கனவுகள் பல வந்தாலும் நீ இன்றி நான் காண விரும்புவதில்லை!
காணும் கனவினை நானே தேர்ந்தெடுத்து
கனவிலும் நிறைவாய் உன்னையே எண்ணிட
நினைவிலும் உன்னையே எண்ணுவேன் அன்பே!!!
கனவுகள் பல வந்தாலும் நீ இன்றி நான் காண விரும்புவதில்லை!
காணும் கனவினை நானே தேர்ந்தெடுத்து
கனவிலும் நிறைவாய் உன்னையே எண்ணிட
நினைவிலும் உன்னையே எண்ணுவேன் அன்பே!!!
பிறந்த குழந்தையின் உச்சிதனை போன்ற உன்
கரங்களை பற்றும் என் மனமே
விளமியோடு இசைந்து உணர்வோடு கலந்து
அளவிளாது மகிழ்ந்து ஆட்டம் போடுகிறது
The pregnant deer – A beautiful management story
In a forest, a pregnant deer is about to give birth.
She finds a remote grass field near a strong-flowing river.
This seems a safe place.
Suddenly labour pains begin.
At the same moment, dark clouds gather around above & lightning starts a forest fire.
She looks to her left & sees a hunter with his bow extended pointing at her.
To her right, she spots a hungry lion approaching her.
What can the pregnant deer do?
She is in labour!
What will happen?
Will the deer survive?
Will she give birth to a fawn?
Will the fawn survive?
Or will everything be burnt by the forest fire?
Will she perish to the hunters’ arrow?
Will she die a horrible death at the hands of the hungry lion approaching her?
She is constrained by the fire on the one side & the flowing river on the other & boxed in by her natural predators.
What does she do?
She focuses on giving birth to a new life.
The sequence of events that follows are:
– Lightning strikes & blinds the hunter.
– He releases the arrow which zips past the deer & strikes the hungry lion.
– It starts to rain heavily, & the forest fire is slowly doused by the rain.
– The deer gives birth to a healthy fawn.
In our life / business too, there are moments of choice when we are confronted on αll sides with negative thoughts and possibilities.
Some thoughts are so powerful that they overcome us & overwhelm us.
Maybe we can learn from the deer.
The priority of the deer, in that given moment, was simply to give birth to a baby.
The rest was not in her hands & any action or reaction that changed her focus would have likely resulted in death or disaster.
Ask yourself,
Where is your focus?
Focus should always remain on faith and hope!!!
Be Focus… And WiN the Race!!! 👌 👍
In the jungle which animal is the biggest ……..
I heard you say, Elephant.
In the jungle which animal is the tallest ……..
I heard you say, Giraffe.
In the jungle which animal is the wisest ……..
I heard you say, Fox.
In the jungle which animal is the fastest ……..
I heard you say, Cheetahs.
Among all these wonderful qualities mentioned, where is the Lion in the picture.?
Yet, you say the Lion is the KING of the jungle even without ANY of these qualities.
Why??
Because,
The Lion is courageous, the Lion is very bold, the Lion is always ready to face any challenges, any barrier that crosses his part, no matter how big they are.
The Lion walks with confidence. The Lion dares anything and is never afraid. The Lion believes he is unstoppable. The Lion is a risk taker. The Lion believes any animal is food for him. The Lion believes any opportunity is worth giving a try and never allows it slip from his hands. The Lion has charisma.
So
– What is it that we get to learn from the Lion .
• You don’t need to be the fastest.
• You don’t need to be the wisest.
• You don’t need to be the smartest.
• You don’t need to be the most brilliant.
• You don’t need to be generally accepted to become your dreams and be great in life.
• All you need is courage.
• All you need is boldness.
• All you need is the will to try.
• All you need is the faith to believe it is possible.
• All you need is to believe in yourself that you can do it.
It’s TIME to bring out The Lion in you.
தனது மாணவர்களுக்கு ஆசிரியை ஒருவர் கூறிய ஒரு கதை:
“ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க வசதியான படகு ஒன்று மாத்திரமே இருக்கிறது.
மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார். கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக….
இந்த இடத்தில் என்ன சொல்லியிருப்பார்???” என்று மாணவர்களை நோக்கி ஆசிரியை கேட்டார்.
எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்…..
“ஏம்பா நீ சைலண்டா இருக்க……”
‘நம்ம கொழந்தைய பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பாங்க டீச்சர்’
“எப்பிடிப்பா கரெக்டா சொல்ற, ஒனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா?”
‘இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி அப்பாக்கிட்ட இதையேதான் சொன்னாங்க…’
பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையை தொடர்ந்தார்.
தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது. தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது. கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார்.
‘ உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்… நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது’.
கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார்:
‘வாழ்க்கைல நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாத்துக்கும் காரணம் இருக்கும் ஆனா சில நேரங்கள்ல உங்களால் புரிஞ்சிக்க இயலாம போகலாம்.
அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா
புரிஞ்சிக்காமலோ யார் மேலயும் முடிவுக்கு வந்துடக்கூடாது.’
‘நம்ம ரெஸ்டாரண்ட் போனா, ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தா அவன் பணக்காரன் என்று அர்த்தமில்ல, பணத்த விட நம்ம நட்ப அதிகமா மதிக்கிறான்’ னு அர்த்தம்.
‘முதல்ல மன்னிப்பு கேக்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்ல, ஈகோவ(Ego) விட உறவ மதிக்கிறாங்க’ னு அர்த்தம்.
‘நம்ம கண்டுக்காம விட்டாலும் இருந்திருந்து நமக்கு கால் பண்றாங்கன்னா அவங்க வேல வெட்டி இல்லாம இருக்காங்கன்னு அர்த்தமில்ல, நம்ம அவங்களோட மனசில இருக்கம்னு அர்த்தம்’.
பின்னொரு காலத்தில நம்ம பிள்ளைங்க நம்மகிட்ட கேட்கும்,,,,,
‘”யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கல்லாம்???”‘
ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம் ‘ அவங்க கூடத்தான் சில நல்ல தருணங்கள நாம் கழிச்சிருக்கோம்’.
#வாழ்க்கை குறுகியது, #அழகானது,
#ஆழமானது…
தமிழர்களின் அளவை முறைகளை காணும் போது, நிச்சயம் மிக பெரியதொரு சாம்ராஜ்யம் கொண்டு வாழ்ந்து வந்துள்ளோம் என்பது தெளிவாக புரிகிறது.
இடைபட்ட காலத்தில்தான் ஏதோ நடந்து, நம் அளவைகளை மறந்து உலகமயமாக்களில் சிக்கி சின்னாபின்னமாகி நிற்கிறோம்
விக்கிபீடியாவில் ஏதோ வரலாற்று மியூசியத்தில் உள்ளதுபோல அளவைமுறைகள் வரலாற்று பதிவாகவே இருப்பது வேதனைதான் அளிக்கிறது…
பயன்பாட்டில் இல்லை என்றாலும் தெரிந்தாவது வைத்துக்கொள்ளுங்கள், நிச்சயம் ஒரு நாள் இவைகள் நமக்கு தேவைப்படலாம்
தமிழ் விக்கிப்பீடியா வழியே காண தமிழர் அளவை முறைகள்
PDF உருவில் காண (Updated 25th July 2016) தமிழர் அளவை முறைகள்
ராமன் வேசமிட்டிருக்கும்
பல ராட்சசனுக்கு
என்னை தெரியும்.
.
பெண் விடுதலைக்காக போராடும்
பெரிய மனிதர்கள் கூட
தன் விருந்தினர் பங்களா
விலாசத்தை தந்ததுண்டு.
.
என்னிடம்
கடன் சொல்லிப் போன
கந்து வட்டிக்காரர்களும் உண்டு.
.
சாதி சாதி என சாகும்
எவரும் என்னிடம்
சாதிப் பார்ப்பதில்லை.
.
திருந்தி வாழ நான் நினைத்தபோதும்
என்னை தீண்டியவர்கள் யாரும்
திரும்பவிட்டதில்லை.
.
பத்திரிக்கைகள் கூட
விபச்சாரிகள் கைது என்றுதானே
விற்பனையாகிறது..
விலங்கிடப்பட்ட ஆண்களின்
விபரம் வெளியிடாது ஏன்…?
.
பெண்களின் புனிதத்தை விட
ஆண்களின் புனிதம்
அவ்வளவு பெரிதா?
.
காயிந்த வயிற்றுக்கு
காட்டில் இரை தேடும்
குருவியைப் போல்
என்னை யாரும் பரிகசிக்கவில்லை.
.
கட்டில் மேல் கிடக்கும்
இன்னொரு கருவியைப் போலத் தான்
என்னை கையாளுகிறார்கள்.
.
நான் இருட்டில் பிணமாக மாறினால்தான்
பகலில் அது பணமாக மாறும்.
பின்தான்
என் குடும்பத்தின் பசியாறும்.
.
நிர்வாணமே என்
நிரந்தர உடையானதால்
சேலை எதற்கென்று
நினைத்ததுண்டு.
சரி
காயங்களை மறைப்பதற்கு
கட்டுவோம் என்று
கட்டிக்கொண்டு இருக்கிறேன்.
.
என் மேனியில் இருக்கும்
தழும்புகளைப் பார்த்தால்
வரி குதிரைகள் கூட
வருத்தம் தெரிவிக்கும்.
.
எதையும் வாங்க வசதியில்லாத
எனக்கு
விற்பதற்காவது இந்த
உடம்பு இருக்கிறதே!
நாணையமற்றவர் நகங்கள்
கீறி கீறி என்
நரம்பு வெடிக்கிறதே!
.
வாய்திறக்க முடியாமல்
நான் துடித்த இரவுகள் உண்டு
.
எலும்புகள் உடையும் வரை
என்னை கொடுமைப் படுத்திய
கொள்கையாளர்களும் உண்டு.
.
ஆண்கள்
வெளியில் சிந்தும் வேர்வையை
என்னிடம் ரத்தமாய்
எடுத்து கொள்கிறார்கள்.
.
தூறல் சிந்தாத வான் மேகமில்லை.
கீறல் படாத வேசி தேகமில்லை.
.
என்னை வேசி என்று
ஏசும் எவரைப் பற்றியும்
கவலைப்பட்டதே இல்லை..
.
ஏனெனில்
விதவை – விபச்சாரி
முதிர்கன்னி – மலடி
ஓடுகாலி – ஒழுக்கங்கெட்டவள்
இதில் ஏதேனும்
ஒரு பட்டம்
அநேக பெண்களுக்கு
அமைந்திருக்கும்.
இது இல்லாமல் பெண்கள் இல்லை.
எப்போதும்
இழிவு சொல் ஆண்களுக்கு இல்லை.
.
முதுமை என்னை
முத்தமிடுவதற்குள்
என் மகளை மருத்துவராய்
ஆக்கிவிட வேண்டும்.
என் மீது படிந்த தூசிகளை
அவளை கொண்டு
நீக்கி விட வேண்டும்.
.
இருப்பினும்
இந்த சமூகம்
இவள்
மணிமேகலை என்பதை மறந்துவிட்டு
மாதவியின் மகள் என்பதை மட்டுமே
ஞாபகம் வைத்திருக்கும்.
.
இறுதியாக
இரு கோரிக்கை.
.
என்னை
மென்று தின்ற ஆண்களே!
மனைவிடமாவது கொஞ்சம்
மென்மையாக இருங்கள்.
எங்களுக்கு இருப்பது
உடம்பு தான்
இரும்பல்ல.
.
என் வீதி வரை
விரட்டிவரும் ஆண்களே!
தயவு செய்து விட்டுவிடுங்கள்.
நான் விபச்சாரி என்பது
என் வீட்டுக்கு தெரியாது.
ஹக்குனா மாடாட்டா, என்ன அருமையான கானம்
ஹக்குனா மாடாட்டா, உற்சாகம் பொங்குமே….
கவலையேதும் இல்லை, தொல்லை இனி இல்லை
வாழ்வே ரொம்ப கூல், அடி செம தூள்
ஹக்குனா மாடாட்டா, ஏ…
ஹக்குனா
மாடாட்டா
டிமோன்
அண்ட் பும்பா
ஹக்குனா
மாடாட்டா
கவலையேதும் இல்லை, தொல்லை இனி இல்லை
வாழ்வே ரொம்ப கூல், அடி செம தூள்
ஹக்குனா மாடாட்டா, டிமோன் அண்ட் பும்பா