About

பல வருடங்களுக்கு முன்பு, மே மாதம் ஒன்றாம் தேதி, தூத்துகுடி மாவட்டத்தில் பயங்கரமான கனமழை இரவு ஆரம்பம் ஆனது.

இரவு முழுவதும் மேகங்கள் ஆனந்தத்தில் கூத்தாடியது.
சிலர் பலரின் காதுபடவே பேசினார்கள் “ஏதோ அதிசயம் நடக்க போகுது போல” என்று.

ஆனால் அன்று எதுவும் நடக்கவில்லை. மறுநாள் உதயமானது. எந்த மாற்றமும் இல்லாத வழக்கமான ஒரு நாளாகவே சூரியன் உதயம் ஆனது.

அப்படிதான் வேப்பம்காடு என்ற கிராமத்திலும் நடந்தது.

மணித்துளிகள் எட்டை தொட்டதும் ஒரு குரல் “ஆ…..” என்று.

மொத்த கிராமமும் பதற்றம் அடைந்தது. குரல் இன்னும் வேகமாய் வந்தது.

தகவல் வேக வேகமாக பரவியது. அந்த சப்தம் உதயகுமார் மற்றும் செந்தாமரைச்செல்வி தம்பதியருக்கு பிறக்கபோகும் தேவதையின் வருகையின் அறிகுறி என்று.

வேப்பங்காட்டில் இருந்து ஒரு வாகனம் புயல் வேகத்தில் ஆறுமுகநேரி நோக்கி சீறி பாய்ந்தது. பாய்ந்த வாகனம் மருத்துவமனை வந்ததும் ஆறுதல் அடைந்தது.

காலை ஒன்பது மணி முப்பது நிமிடங்கள், வீல் என்ற மழலை மொழி அந்த மருத்துவமனை முழுவதும் படர்ந்தது.

அந்த குட்டி தேவதைக்கு “பிரமிளா” என பெயர் சூட்டி கொண்டாடினார்கள்.

ஒரு இருபத்து ஐந்து வருடங்கள் கடந்தது….

அந்த பெண்ணுக்கு மணாளனாகவும் நல்ல நண்பனாகவும் பூபால அருண் குமரன் அமைந்தான்.

அப்படிப்பட்ட அந்த கணவனின் சிறு அன்பு பரிசே இந்த வலைத்தளம்…