Author: boobalaarun

  • தேர்வு பயம் மறந்து போக …

    தேர்வு என்றால்  ஒரு பயம் இருக்கும் … ஆனால் இரண்டு பேர்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கு…

    ஒருவன்  எல்லாம் படித்தவன் … மற்றவன் ஒன்றும் படிக்காதவன் …

    அதிலும்  எல்லாம் படித்தவன் , தேர்வு முடிவு வெளியாகும் பொது சின்ன பயத்தை உணர்வான்.

    ஆனால் நம்மாளு , சின்ன கலக்கம் கூட இல்லாமல் கலக்கலாக இருப்பான்.

    ஏன்ன, நம்மாளு எழுதின பதில்களை பார்த்து ஆசிரியர்களே அரண்டுபோய் விடுவார்கள்…

    நீங்களும் பாருங்க…

  • நேர்முக தேர்வில் வெற்றி…

    இன்றைய இளைஞர்களின் ஒரே கவலை வேலை
    அது கிடைத்த பிறகு தான் மற்ற கவலைகள் . 

    நேர்முக தேர்வில் எவ்வாறெல்லாம் பேச வேண்டும் , நடந்து கொள்ள வேண்டும் என்று பல புத்தகங்கள் படித்து இருப்பீர்கள். பலர் கூற கேட்டும் இருப்பீர்கள்.

    வெற்றி யாரையும் எளிதில் வந்து சேர்வது இல்லை. வெற்றி பெற்றவர்கள் எல்லாம் பெரிய உழைப்பாளியும் இல்லை.

    தோல்வி  , வெற்றியின் முதல் படி என்று முட்டாள் தான் கூறுவான்.
    சின்ன சின்ன தந்திரங்கள் தான் வெற்றியின் முதல் படி.
    தோல்வி ஒருபோதும் தொடராது. வெற்றி என்றென்றும் நிலைக்காது.

    இதோ  ஒரு நேர்முக தேர்வு :  வெற்றி உங்களுக்கே!!!

    [youtube=http://www.youtube.com/watch?v=Xu25lUDJZgY]

    வெற்றி நிலைக்காது. தோல்வி தொடராது  —  அமைச்சர் இடிதாங்கி…

  • எப்படியும் வாழ(சாக)லாம் ?

    வணக்கம் நண்பர்களே ,

    புகை பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு _ இது எல்லாருக்கும் தெரியும்… இருந்தாலும் புகை பிடிக்கும்  பொ_ _போக்குகள்   புகை பிடிக்கத்தான் செய்கிறார்கள்…

    சிகரெட்டை பிடித்துக்கொண்டு சாலையோர புகைபோக்கியாக மாறி விடாதீர்கள்…

    புகையால் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஆபத்து என்பதை மறந்து வேண்டாம்.

    நான் தான் சிகரெட் பிடிப்பது இல்லயே என்று இருப்பதால் மட்டும் நன்மை இல்லை. சிகரெட் பிடிக்கும் நபர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது(சிகரெட்டை பற்ற வைத்ததில் இருந்து, அணைக்கும் வரையாவது).

    உயிர்க்கு உயிரான இரு தீக்குச்சிகள் நண்பர்கள் ஒரு வீட்டில் சாம்பல் ஆகின்றனர். இருவரும் ஜோடியாக எமலோகம்  செல்கின்றனர். அங்கே ஒரு குச்சி நரகத்திற்கும், ஒரு குச்சி சொர்க்கத்திற்கும் செல்கின்றது.

    ஏன் ?

    ஒரு குச்சி அந்த வீட்டில் உள்ள எல்லாருக்கும் ஒருநாள் உணவு அளித்தது.
    ஒரு குச்சி அந்த வீட்டில் உள்ள ஒருவனின் ஒருநாளை அழித்தது.

    அந்த எமனுக்கு தெரியவில்லை, குச்சிகள் எரியப்படவே உருவாக்க படுபவை என்று.
    ஒருநாள் தெரியவரும், மனிதர்கள் தான் எரிக்க பிறந்தவர்கள் என்று தன்னையும் பிறரையும்…

    “சிகரெட்டை பிடிக்க வேண்டாம்” என்பதை வலியுறுத்தி இந்தியாவில் எடுக்கப்பட்டு விருது வாங்கிய விளம்பரப்படம்…

    [vimeo http://vimeo.com/23531917 w=400&h=300]
    சிகரெட்  மனிதனை என்ன செய்கிறது , பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்

    [vimeo http://vimeo.com/23532112 w=400&h=300]

    நண்பர்களே  நீங்கள் சிகரெட்  பிடிப்பவர்  என்றால் அதை மறந்துவிடுங்கள்.
    இல்லையென்றால் மறக்கச் செய்யுங்கள்…

  • The Million Dollar Question…

    இந்த உலகத்தில் விடை இல்லாத பல கேள்விகள் உண்டு. அதே சமயத்தில் விடை அறிய முடியாத கேள்விகளும் உண்டு . ஆம் , அப்படிப்பட்ட விடை அறிய முடியாத கேள்வி தான் இது …

    1989 ல் எழுப்ப பட்ட இந்த கேள்விக்கு இன்று வரை யாராலும் விடை அறிய முடிய வில்லை.

    [vimeo http://vimeo.com/23532180 w=400&h=300]

    இந்த விடை அறிய முடியாத கேள்விக்கு பதில் உங்களிடம் உள்ளது என்றால் உடனடியாக தொடர்பு என்னை கொள்ளவும்…

  • நான் யார் ?

    விடுதலையின்  போது
    சிறைப்பட்ட
    கைதி நான் !
                                                                  சுதந்திரதின் போது 
                                                                  பறிக்கபட்டது 
                                                                  என் உரிமை !
    என்னை யார் என்று
    அறிமுகப்படுத்த  எனக்கு
    சந்தர்ப்பம் கொடுக்கவில்லை!
                                                                 ஆனால் அவர்களாகவே 
                                                                 பெயர் வைத்து விட்டார்கள் 
                                                                 அகதிகள் என்று !!!
    நட்பு  கூட பாராட்ட வேண்டாம் … பேதம் பார்க்காமலாவது  இரு…
  • மறவாத வாக்கியங்கள் …

     எல்லோருடைய  பள்ளிப்  பயணங்களிலும் மறக்க முடியாதபடி சில வாக்கியங்கள் , வார்த்தைகள் அல்லது பட்டப் பெயர்கள் அவரவர் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திடிருக்கும்.

    நெடுநாள் பிரிந்திருந்த நட்பின் பெயர் கூட மறந்து விடலாம். ஆனால் பட்டப் பெயர்கள் அல்லது அடிக்கடி பயன்படுத்தும் வாக்கியங்கள் போன்றவற்றை மறக்கவே முடியாது ..

    அதில் முக்கியமாக சொல்ல வேண்டியது ஆசிரியர்களின் அடிக்கடி பயன்படுத்தும் வாக்கியங்கள் தான் …

    (( திசையன்விளை ஸ்ரீ ராம கிருஷ்ணா மேல் நிலை பள்ளியில் படித்தவர்களுக்கு மட்டும்… மற்றவர்கள் உங்கள் பள்ளி வாழ்க்கையை  சற்று நினைவு படுத்திக்கொள்ளுங்கள் ))

     இதோ என் பள்ளி பயணங்களில் என்னால் , என்னால் மட்டுமல்ல என் பள்ளி தோழர்களாலும்
    மறக்க முடியாத சில ஆசிரியர்களின் வாக்கியங்கள் :::

    வீட்டுப் பாடம்(home work) செய்து வராத  மாணவர்களை பார்த்து எங்கள் கணித ஆசிரியை கூறும் வாக்கியம் :
    “”உங்களயெல்லா அடிச்சி கொல்லனுங்கிறே. உங்க மண்டையெல்லா அடிச்சி ஒடைகனுங்கிறே“”

    சமூக அறிவியல் பாடத்தில் நடத்தப்பட்ட தேர்வில் மதிப்பெண் குறைந்த மாணவர்களை மிரட்ட எங்கள் சமூக அறிவியல் ஆசிரியர் கூறும் வாக்கியம் :
    “”(இடது கையை காட்டி) இந்த கை’ல  அடிச்சா இந்த கை பன் மாரி(மாதிரி) போம்மிக்கும்.
    (வலது கையை காட்டி) இந்த கை’ல  அடிச்சா இந்த கை பன் மாரி(மாதிரி) போம்மிக்கும்… மொத்ததுல ரெண்டு கையும் உப்பிக்கும்.“”

    தமிழ் ஆசிரியை பாடம் நடத்தியபடி {[ வகுப்பு முடிவதற்கு 5 நிமிடத்திற்கு முன்பு தான் பாடத்தை நடத்த ஆரம்பிக்கும் நல்ல ஆசிரியை, முதல் 40 நிமிடம் பக்கத்துக்கு வீட்டு அக்க கதை ]} கூறும் வார்த்தை “” சரியாபோவ் “”( சரி தானே ).
    மேலும் ,
    ஆவேசத்தில் கூறும் வார்த்தை “” நா யாருக்கும் பயப்பட மாட்டேன். என் வழி தனி வழி“” ( Braveen Commend : ஆமா , போஸ்ட் ஆபீசிக்கு போற வழி )

    இயற்பியல் ஆசிரியர் கூறுவது “” சொக்கே , சொக்கணுவ “”( That means God Siva )

    கணிபொறி ஆசிரியை அடிக்கடி அடிக்கடி அடிக்கடி கூறும் வார்த்தை “” ச்ஸோஒ… ““( Special Thanks to Voice Expert Vicky )

    முக்கியமான ஒன்னு இத நா சொல்லியே ஆகணும் ….

    எங்கள் அறிவியல் ஆசிரியை பாடம் நடத்தும் போது கனவு காணும் மாணவர்களை பிடித்து கேட்கும் கேள்வி :
    “”உன் மனச தொட்டு சொல்லு , நீ என்ன நனைச்சிகிட்டு இருந்தா ?“”
    அல்லது ( சுவற்றில் தொங்க விடப்பட்ட இறைவனின் படத்தை காட்டி )
    “”இந்த படத்த பார்த்து சொல்லு, நீ என்ன நனைச்சிகிட்டு இருந்தா ?“”

     சரி , ஆசிரியர்களின் காமெடியை விடுவோம்,
    மாணவர்களின் அரட்டைக்கு வருவோம் …

    “”ஆழியாலா..ஆ… சின் குன் கா ..ஆ…. யங், மங், சங்…“”

    என்ன ஒன்னுமே புரியலையா…எனக்கு புரியல தான். ஆனா என் கூட படிச்சா எல்லாருக்கும் இந்த  வாக்கியம் அத்துபடி… இது ஒரு சீன படத்துல வர்ற வசனம். எங்கிருந்தோ வந்த ஒரு இரும்பு கம்பி, மாடியில் நின்று கொண்டிருக்கும் ஒருவனின் தலையில் விழுந்தவுடன் தலை சுற்றியபடி கூறும் வசனம் …இதை பார்த்து விட்டு பள்ளிக்கு வந்து இந்த வசனத்தை பிரபலபடுத்தியது பரம்ஸ் என்கிற பரமலிங்கம் …

    நண்பன் கேசவனை சமூக அறிவியல் ஆசிரியர் அழைக்கும் விதம் தான் இது :
    “”கேசவா நாராயணா கோவிந்தா கோ…விந்தா “” …

    கேசவன் என்று அழைப்பதை விட இது தான் நல்ல இருக்கு …

    சைனைட் என்ற சண்முக நாதன் .
    சின்ன டப்பா பிரவீன் .
    Legend killer , Bond killer , நமிதா தொப்பை ,இறைப்புவாரி, இடிதாங்கி , அலி , எர்  குட்ட , உருண்ட (( உருண்ட வருது, உருண்ட வருது, உருண்ட பாருங்கோ  )), மொட்ட … என்று  பல பெயர்களை மறக்க முடியாது …

    வாழ்கையின் எல்லை வரை வரும் பள்ளிப் பயணங்களின்  நினைவுகளுக்கு சமர்பிக்கிறேன்… I Miss My school Friends a Lot…! I miss you Guys…

    தொடர்பில் இல்லாத தோழமைகள் உங்கள் செல்பேசி எண்ணை உங்கள் பெயருடன் எனக்கு அனுப்பவும்…நட்புக்குள் பிரிவுகள் தேவை இல்லை …

  • வித்தியாசமான எண்ணங்கள் தான் உலகை ஆள்கிறது …

    BACKGROUND பயங்கரங்கள் …

    இப்படி ஒரு EXPRESSION காட்டுறேன் , பாக்காம போறாரு …

    ஓ,   இது தான் கூகுளா …?

    இப்படியும் லூசுங்க அலையுது இந்த உலகத்துல …

    உக்காந்து யோசிப்பாங்களோ …

  • நட்பு ஒரு …

    காலத்தின்  பாலம்  வழியே

    பாதைகள் மாறி பயணங்கள் பல போனாலும்

    ஒரு நாள் சந்திப்போம்…