான் பிரவீன். காதலியின் விரல்நகத்தை வெட்டுவது போல தக்காளியை கொஞ்சி கொண்டிருந்தான் மோகன்.

    இப்படியாக போய்கொண்டிருக்கும் போது கல்குறிச்சி சிங்கம் முருகராஜா அவர்கள் அறைக்கு வந்தார். இவரை தொடர்ந்து என் கல்லூரி நண்பன் , வாலிபால் கேப்டன் பிரவீன் அவர்களின் பள்ளி எதிரி ரவிபாலன் அறைக்கு வந்தான். ( பொண்ணு கைய புடிச்சி இழுதியா, என்ன கைய புடுச்சி இழுதியா)

    PONGAL (41)

    மதியஉணவு தயாரானது. உணவுக்கு பின் நண்பர்கள் அனைவரும் 35வது புத்தக திருவிழாவுக்கு செல்ல தயாரானோம்.

    தங்க கம்பி மோகன் அவர்கள் வர மாட்டேன் என்று முதலில் அடம் பிடித்தார். பின்பு நாங்கள் அனைவரும் வற்புறுத்திய காரணத்தால் கோபத்தில் ஊர்தலைவர் இதயகுமார் பஞ்சாயத்துக்கு போவதற்காக மடித்து பத்திரமாக வைத்திருந்த அவரது துணிமணிகளை தூக்கி எறிந்தார். அவரை எப்படியோ சமாளித்து சம்மதம் வாங்குவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. (எனக்கென்னமோ உம்மேலதான் சந்தேகாமா இருக்கு…, பெருசு இந்த பஞ்சாயத கலைக்க பட்டபாடு எனக்குதான் தெரியும்,தேவையில்லாம சிறுத்தைய சுரண்டி பாக்காத.. போ.போ…போ… )

    PONGAL (42)PONGAL (43)PONGAL (44)PONGAL (45)

    பச்சையப்பா கல்லூரி எதிரில் அமைந்திருக்கும் செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் புத்தகவிழாவுக்கு வந்தடைந்தோம்.

    PONGAL (46)

    உள்ளே சென்று புத்தகங்களை பார்வையிட்டுக்கொண்டு இருக்கும் போது தோழர் நிருபன் அவர்களை எங்களுடன் இணைந்தார். நானும் நிருபனும் சுற்றய சுற்றில் இரு திரைப்படங்களும் ஒரு புத்தகமுமாய் வெளியே வந்தோம்.

    PONGAL (52)

    (இவுரு எப்பவுமே இப்படி தான் போஸ் குடுப்பாரு, பயபாடாதீங்க)

    மற்றவர்கள் எங்களுக்கு முன்பாகவே வெளியே நடைபெற்றுகொண்டிருந்த வினாடிவினா போட்டியில் கலந்து கொள்வதற்காக குறுஞ்செய்தி அனுப்பியுள்ளனர். அதன் மூலம் ஆதித்தனை மேடைக்கு செல்ல அழைத்தனர். மேடைசெல்லாமல் இருந்ததால் ஆதித்தனுக்கு பதிலாக நான் மேடைக்கு ஆதித்தன் என்ற அடையாளத்தோடு சென்றேன்.

    பதில் தெரியாத கேள்விகளுக்கு கூட்டத்தோடு கோவிந்தா போட்டு ஒரு ஆடை ஆறுதல் பரிசாக பெற்றேன். ( இதெல்லாம் ஒரு பொழப்பு )

    PONGAL (53)PONGAL (54)PONGAL (55)PONGAL (56)

    மோகனின் நண்பன் ஒருவன் அறைக்கு வந்திருப்பதாக வந்த செய்தியால் மோகன் அறைக்கு சென்று விட்டான். பின்பு ஏனையவர்கள் அனைவரும் சென்ற இடம் ஸ்கைவாக்.

    PONGAL (58)

    பிரமாண்டமான பொங்கல் பானை வரவேற்றது. சும்மா சுற்றி பார்த்துவிட்டு கே.எப்.சி.குள் நுழைந்தோம். ஆதித்தனும் நசீரும் ஸ்பான்சர் செய்ய, பொங்கல் அதுவுமாய் சில கோழிகளின் கால்களை விழுங்கினோம். அரை நொடியில் ஆயிரம் ரூபாய் ஏப்பமாய் போனது. # கழுத விடு, ஒரு நாளைக்கு தானே…

    PONGAL (57)

    மறுநாள் முதல் இயந்திரமாய் அலுவல் தொடர அவரவர் வீட்டுக்கு சென்றோம்.  இவ்வாறாக பொங்கல் தினம் இனிமையாக நிறைவுக்கு வந்தது…

    :: பொங்கல் கொண்டாட்டத்துக்காக செல்லும் வழியில் கிளிக்கியவை ::

    பொங்கல் அன்று மட்டுமாவது பசிக்காமல் இருந்தால் இவர் யாரோ ஒருவரது வீட்டு வாசலில் தன் பொங்கலை கொண்டாட காத்திருந்திருக்க மாட்டார்.

    PONGAL (2)

    சூரிய பகவானிடம்  ஆசீர்வாதம் வாங்கியபடி பொங்கலை தன் கனவில் கொண்டாடி கொண்டிருக்கும் வேளச்சேரி மூதாட்டி,

    PONGAL (4)PONGAL (5)

    பொங்கல் அன்றும் நான் ஒரு கவர் அமெளண்ட் எம்ப்ளாயி தான். #பேருந்து ஓட்டுனரின் பொங்கல்

    PONGAL (6)

    பொங்கலில் எடுத்த அனைத்து நிகழ்படங்களையும் பார்வையிட ::  இங்கே.

    அனைத்து நிழற்படங்களை பார்வையிட ::  இங்கே அல்லது இங்கே.

    தீராத நட்புடன்,

    பூபால அருண் குமரன் ரா

  • டோரென்டில் உள்ள வில்லங்கம் – Part 2

    டோரென்டில் உள்ள வில்லங்கம் என்ன என்பதை :: இங்கே :: தெரிந்திருப்பீர்கள். அதில்  இருந்து நம்மை காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்.

    µTorrent”க்கான  வழிமுறை இங்கே தமிழில்,

    1. உங்கள் டோரென்டில் Options > Preferences > Advanced என சென்று ipfilter.enable என்பதை கண்டுபிடித்து TRUE என கொடுத்து OK’வும் கொடுக்கவும்.

    2.  Start >> Run என சென்று %AppData% என கொடுத்து OK கொடுத்து, uTorrent க்குள் செல்லவும்.

    3. அங்கே ipfilter.dat என்ற ஃபைல் இருக்கிறதா என பாருங்கள், இல்லையேல் நீங்கள் இன்னும் வில்லங்கத்தில் தான் இருகிறீர்கள் என அர்த்தம். அப்படியே ஃபைல் இருந்தாலும் அதை அப்டேட் செய்யவில்லை என்றாலும் வில்லங்கமே.

    4. அப்புறம் :: இங்கே :: கிளிக்கி ஃபைலை டவுன்லோட் செய்யவும்.

    5.  உள்ளே இருக்கும் ipfilter_setup.exe’ஐ நிறுவவும். தற்போது உங்கள் Desktop”ல் உள்ள ShortCut”ஐ திறக்கவும்.

    6. அதன் Option”ல் “use a custom blocklist from a differnt URL (set Url below)” என்பதை தேர்வு செய்து http://list.iblocklist.com/?list=bt_level1&fileformat=p2p&archiveformat=gz என்பதை கீழே உள்ள பெட்டியில் கொடுங்கள்.
    ஆனால் பிற்பாடு நீங்கள் அப்டேட் செய்ய http://www.iblocklist.com/lists.php என்ற முகவரியில் கிடைக்கும் IPBlock List”ஐ கீழே தோன்றும் பெட்டியில் கொடுக்கவும்.

    7. மற்றவைகளை உங்கள் விருப்பப்படி தேர்வு செய்யுங்கள்.

    8. உங்கள் டோரென்டை RESTART செய்யவும்.

    நீங்கள் செய்தது சரிதானா என்பதை அறிய µTorrent”னுள் Logger Tab”ல் “Loaded ipfilter.dat (222534 entries)” என்று இருக்க வேண்டும்.

     

    இங்கே 222534 IP’s Filter செய்யப்பட்டுள்ளது.

    µTorrent”க்கான  வழிமுறை போல சில வழிமுறைகள் கீழே :

    நம்மை நாமே காத்துக் கொள்ள வேண்டும். வாரம் இருமுறை அப்டேட் செய்யுங்கள்..

    :: உபயம் ::

    1. http://ipfilterupdater.sourceforge.net/
    2. http://www.davidmoore.info/ipfilter-updater/
    3. http://www.davidmoore.info/2009/05/27/set-up-ip-filtering-in-utorrent-and-keep-your-ipfilterdat-up-to-date-easily/
    4. http://thepiratebay.org/torrent/6903759/ipfilter.dat


    தீராத நட்புடன் ,

    திருநெல்வேலி காரன்…

    …ஒவ்வொரு ஃபிரண்டும் தேவை மச்சான்…